http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 76

இதழ் 76
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழமுடியாத ஊரும் தொல்லியல் துறையும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 2
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 1
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 1
சிபியும் நானும் - 2
கனிவின் பாலை
இதழ் எண். 76 > இலக்கியச் சுவை
கனிவின் பாலை
ரிஷியா


வெயில் துகிலென எங்கும் விரிந்து கிடக்கும் கடும்வழி அது. அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் இலையுதிர் காலத்து இருப்பை மரங்கள். கள்ளிப் புதர்களும், சூரைச் செடிகளும் சூழ்ந்த வறண்ட பாலைநிலம். கேட்கும் போதெல்லாம் இனிமையை வழங்கும் பாலையாழினைத் தோளில் சுமந்தபடி செல்கிறான் அந்தப் பாணன். அவனுடன் அவன் மனையாளான பாடினி.

கள்ளிப் புதர் அருகினில் ஆறலைக் கள்வர்கள் சிலர் அப்பாலைவழிச் செல்பவர்களின் பொருளை ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடிக்கக் காத்திருக்கின்றனர். நெடும்பயணமாய் உடன்வந்த பாணனின் மனையாளுக்குக் களைப்பு ஏற்பட, இருப்பை மரத்தின் கிளையொன்றில் ஒரு பருந்து அமர்ந்திருக்க அதன் சொற்ப நிழலில் களைப்பாறுகிறாள். அவளைத் தேற்றப் பாலைப்பண்ணை இசைக்கின்றான் அவன்.

வன்நெஞ்சம் படைத்த ஆறலைக் கள்வர்களின் கையிலே இருந்த கொடிய ஆயுதங்கள் அனைத்தும் நழுவி விழுந்தன. பாலைப் பண்ணின் சுகராகம் இதயத்தைத் தொட்டதால் கள்வரின் குணம் மாறியது. தீய பண்புகள் மறைந்து கொலைகாரர்களான அந்த ஆறலைக் கள்வர்கள் அருள் பாலிப்பவர்கள் போல நின்றார்களாம். பொருநராற்றுப்படைப் பாடல் இதோ பெண்கவி முடத்தாமக் கண்ணியார் பாடுகிறார்.

"ஆறலைக் கள்வர் படைவிட வருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை"

- பொருநராற்றுப்படை : 21-22


இப்பாலைப் பண்ணைத்தான் 'அரிகாம்போதி இராகம்' என்று இன்றைய தமிழறிஞர்கள் உரைக்கிறார்கள். கடிய மனதையும் உருக்கி இளகச் செய்யும் இயல்பும் தன்மையும் அரிகாம்போதி இராகத்திற்கு உண்டு என்பது 'ராக சிகிச்சை' (Raga Therapy) கூறும் உண்மையாகும். நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு பண்களின் இயல்பும், தன்மையும், பயன்பாடும் மாறுபடுவதைப் பல சங்கப் பாடல்களின் வழியே அறியலாம். பண்டைய தமிழர்களின் இசை நுணுக்கங்கள் இன்றைய விஞ்ஞான உலகின் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு ஏற்ப ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தேற்றம்.

தமிழா! தமிழன் என்று சொல்வதில் பெருமைகொள்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.