http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 95

இதழ் 95
[ மே 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக்கரையிலோர் காவியக்கற்றளி - 1
சோழ இராமாயணம் - பகுதி 03
Chola Ramayana 06
Thirumeyyam - 1
வீர சமர்க்களத்து ஆடலும் பாடலும் - 1
இதழ் எண். 95 > இலக்கியச் சுவை
வீர சமர்க்களத்து ஆடலும் பாடலும் - 1
ரிஷியா
வீரம் விளையாடிய விளைநிலம் அது. வீரம், சிறுபிள்ளைகள் முதல் முதுபெண்டிர் வரை அனைவரிடத்தும் கோலோச்சிய காலம் அது. மறத்தொழில் குடிப்பெருமையாய், ஒவ்வொரு மனைக்குரிய அடையாளமாய்ச் சீரார்ந்த சிறப்பு மரபாய் விளங்கிற்று.

விழுப்புண்களை அணியாத மார்புகளை மங்கைகள் ஏறெடுப்பதுமில்லை, மாலை சூடுவதுமில்லை. செங்களம் காணாத மறவன் ஒருவன் உண்டோ அந்நிலத்தில்!! போர்க்களத்துக் காட்சிகள் கோழையையும் வீரனாக்கும். மூதின் முல்லைப் பெண்டிரின் வீரம் நமக்குள் வாழ்க்கையின்மீது ஒரு நம்பிக்கையை நல்கி நம்மைக் குன்றென நிமிரச்செய்யும். அன்று வீரப்போர் முடிந்தபின் நடைபெற்ற வெற்றிக் களிப்பில் திணைசார்ந்த பலவகையான ஆடலும், பாடலும் நிகழ்த்தப்பட்டன. வெற்றி பெற்றவனும் பாடப்பட்டான், போரில் தோற்று வீரமரணம் கண்ட பகைவனின் வீரமும் மதிக்கப்பட்டது அந்த வீரயுக சமுதாயத்தில். போர்த்துறை சார்ந்த அவ்வாடல்களும் பாடல்களும் தொல்காப்பியனின் பார்வையில் வீரக்காட்சிகளாய் விரியும் பாடல்வரிகள் சிலவற்றைக் காண்போம்.

மன்பெருஞ்சிறப்பின் கரந்தை

பகைவர் பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சென்றபோது, அவர்களை வென்று ஆநிரைகளை மீட்டல் பொருட்டு நிகழ்ந்தவை யாவும் "கரந்தை" திணை எனப் பெயர் பெற்றது.

"வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்...."

புறம்: 6 : 1-2

விளக்கம்:


உயிர்க்கொலை புரியுமாறு கூறுகின்ற கொடிய வாயினையுடைய வேலன் ஆடும் வெறியாட்டுவகைச் சார்ந்த காந்தள் வகை ஆடலும் நிகழ்த்தினார்கள் என்பதாம்.

"வாடா வள்ளி வயவர் ஏத்திய
ஓடாக் கழல்நிலை உளப்பட ஓடா"

புறம் : 6 : 6-7


வாடாத தன்மை பொருந்திய வள்ளிப் பூக்களைச் சூடி வள்ளிக் கூத்தினை நிகழ்த்தினார்கள்.

போர் மறவர்கள் புகழ்ந்து பெருமையுடன் ஏந்திய வீரக்கழல்களைப் புகழ்ந்து பாடினார்கள்.

".... நீர்ப்படை நடுகல்
சீர்தரு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று"

புறம் : 6 : 19-20


வீரமரணம் தழுவிய மறவனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தின் சீர்மிகு சிறப்பினை வாழ்த்திப் பாடினார்கள்.

கழிபெருஞ்சிறப்பின் வஞ்சி

(தொடரும்)

(ஈழத்து விடுதலைப்போரில் வீரமரணம் கண்ட பிள்ளைநிலாக்களுக்கும், நிலாப்பெண்களுக்கும், மறவர்களுக்கும் என் சமர்ப்பணம் இது.)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.