![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 117
![]() இதழ் 117 [ மார்ச் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வெல்போர்ச் சோழன் கடுமான் கிள்ளியின் ஊர் மிகவும் சிறப்புப் பெற்றது. அந்த ஆமூர் அந்நாளைய தூங்கா நகரம் என்று சொல்லத்தக்க வகையில் பெருமையுடன் விளங்கியது. அவ்வூரில் இரவைப் பகலாக்கும் பாண்டில் விளக்குகள் நிறைந்து பொலிந்தன.
![]() இரவுப் பொழுது அறியாத கிள்ளியின் ஆமூர் பற்றித் தோழியின் கூற்றாக அமைந்த ஒரு பாடலை சங்கப் புலவர் ஓதலாந்தையார் பாடுகிறார். மருதம் ‘பகல்கொள் விளக்கொடு இராநாள் அறியா வெல்போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் நலம் பெறு சுடர் நுதல்..’ - ஐங்குறுநூறு (56:1-3) கூற்று; புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழல, ‘அதில்லை’ என்று தேற்றுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. விளக்கம்: பகலைப் போல் ஒளிதரும் பாண்டில் விளக்குகளால் இரவின் இருள் தெரியாத வெற்றி பொருந்திய சோழரின் ஆமூரைப் போன்றவளாம், மிகுந்த அழகுடையவளாம், ஒளி பொருந்திய நெற்றியுடையவளாம் இந்த மருத நாட்டுத் தலைவி. ஆக அந்நாளில் இரவுப் பொழுதுகளில் நகரில் விளக்கேற்றும் நடைமுறை இருந்துள்ளது தெரியவருகிறது. இந்த விளக்குகள் பெரும் அகல்களில் பெருந்திரியிட்டு ஏற்றப்பட்ட மண் விளக்குகளா அல்லது வேறு வகையான விளக்குகளா என்பது பாடலில் தெளிவாகவில்லை. சோழரின் ஆமூரில் இரவு முழுவதும் விளக்குகள் பொலிந்தனவெனில் நகரெங்கிலும் நடமாட்டம் இருந்தது என்பதுதானே பொருள்? இது இரவும் பகலும் நடந்துகொண்டிருந்த வாணிபத்தால் வந்த நடமாட்டமா? அல்லது ஊர்மக்களே இரவுப் பொழுதுகளிலும் நடைபழகிக் கொண்டிருந்தனரா? எது எப்படியோ, பகலும் இரவும் சிறப்புற்று விளங்கிய ஒரு தூங்கா நகரம் அந்நாளில் சோழநாட்டிலும் இருந்தது என்பது இப்பாடல் வழி படமாகியுள்ளது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |