http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 92

இதழ் 92
[ பிப்ரவரி 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 39
Malayakkovil
தேடலில் தெறித்தவை - 1
சேய்ஞலூர்
Chola Ramayana 03
நெய்யுடை அடிசில்
இதழ் எண். 92 > இலக்கியச் சுவை
நெய்யுடை அடிசில்
ரிஷியா
பழந்தமிழர் உணவியல் வரலாற்றை ஆராயும்போது சீர்மிகு தமிழ்மண்ணில் மக்கள் பெரும்பாலானோர் மிகவும் சுவையுணவு மட்டுமல்லாது சத்துணவுப் பிரியர்களாகவும் வாழ்ந்துள்ளனர். அன்றைய தமிழகத்தில் நெய்ச்சோறு என்னும் நெய்யுடை அடியில் பெரும் வழக்காக மக்களிடையே அவர்களின் உணவுப் பழக்கத்தில் இருந்துள்ளது. இன்றோ, நெய்யுடை அடியில் என்பது வழக்கொழிந்துபோய்ப் போன உணவு வகைகளில் ஒன்றாகவுள்ளது.

தூய்மையான நெய்யினைச் சோற்றோடு கலந்து புழுக்கி சமைக்கப்படும் உணவிற்கு நெய்ச்சோறு அல்லது நெய்யுடை அடிசில் என்பது பெயராகும். சங்க இலக்கியச் சோலையில் இதற்கான தரவுகள் பரவலாக நமக்குக் கிடைக்கின்றன.

திருவிழா காணும் திருநாட்களில் சுற்றத்தார் பலரும் வந்துண்ணும் பொருட்டு திறந்த வாயிலை உடையனாய், பைந்நிணம் ஒழுகிய 'நெய்யுடையடிசில்' எனப்படும் நெய்ச்சோற்றினை மிகுதியாக விருந்தினர்க்குக் கொடுத்து மகிழ்ந்து எஞ்சிய மிச்சத்தை தலைவியுடன் உண்ணும் நினைவில் உவகை காண்கிறான் குறிஞ்சித் தலைவன் ஒருவன். நற்சுவைப் பாடல் இதோ,

'பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மரி அடிசில்
வகையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண் செஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும் புரைவது..'

(குறிஞ்சிப்பாட்டு; 204-207)

மேலும் ஒரு தரவு யாதெனில் தமிழரின் நனிச்சிறந்த பண்பான விருந்தோம்பலை அழகாய்ப் படம்பிடிக்கிறது இப்பாடல். விருந்தினர் உண்ட பிறகுதான் தலைவனும் தலைவியும் உணவு உட்கொள்வது எனும் உயரிய பண்பு.

மேலும்., நெய்ச்சோற்றினை குழந்தையானது தன் மேனியெங்கும் சிதறிட நடக்கின்றது. இப்படியாக நம் கண்முன்னே மழலையின் செயல் கொண்டு ஒரு புறநானூறு காட்சி விரிகின்றது.

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
(புறம் 400;188;4-5)

அன்றைய நாளில் சிறு குழந்தைகளுக்கு நெய்ச்சோறு ஊட்டும் பழக்கம் வழக்கில் இருந்துள்ளது என்பது பாடல் வரிகளின் வழி திண்ணம்.

மேலும் ஒரு புறநானூற்றுப் பாடல்

முதிர மலைத் தலைவனான குமணனின் பரிசில் சிறப்பு விளக்கும் காட்சிகளில் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்

'நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்..

(புறம் 400; 160;6-9)

இப்பாடல் கூறும் செய்தியானது 'பசியால் வற்றி உலர்ந்த குடல் குளிருமாறு தாளிப்புச் செய்யப்பட்ட கொழுந்துவைகளோடு கூடிய நெய்யுடை அடிசிலை திங்களை விண்மீன்கள் சூழ்ந்தாற்போல சிறு பொற்கலங்களில் பாடிவருவோரைச் சுற்றி இருத்தி...' குமணன் உபசரித்தான் என்று சொல்கிறது.

இவ்வாறு பல பாடல் குறிப்புக்களின் வழி சுவையான சத்தான நெய்ச்சோறு உண்ணும் பழக்கம் பழந்தமிழரிடத்தில் உணவியல் வழக்கில் பரவலாக இருந்துள்ளது. இன்றைய தமிழகத்தில் இதுத வழக்கொழிந்து மறைந்தே போய்விட்டது. தமிழர் உணவியல் வரலாறு என்பது கற்க வேண்டிய ஒரு சுவையான பாடமாக உள்ளது.

சிவப்பு மிளகாய், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், தக்காளி போன்றவையெல்லாம் மேல் நாட்டினர் நமக்கு விட்டுச்சென்ற மரக்கறி உணவு வகைகள். பாகல், புடலை , பீர்க்கை, அவரை எனப்படும் நாட்டுக் காய்களிகளை நாம் தவிர்க்கத் தொடங்கி நெடுநாட்களாகிவிட்டன. எத்தனையோ உணவுவகைகளை கால மாற்றத்தால் நம் அலட்சியத்தால் நாம் இழந்துள்ளோம் என்பதை நோக்கும்போது நெஞ்சம் வலி கொள்கிறது. மேல் நாட்டினர் உணவு வகைகளை கைக்கொண்டு நவீன நோய்களை வாங்கிக் கொள்ளாமல் வாழ நாம் தமிழர்கள் பழக வேண்டும்.

{சங்க காலச் சமையல் என்பதை இன்றைய தமிழகத்திற்கு தொலைக்காட்சி வழி நினைவூட்டி மறைந்த திரு செப் ஜேக்கப் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்பணம்}this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.