http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 94

இதழ் 94
[ ஏப்ரல் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

Sri Varamudaiyar
சோழ இராமாயணம் - பகுதி 02
Chola Ramayana 05
எருதுப்போர்
மாமல்லபுரம் குடைவரைகள்
இதழ் எண். 94 > இலக்கியச் சுவை
எருதுப்போர்
ரிஷியா
நம் சங்கத் தமிழரிடையே பல வீரவிளையாட்டுக்கள் வழக்கில் இருந்தன. எவ்வாறு கோழிப்போர் மிகப்பிரபலமாயிருந்ததோ அவ்வாறே எருதுப்போர் இம்மக்களிடையே வழக்கில் இருந்துள்ளமையை, "மலைபடுகடாம்" பாடல் இயம்புகிறது. பாடல் வழி விரியும் ஒரு வீரக்காட்சி:

அது வீரத்துக்கென்றே பெயர்பெற்ற காடும், காடுசார்ந்த முல்லை நிலத்துக்காளை. தன் இனக்கூட்டத்தை விட்டுப்பிரிந்து வந்துள்ளது. மிகவும் எடுப்பான திமிலை உடையது அக்காளை. மிகவும் வலிமையன, திடமான உடலைப்பெற்றது. கண்களில் ஒரு மூர்க்கம். வாலின் முறுக்கலில் யாராலும் அடக்க முடியாத ஒரு தினவு தெரிந்தது. அதைப்பின் தொடர்ந்து அவர்களும் வந்தார்கள். ஊதுக்குழலை இடுப்பில் செருகிக்கொண்டு. மல்லிகை மலர்ச்சரங்களைச் சூடிய வீர முல்லை நிலக்கோவலர்கள்.

தன் இனத்திலிருந்து பிரிந்துவந்த முல்லை நிலக்காளையை எதிர்கொண்டது குறிஞ்சி நிலத்து எருது. வலிமையின் முழுத்தோற்றமாய் விளங்கியது மலைப்பசு என்ற அவ்விடை. எளிதில் அடக்கவியலாத அவ்விடையைத் தொடர்ந்து வந்தார்கள் வெளிர்நீல குறிஞ்சிமலர் சூடிய குறவர்கள். படுகளம் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு எருதிடையே அடுபோர் தொடங்கியது.

முல்லை நிலத்து வீரக்கோவலர்களுடன் குறிஞ்சிநிலத்து மறக்குறவர்களும் ஒருங்கே இணைந்து மிகுந்த ஆர்ப்பரிப்புடனும் ஆரவாரத்துடனும் எருதுகளின் அடுபோரினை இரச்சித்தனர். முல்லைக்காளையையும், குறிஞ்சி விடையையும் மோதவிட்டுப்பார்த்தனர். அவர்கள் எழுப்பிய ஆரவாரத்தை அவ்வழிச்சென்ற கூத்தர் கேட்டனர்.

வீரக்காட்சியை சொற்கள் கொண்டு புணைந்த மலைப்படுகடாம் கவிதை வரிகள் இதோ:


இனத்தில் தீர்ந்த துளங்கு இமில் நல்லேறு
மலைத்தலை வந்த மரை ஆன் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரொடு ஒருக்கு இயைந்து ஆர்ப்ப
வன் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய
நல்ஏறு பொரூஉம் "கல்" என் கம்பலை

- பெருங்கௌசிகனார்: 330-335



அஃதாவது, வளாமியான இதழ்களையுடைய காட்டு மல்லிகையும், குறிஞ்சியும் குழையும் நல்ஏறு பொருதும் ஆடுகளத்துக்காட்சிகள் பேசும் தரவுகளை அவதானிக்கும் போது, எருதுப்போர் என்னும் வீரவிளையாட்டு திணைசார்ந்த வழக்காக அமையாமல், இரு நிலத்து மக்களை பேதமின்றி இணைத்துக்காட்டிய வீர விளையாட்டாகும்.

இன்றும் வழக்கில் உள்ளது என்று சொல்வதற்கில்லை. வழக்கொழிந்துபோன தமிழனின் வீரவிளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாகும்.

இன்று வீரமாய்ப் பேசுபவர்களைவிட, தன்னளவில் தமிழன் வீரத்தை, தியாகத்தி நேசித்துப்போற்றும் செயல்வீரராய் வாழ்ந்து காட்டும் எங்கள் நட்பின் முகவரி திரு. ஜெகதீஷ் அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.