http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > நூல்முகம்
SMS எம்டன் 22-09-1914
சு. விஜய் குமார்
நூல் : SMS எம்டன் 22-09-1914(சரித்திர புதினம்)
எழுதியவர் : திவாகர்
பதிப்பாளர் : பழனியப்பா பிரதர்ஸ், 25, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014

*******************************************************************************


நான் கடல் / கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் சிங்கையில் பணி புரிவதால், திரு. திவாகர் அவர்கள் ஒரு முறை என்னிடத்தில் பினாங் தீவில் கீலிங் என்ற ஒரு தீவை பற்றியும், பினாங் துறைமுகத்தின் அமைப்பை குறித்தும் தகவல் திரட்டி தருமாறு கூறினார். அவரது சரித்திர புதினங்களை ஏற்கனவே படித்த அவரது தீவிர ரசிகன் நான் என்ற முறையில், இவர் ஏன் இந்த தகவல்களை திரட்டுகிறார் என்ற ஆவல் மிகுதியில், உடனே, எதற்காக இந்த தேடல் ? என்று கேட்டுவிட்டேன். அப்போது அவர் சொன்ன விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. (எம்டன் படம் வெளி வந்த நேரம் வேறு )



ஒரு இரவில் (செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு), இல்லை பத்தே நிமிடங்களில் சென்னை (அப்போது மெட்ராஸ்) வாசிகளை மிரட்டிய ஜெர்மானிய போர்க் கப்பல் பற்றி அடுத்த படைப்பை தயார் செய்வதாக கூறினார். என்னடா, சரித்திர புதின ஆசிரியர் சோழ, பாண்டிய அல்லது பல்லவ அரசன், அரசகுமாரன், நாட்டியக்காரி என்று எழுதாமல், இவர் திடீரென ஒரு கப்பலை மையமாக வைத்து கதை எழுதுகிறாரே என்று திகைத்தேன். பிறகு எம்டனை பற்றி இணையத்திலும் நூலகத்திலும் நிறைய தேடிப் படித்தேன். அப்போது துவங்கியது தினமும் திரு திவாகருடன் எம்டனில் பயணம். எனினும் அவர் மூலக் கதையை மட்டும் மிக ரகசியமாகவே வைத்திருந்தார்.

சில மாதங்கள் இவ்வாறே இனிதாக சென்ற பின் ஒருநாள் முதல் ஐம்பது பக்கங்களை அனுப்பினார். ஆரம்பத்தில் ஒரு துப்பறியும் நாவல் போன்றே இருந்தது. ஒரு சாமானிய வைத்தியர் சிதம்பரம் (டாக்டர்), அவர் வீட்டில் ஒரு திடுக்கிடும் சம்பவம் - தற்கொலையா? கொலையா? என்று குழப்பம். சிதம்பரத்தின் அழகிய முறைப் பெண் ராதா, அரும்பும் காதல், துப்பு துலக்கும் ஆங்கிலேய காவல் துறை அதிகாரி, அவருக்கு பணிபுரியும் ராதாவின் மற்றொரு முறை மாப்பிள்ளை வில்லன், முக்கோணக் காதல் என விறு விறுப்பாக ஓடியது கதை.

எம்டனை பற்றிய தேடலில் அதன் கேப்டன் வான் முல்லர் பற்றிய பல அற்புத தகவல்கள் கிடைத்தன. எதிரிகளிடம் கூட தனது நன் நடத்தையால் அழியாப்புகழ் பெற்ற அவரது நற் குணங்களைப் பற்றி படித்ததும் புரிந்தது ஏன் திரு திவாகர் அவர்களை எம்டேன் ஈர்த்தது என்று. எம்டேன் வீழ்த்திய கப்பல்களின் பட்டியல், அவர்களது அற்புத போர்த் திறன், இரண்டே மாத காலத்தில் பிரிட்டிஷ் கடல் வாணிகத்தை முற்றிலுமாய் ஸ்தம்பிக்க செய்த எம்டேனுடன் மீண்டும் பயணிக்கும் அனுபவத்தை தந்தது கதை.

எம்டேன் சென்னையை குறி வைத்த நாள்.., தாக்குதலை தொடர்ந்து நடத்தி சென்னைக்கு பலத்த சேதத்தை விளைவிக்காமல் ஏன் பத்தே நிமிடத்தில் தன் தாக்குதலை நிறுத்திக்கொண்டது・அன்று இரவு கப்பலில் என்ன நடந்திருக்கும்!



இதற்கிடையே சிதம்பரம் காணமல் போகிறார், காவல் துறை திகைக்கிறது. சிதம்பரம் குற்றவாளியா? அதனால்தான் ஓடி ஒளிந்து கொண்டாரா? காதலி விடை தேடுகிறாள். அந்த தேடல் பல சரித்திர உண்மைகளை, யாருமே எதிர்பார்க்காத நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்து நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. கதைக் களம் விறு விறுவென பல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது, ராஜ ராஜ சோழர், ராஜேந்திரன், அம்மங்கா தேவி என பலர் நம் முன்னர் பவனி வருகின்றனர். அப்பப்பா! சோழ சாம்ராஜியத்தில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு, அவர்களின் தலை எழுத்தையே மாற்றிய நிகழ்வு....ஆன்மிகம், யோக முறை , சரித்திர அராய்ச்சியாளர்திரு நீலன்கண்ட சாஸ்திரி என்று ஆங்காங்கே ஆசிரியரின் டச்.

ஒரு வெள்ளைக்காரி, ஒரு தீவில் கடற்கரையில் நீராடுகிறாள், அங்கே நிலவொளியில் பேரழகு பெட்டகமாய் தெரிகிறாள். கரையிலோ அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் சிதம்பரம். அப்போது ராதாவின் கதி?

கெஞ்சிக் கூத்தாடி முழு கதையையும் அவரிடத்தில் இருந்து வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்கள் ஒரு இரவு, தூக்கம் இல்லை, உணவு அருந்தவில்லை, வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. அந்த நாற்பத்திஎட்டு மணிநேரம் தொடர்ந்து கதையைப் படித்தேன் என்பதற்கு பதில் கதையில் ஒரு கதாபாத்திரமாகவே நானும் உலாவினேன் என்று தான் கூற வேண்டும்!this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.