http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 37

இதழ் 37
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ்ப்பண்பாடு மீட்டுருவாக்கம்
இராவண அனுக்கிரகமூர்த்தி
திரும்பிப் பார்க்கிறோம் - 9
கட்டடக்கலை அருஞ்சொற்பொருள் விளக்கம்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2
திருவாலித்திருமகன்
Agricultural Terms in the Indus Script - 1
அங்கும் இங்கும் - 1
Links of the Month
தொலைந்ததெல்லாம் கிடைக்கும்!
சங்ககாலத்து உணவும் உடையும் - 2
இதழ் எண். 37 > பயணப்பட்டோம்
திருவாலித்திருமகன்
பால.பத்மநாபன்
மயிலாடுதுறை வட்டம் வைத்தீசுவரன் கோவிலிலிருந்து கிழக்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவாலியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் குலசேகர ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்றது.

"சோலைத் தலைக்காண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து எங்கும் ஆலைப்புகை கமழும் அனியாலியம்மானே"

"ஆடலோசையற அனியாலியம்மானே"

"சீராரும் வளர்பொழில் சூழ் திருவாலி"

"தேராரும் நெடுவீதித்திருவாலி"

‘வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா"

என்று திருவாலி திருமகனை ஊன் உருகி உணர்ச்சியுடன் உள்ளத்து மகிழ்வுடன் காதலாகிக் கசிந்து கனிவுடன் பாடிய திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் சோலைகளும், கரும்பு ஆலைகளும், வண்டு அமரும் வளர்பொழில்களும், ஆடல்அனங்குகளும் தேரோடும் நெடும் வீதிகளும் கொண்டிலங்கிய திருவாலி இன்று சிற்றூராய்ச் சுற்றிச் சில வயல்களும் மிகச்சில வீடுகளும் மட்டுமே கொண்டு சுருங்கி உள்ளது. இவ்வ+ரின் அமைதியான சூழ்நிலையில் கிழக்குப்பார்வையில் கோயில் அமைந்துள்ளது.

கோயில் வாயிலுக்கு முன்பாக கருடாழ்வார் திருமுன்னும் கொடிக்கம்பம் மற்றும் பலித்தளமும் அதற்கு கிழக்கில் திருமணமண்டபம் என்ற பெயரில் சிறு மண்டபமும் உள்ளன. கோயிலின் வெளிமதிலை ஒட்டித் தென்புறம் "அமிர்தபுஷ்கரணி" என்ற பெயரில் காணப்படும் திருக்குளம் தற்போது நீரின்றிக் காணப்படுகிறது. கோயிலின் முன்பு வடப்புறம் மணவாள மாமுனிகள் திருமுன் உள்ளது. நுழைவாயில், கோபுரம் இல்லாமல் இலக்குமி நரசிம்மர் சுதை உருவம் பெற்ற வளைவுடன் காட்சியளிக்கிறது. வாயிலின் தெற்கிலும் வடக்கிலும் மதில் சுவர் பெருகிக் கோயிலை அணைக்கிறது.

இக்கோயிலின் கருவறையில் லெட்சுமி நரசிம்மர் சுகாசனத்தில் பின் கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வலத்தொடையில் லெட்சுமியை அமர்த்தியவாறும் காட்சி தருகிறார். வலமுன்கை அம்மையை அணைத்துள்ளது. இடமுன்கை இடத்தொடையின் மேல் உள்ளது.

லெட்சுமிதேவி, நரசிம்மரின் வலத்தொடையில் அமர்ந்த நிலையில் அஞ்சலி முத்திரையுடன் உள்ளார். பொதுவாக லெட்சுமியை நரசிம்மர் தனது இடத்தொடையில் அமர்த்திய நிலையில் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இங்கு சற்று மாறிய நிலையில் வலத்தொடையில் லெட்சுமியை அமர்த்தி காட்சியளிக்கிறார். கருவறையை ஒட்டிய முக மண்டபத்தின் வடமூலையில் தாடி மீசையுடன் பட்டாடையுடுத்தி கைகளை அஞ்சலி முத்திரையில் வைத்தபடி மன்னர் கோலத்தில் ஓர் அடியவரின் சிற்பம் காணப்படுகிறது. இதை இங்குள்ளோர் பூரணமகரிஷி என்று அழைக்கிறார்கள். இதையடுத்து நம்மாழ்வார் என்ற பெயருடன் ஒரு சிற்பம் உள்ளது.

