http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 96

இதழ் 96
[ ஜூன் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 2
Chola Ramayana 07
தேடலில் தெறித்தவை - 3
Thirumeyyam - 2
வீர சமர்க்களத்து ஆடலும் பாடலும் - 2
இதழ் எண். 96 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 3
மு.நளினி, அர.அகிலா
தந்தையும் மகனும்


தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் கருவூலமாக விளங்கும் சங்க இலக்கியங்களுள் புறநானூறும் ஒன்று. பாண்டியன் இளவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பற்றிய பாடல்கள் பலவாக இவ்விலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று (55) மருதன் இளநாகனாரின் பாடல்.

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என அரசின் கொள்கையை வரையறுக்கும் இந்த அருமையான பாடல் ஒரு அரசு எப்படி விளங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நம்மவர் நம்மவரல்லார் எனக் கருதாது அவரவர் செய்யும் நன்மையும் தீமையும் கருதியே அரசின் செயற்பாடு அமைதல் வேண்டும். ஓர் அரசு கதிரவனைப் போல் வெந்திறல் ஆண்மையும் திங்கல் போலத் தண்பெருஞ் சாயலும் விசும்பைப் போல வண்மையும் கொண்டதாயின் அவ்வரசின் கீழ் வாழும் மக்கள் நீடு வாழ்வர் என அரசைப் பற்றித் தம் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கும் இளநாகனார், இப்பாடலில் தந்தையும் மகனுமான சிவபெருமான் முருகன் பற்றியும் சில தகவல்களைத் தந்துள்ளார்.

மலையை வில்லாகவும் பாம்பை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு ஓர் அம்பால் மூன்று கோட்டைகளையும் அழித்து தேவர்களுக்கு வெற்றியைப் பெற்றளித்த சிவபெருமான், நஞ்சுண்டதால் கழுத்தில் கறை கொண்டவர். அழகிய தலையில் பிறையும் நெற்றியில் கூடுதலாக ஒரு கண்ணும் கொண்டவர். இளநாகநாரின் இந்தப் படப்பிடிப்பு சிவபெருமான் அம்பெய்தே முப்புரம் அழித்தார் எனக்காட்டுகிறது. அம்பாக யார் அமைந்தார் என்பதை இளநாகனார் சுட்டவில்லை.

ஆனால் பின்னாளைய படப்பிடிப்புக்கள் சிவபெருமான் நகைத்தே முப்புரம் அழித்த தாகவும் அவருக்கு அம்பாக அமைந்தவர் விஷ்ணு என்றும் பலவிதமாகக் காட்சி காட்டுகின்றன. அந்தக் காட்சிக்கேற்ப சிற்பங்களும் அமைந்தன. ஒரு தொன்ம ம் கால ஓட்டத்தில் எப்படியெல்லாம் பூச்சுக்கள் பெறுகிறது என்பதற்கு முப்புர அழிப்பு ஒரு சான்றாகும்.

தந்தையைக் குறிக்கும் இளநாகனார் மகனையும் சுட்டத் தவறவில்லை. அறுபடை வீடுகளுள் ஒன்றாக க் கொண்டாடப்படும் செந்தூர் அவர் பாடலில் செந்தில் என்று குறிக்கப்பட்டுள்ளது. 'வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்' என்பது பாடலடி.கடலலைகள் தழுவும் செந்தில் நெடுவேளின் இருப்பிடமாம். நெடுவேள் முருகன்தானே!

அரசர்களை வரிசைப்படுத்தப் புறம் பார்த்தபோது அரசுக் கொள்கை - முப்புர அழிப்பு - முருகன் படைவீடு என்று எத்தனை முத்துக்கள்..இலக்கியந்தான் எத்தனை வளமானது!this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.