http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 66

இதழ் 66
[ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

செம்மொழி மாநாடு சிறப்புற...
மரபு வரிசையில் நாயக்க அரசர்களின் உருவச் சிற்பங்கள்
வாசிப்பில் வந்த வரலாறு - 1
சோழர் கால ஆடலாசான்கள்
விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
இரண்டு சந்தோஷங்கள்
மீன்கொத்தியும் பரணரும் (தமிழரின் அறுவை சிகிச்சைப் பதிவு)
இதழ் எண். 66 > இலக்கியச் சுவை
மீன்கொத்தியும் பரணரும் (தமிழரின் அறுவை சிகிச்சைப் பதிவு)
ரிஷியா


செந்தாமரைகள் பூத்து நகைபுரியும் குளிர்ந்த நீர்க்குளம். வாளை மீன்களும், கறுப்புக் கெண்டைகளும் நீர்ப்பரப்பில் துள்ளி விளையாட, ஆங்கே தவளைகளின் அரகரா வாய்ப்பாட்டுக் கச்சேரி. மேல்துண்டை உதறித் தோளில் போட்டபடியே சங்கக்கவி பரணர் அவ்விடம் நடைபயில வருகிறார். அடர்ந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த மீன்கொத்திப்புள் ஒன்று தன் எழிலார்ந்த நீலவண்ணச் சிறகை விரித்துத் தன் சிவந்த நீண்ட அலகைக் கீழ்நோக்கி நாட்டி மின்னலென நீர்ப்பரப்பிற்குள் பாய்ந்து கெண்டை ஒன்றைப் பிடித்து நீரினின்று மீள்கிறது. நின்று இரசித்தார் பரணர். இந்நிகழ்வு பலமுறை நடந்தது. சங்கக்கவி பரணருக்கோ ஆதுரச்சாலைக் காட்சி ஒன்று மனத்திரையில் விரிந்தது. நிகழ்வு ஒன்றுக்கு உவமம் பிறந்தது. இதோ பதிற்றுப்பத்துப் பாடல்.

கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும்

"இரும் பனம்புடையில் ஈகை வான் கழல்
மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்"

42 : செந்துறைப் பாடாண்பாட்டு

விளக்கம்


கரிய பனந்தோட்டாலாகிய மாலையும் பொன்னாற் செய்த பெர்ய வீரக் கழலுமுடையராய், மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால் சிரற் பறவை குளிர்ந்த குளத்துள் பாய்ந்து மூழ்கி மேலே எழுகின்ற காலத்து அதன் வாயலகை ஒப்ப மார்பிற் புண்களைத் தைக்கும் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான ஊசியினாலாகிய நீண்ட தழும்பும்...

இப்பாடலில், மீன் பிடிக்கும் சிச்சிலிப் பறவை தன் அலகைக் கீழ்நாட்டிக் கொண்டு நீர்க்குள் பாய்ந்து மூழ்கி மறைந்து அலகை மேல்நோக்கி நிறுத்தி வெளியேறுவது, வீரர் மார்பில் கிழிந்த புண்ணைத் தைக்கும் ஊசிக்கு உவமம். (ஊசியானது புண்ணின் உள்ளே செலுத்தப்படுவதும் பின் மேலே எழுவதும்...)

பாடல்மூலம் வெளிப்படும் வரலாற்றுப்பதிவு யாதெனில் சங்கத் தமிழர்கள் அறுவை சிகிச்சை அறிவு பெற்றிருந்தனர் என்பதாம். வாளால் உண்டான வெட்டினை ஊசியால் தைத்துக் குணப்படுத்துதல் என்பது இக்காலத்தில் மேல்நாட்டினரின் மருத்துவ முறைகளுள் முக்கியமானதாகக் காணப்படினும், பண்டைக்காலத் தமிழர்கள் இப்பயிற்சியுடையராயிருந்தனர் என்பது தேற்றம்.

(பாடுபடுபொருள் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள் தொடரை ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில், சங்கப் புதையல்கள் படிக்கப் படிக்க நிறையக் கிடைக்கின்றன.)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.