http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 74

இதழ் 74
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வழிபாடிழந்த திருக்கோயில்கள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 2
அசையும் பாவை
இதழ் எண். 74 > இலக்கியச் சுவை
அசையும் பாவை
ரிஷியா


"கரிய மாமை நிறமுடைய காதலிப்பெண்ணே! பொறித் தொழில் புனைந்த பதுமைபோல அசைந்து அசைந்து உன் தந்தையின் இல்லத்தை விட்டு அந்த மனையெல்லையைக் கடந்து நான் கூறுகின்ற சொற்களைக் கேட்டு என்னோடு வந்தாய் என்றால் முதல் பெயலைப் பொழியத் தொடங்கிய குளிர்ச்சியான எழிலி பொழிந்த அழகுமிக்க கானகத்தில், அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த இந்திர கோபப் பூச்சிகளைக் கண்டும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ இக்காட்டில் விளையாடு. நானோ, இளைய களிற்றியானை உரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற்பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து ஆறலைக் கள்வர் போன்றோர் சூழ்ந்து போர் செய்ய வந்தால் அஞ்சாது போர்புரிந்து அவர்கள் ஓடுமாறு செய்வேன். அதுபோல் உன்னுடைய சுற்றத்தார் பின்தொடர்ந்து வந்தால் அவர்கள் கண்ணில் படாது மறைந்து கொள்வேன்" என்று தலைவி மனம் மகிழுமாறு பாலைத் தலைவன் உரைக்கின்றான். இதோ நற்றிணைப் பாடல்.

நற்றிணை : 362

ஆசிரியர் : மதுரை மருதன் இளநாகனார்

"வினயமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த

கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி

அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே."


இப்பாடலின் முதல் வரியில் இடம்பெறும் "வினையமை பாவை" என்பதை ஆராயும்போது பொறிதொழில் புனைந்த பதுமைகள் சங்ககாலத்தில் வழக்கில் இருந்துள்ளன. அவை அசைந்து அசைந்து இயங்கும் இயல்புடையன என்பது பாடல் வரியின்மூலம் விளங்கும். இயந்திரமமைந்த பாவைகள் தமிழர் (Mechanical Engineering) பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாகும். இக்காலத்திய Mechanical dollsக்கு அவற்றை ஒப்பிடலாம். இதுபோன்று தமிழரின் பொறிதொழில் நுட்பச் சான்றுகள் சங்கப் பாடல்கள் பலவற்றில் காணலாம்.

ஆய்வுதோறும் தமிழ் இனிதாம்!
தமிழன் நாகரிகம் பீடுடையதாம்!!
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.