http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 17

இதழ் 17
[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கருத்தரங்குகள் - சில கருத்துக்கள்
பழுவூர் - 6
சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்
கல்வெட்டாய்வு - 12
ஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-3
சங்கச் சிந்தனைகள் - 5
இதழ் எண். 17 > கலைக்கோவன் பக்கம்
லால்குடி கல்வெட்டு

இவற்றுள் லால்குடி கல்வெட்டு முதலாம் பராந்தகனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்க, கல்வெட்டுத் தொகுதி பத்தொன்பதைப் பதிப்பித்த திரு. ஜி.வி. சீனிவாசராவ் இதைத் தவறாக உத்தமசோழனுடையது என்று குறித்துள்ளார்53. இக்கல்வெட்டால் குமரன் மறவன் இக்கோயிலில் விளக்கெரிக்க முப்பது கழஞ்சு பொன் தந்த செய்தி கிடைப்பதுடன் 'அடிகள் பழுவேட்டரையன் குமரன் மறவன்' என்று இப்பெருமான் சிறப்புடன் அழைக்கப் பட்ட நிலையும் தெரியவருகிறது.

திருப்பழனக் கல்வெட்டு

முதலாம் பராந்தகனின் ஆறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள திருப்பழனக் கல்வெட்டில் நந்தா விளக்கொன்று எரிக்கத் தீப்பாஞ்ச அழகியான் மறவன் என்பானோடு இணைந்து பழுவேட்டரையன் குமரன் மறவன் முப்பது கழஞ்சு பொன் தந்த செய்தி கிடைக்கிறது54.

திருவையாற்றுக் கல்வெட்டு

திருவையாற்றிலுள்ள பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பழுவேட்டரையர் நம்பி மறவனார் என்ற பெயர் காணப்படுகிறது55. இந்நம்பி மறவனார் நம் குமரன் மறவனே. இளையோரைக் குறிக்கப் பிள்ளையார், நம்பி என்ற சொற்களைப் பயன்படுத்துவதுண்டு.

முதலாம் ஆதித்தனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் குமரன் கண்டன் பழுவூர் அரியணையில் அமர்ந்திருந்தார். அதனால்தான் பஞ்சநதீசுவரர் கல்வெட்டு குமரன் மறவனை, நம்பி மறவன் என்றழைக்கிறது. இக்காலத்தில் இளையவராக இருந்த குமரன் மறவன், ஆதித்தனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனாய்ப் பழுவூர் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார். இவ்வுண்மையை உணரா நிலையில் திரு. தியாகராசன் தம் தினமலர்க் கட்டுரையில் இவ்விருவரையும் இரண்டு வேறுபட்ட அரசர்களாகப் பட்டியலிடுகிறார்56. இவருடைய இரண்டாவது கட்டுரையான 'பழுவேட்டரையர் பள்ளிப்படைக் கோயிலில்', நம்பி மறவனைக் காணவில்லை. கல்வெட்டறிக்கையோ குமரன் மறவன், குமரன் கண்டன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே மன்னரைக் குறிப்பதாக மகிழ்ந்துரைக்கிறது57. திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் நம்பி மறவனைக் குறிக்கும் இக்கல்வெட்டைக் குமரன் கண்டனின் கல்வெட்டுகளைப் பட்டியலிட்டுள்ள இடத்தில் இணைத்திருப்பதன் பொருள் விளங்கவில்லை58. இருவரும் ஒருவரென்று கருதுகிறாரோ?

முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் குமரன் கண்டனின் ஆட்சியில் இருந்தது. இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவன் ஆட்சிக்கு வருகிறார். இவ்விரு வேந்தர்களின் பெயர்களிலும் பொதுவாக உள்ள 'குமரன்' என்ற முதற்சொல் இருவரின் தந்தையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தந்தையுடைய பெயரின் பிற்பகுதியைத் தங்கள் பெயரின் முதற்பகுதியாகக் கொள்வதை ஓர் ஒழுங்கு முறையெனப் பழுவூர் மன்னர்கள் இறுதிவரை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்நிலையில் பழுவூர் மரபின் தோற்றத்தைப் பின்வருமாறு படம் பிடிக்கலாம்.



குமரன் கண்டன் எப்போது பழுவூர் மன்னரானார் என்பதற்கு திட்டவட்டமான சான்றுகள் இல்லையென்றாலும், கி.பி. 893இல் அவரது ஆட்சி முடிவுற்றமைக்குக் குமரன் மறவன் ஆட்சிப் பொறுப்பேற்றதே போதுமான சான்றாகும். குமரன் மறவனின் ஆட்சி தொடங்கியதற்குக் கிடைக்கும் சான்றுகள், அம்மன்னர் எப்போது பொறுப்பு விலகினார் அல்லது காலமானார் என்பதை நிலைநிறுத்தக் கிடைக்கவில்லை.

கண்டன் அமுதன்

தொடரும்...

அடிக்குறிப்புகள்

53. S.I.I. Vol XIX, Ins. No 146.

54. Lbid., Ins. No. 172

55. S.I.I. Vol V, Ins. No. 537.

56. இல. தியாகராசன், கீழப்பழுவூரில் பள்ளிப்படைக் கோயில் கண்டுபிடிப்பு, கட்டுரை, தினமலர் (நாளிதழ்), திருச்சிப் பதிப்பு, 27-12-1987.

57. S.I.I. Vol. XIII, Notes on the inscription No. 298.

58. S.R. Balasubramanyam, Early Chola Temples, Madras, Orient Longman, 1971, P. 36.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.