முகமண்டபத்தை அடுத்துள்ள மகா மண்டபத்தை எட்டுத் தூண்கள் தாங்கி உள்ளன. இம்மண்டபத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து ஆழ்வார் சிற்பங்கள் உள்ளன. இம்மகாமண்டபத்தையும் கோயிலின் நுழைவாயிலையும் சிறு நடைமண்டபம் இணைக்கிறது. மகாமண்டப நுழைவு வாயிலின் தென்புறம் பின் கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வல முன்கையில் அபய முத்திரை காட்டியும் இடமுன்கையில் கதையை பிடித்தவாறும் பெருமாள் காட்சியளிக்கிறார்.

மகாமண்டபம் உபபீடம் உயர்ந்த நிலையில் பாதபந்த தாங்குதளம் பெற்றுள்ளது. சுவரில் நான்கு முகத் தூண்கள் காட்டப்பட்டுள்ளன. மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் இரு கோட்டங்களும் வடக்கு சுவரில் ழூன்று கோட்டங்களும் உள்ளன. இக்கோட்டங்கள் வெறுமையாய் உள்ளன.

துணைத்தளம் பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள விமானம், இருதள வேசரமாய் அமைந்துள்ளது. இரண்டாம் தளத்தில் தென்புறத்தில் நரசிம்மர் இடது காலை மடக்கி சுகாசனமாய், பின் இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வல முன்கையில் அபய முத்திரை காட்டியும் இருதேவிகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். தேவிகள் இருவரும் கையில் மலர் ஏந்தி சுகாசனத்தில் உள்ளனர்.

தென்புற கிரீவக்கோட்டத்தில் கிருஷ்ணன் பின் இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வலக்கையில் அபய முத்திரை காட்டியும் இடக்கையை கடியவலம்பிதத்தில் இருத்தியும் இரு தேவிகளுடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். இவ்விமானத்தின் மேற்குப்புற இரண்டாம் தளத்தில் கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு இரு தேவிகளுடன் காட்சியளிக்கிறார். இடது தேவி தனது வலக்கையில் மாலை ஏந்தியுள்ளார்.

மேற்குப்புற கிரீவ கோட்டத்தில் பெருமாள் பின் இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வல முன்கையை அபய முத்திரையில் இருத்தியும் இடது முன்கையை வரத முத்திரையில் காட்டியும் சுகாசனத்தில் தேவிகளுடன் உள்ளார்.

இரண்டாம் தள வடக்கு புறத்தில் ராமர், லெட்சுமணர் சீதையுடன் நின்ற நிலையில் உள்ளார். வடக்குப்புற கிரீவக்கோட்டத்தில் பரமபத நாதர் பின் இருகைகளில் சங்கு சக்கரம் ஏந்தியும் வலது முன்கையை அபய முத்திரையில் இருத்தியும் உத்குடி ஆசனத்தில் தேவியருடன் உள்ளார்.

விமானத்தின் கிழக்கு கிரீவ கோட்டத்தில் லெட்சுமி நரசிம்மர் தனது வலது தொடையில் லெட்சுமியை அமர்த்தியவாறு காட்சி அளிக்கிறார்.

இக்கோயில் கருவறை, முகமண்டபம் மற்றும் மகாமண்டபம் யாவும் கட்டட அமைப்பில் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அமைப்பாய் உள்ளது. இக்கோயிலில் தாயார் சன்னதி தனியே கிடையாது. கல்வெட்டுகள் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் திருவாலித்திருமகனைத் தனது பாசுரங்களில் பாடியிருந்தாலும் பழமையை பறைசாற்றும் அமைப்புகள் ஏதுமில்லை. ஆனால் திருவாலியிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருநகரில் உள்ள கல்யாண ரெங்கநாதர் கோயில் திருமங்கையாழ்வாருக்கு தனி திருமுன் பெற்று திருமங்கையாழ்வாருடன் தொடர்பு கொண்டு தனிப்பெறும் மாடக்கோயிலாய் அமைந்துள்ளது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.