http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 103

இதழ் 103
[ ஜனவரி 2013]


இந்த இதழில்..
In this Issue..

தெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...
தேடலில் தெறித்தவை - 9
மலையீசுவரம்
கோனார் கோயில் - திருமால்பூர்
Gokarneswara - 1
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
அவன்! ஐயையின் தந்தை!
இதழ் எண். 103 > கலையும் ஆய்வும்
கோனார் கோயில் - திருமால்பூர்
சு.சீதாராமன்
அமைவிடம்

காஞ்சியிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக்கடந்து 12 கி.மீ தூரம் வடக்கு நோக்கி பயணம் செய்து திருமால்பூர் புகைவண்டி நிலையத்தை அடைந்து அங்கிருந்து மேற்காக 2 கி.மீ பயணித்தால் திருமால்பூர் கோனார் கோயில் தென்படும்.


நன்றி - கூகுள் மேப்




இத்திருக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) நிறுவனத்தின் சீரிய பராமரிப்பில் மிகவும் நல்ல நிலையில் உள்ளது.



திருக்கோயில் அமைப்பு

உபானம்,ஜகதி, எண்பட்டைக் குமுதம், பாதங்களுடன் கூடிய கண்டப்பகுதி மற்றும் பட்டிகையுடன் கூடிய பாதபந்த தாங்குதளம். உபானம் தரை மட்டத்தில் அமைந்திருந்தாலும் காணும் நிலையிலேயே உள்ளது



பட்டிகையுடன் முடியும் தாங்குதளத்தின் மீது சற்று உள்ளடங்கிய நிலையில் துணைக்கம்பு ஒன்று நெடுக காட்டப்பட்டுள்ளது. இக்கம்பின் மேலே சுவர்ப்பகுதி எழுகிறது. கீழ்த்தளத்தின் இரண்டாம் உறுப்பாக எழும் இச்சுவர் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது சுவரின் பரப்பில் நாற்புறமும் அமைந்துள்ள நான்முக அரைத்தூண்களும் கண்டத்தின் மீதிருந்தே எழுகின்றன. அரைத்தூண்கள் கலசம்,கும்பம் பாலிகை பெற்று உரிய உறுப்புகளோடு அமைந்துள்ள இத்தூண்களின் முப்புறமும் அமைந்துள்ள குளவுடன் கூடிய தரங்கப் போதிகைக் கைகள் உத்திரம் தாங்குகின்றன.



விமானத்தின் சுவர்ப்பகுதியிலும் முகமண்டப சுவர்ப்பகுதியிலும் கோட்டங்கள் காட்டப்படவில்லை.

கருவறை மற்றும் முகமண்டபத்திற்கிடையில் அமைந்த உள்ளடங்கிய பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும் காட்டப்பட்டுள்ள கோட்டபஞ்சரங்களின் அணைவுத்தூண்கள் துணைக்கம்பிலிருந்து எழும் வேதிக்கண்டத்திலிருந்து நான்முக அரைத்தூண்களாக எழுகின்றன.. இவை அளவில் சுவர்த்தூண்களை விட சற்று சிறியனவாக உள்ளன. இக்கோட்டபஞ்சரங்களில் சிற்பங்கள் இல்லை.





கோட்டபஞ்சரங்களின் மேலே மகரதோரணங்கள் வடக்கிலும்,தெற்கிலும் காட்டப்பட்டுள்ளன. வடக்கில் மகரதோரணக்குழிவில் சிம்மவாஹிணியான துர்கையும் தெற்கில் கஜலெட்சுமியும் காட்டப்பட்டுள்ளனர்.

குளவுடன் கூடிய தரங்கப்போதிகைகள் தாங்கும் உத்தரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபிப்பகுதியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. கூரைப்பகுதியின் முன்னிழுப்பு கபோதமாக செதுக்கப்பட்டு இடையிடையே கூடுகள் கொண்டு அமைந்துள்ளது. இதன் ஓரப்பகுதியில் கொடிக்கருக்குகள் காட்டப்படுகின்றன கொடிக்கருக்குகளுக்கு கீழும் கபோதக்கூடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது. கபோதக்கூடுகளின் நடுவே கந்தர்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கபோதத்திற்கு மேல் விமானத்தின் எவ்வுறுப்பும் காணக்கிடைக்கவில்லை.



கருவறைக் கட்டுமானத்தின் பத்திப்பிரிப்புகள் தூண்கள் அமைந்துள்ள இடைவெளியினால் அறியப்படுகின்றன. கருவறைக்கட்டுமானத்தின் ஒவ்வொரு பத்திக்கும் இரண்டென அமைந்துள்ள கபோதக்கூடுகள் சாலைப்பத்தியில் கோட்டம் அமையாமையால் மூன்று பத்திகளிலும் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதைக் காணலாம்..

முகமண்டபம்

கருவறை மற்றும் உள்ளடங்கியபகுதியை அடுத்து கருவறையை விட சற்றே அகலமாகவும், பத்திப்பிரிப்பின்மை பெற்றும் தோன்றும் முகமண்டபம் அமைந்துள்ளது .முக மண்டப கபோதத்தில் ஒவ்வொரு மூலையிலும் கபோதக்கூடும், கொடிக்கருக்கும் சந்திரமண்டலமும் காணப்படுகின்றன



(முகமண்டப நுழைவாயிலின் இடதுபுறம் உள்ள முதற்பராந்தகரின் மதுரைகொண்ட கோப்பரகேசரி கல்வெட்டு)



வாயில் நிலையையொட்டி சுவரின் இருபுறமும் பக்கத்திற்கொன்றாக நான்முக அரைத்தூண்கள் உரிய உறுப்புகளுடன் காட்சியளிக்கின்றன. இவற்றில் குளவுடன் கூடிய தரங்கப்போதிகைகள் தாங்கும் உத்திரத்துக்கு மேலாக வாஜனமும் வலபியும் உள்ளன.



வாயிலுக்கு மேலுள்ள உத்திரத்தில் அட்டமங்கலம் செதுக்கப்பட்டுள்ளது. வலபியில் பூதவரி செதுக்கப்பட்டுள்ளது.



சிற்பங்கள்

இத்திருக்கோயிலின் முகமண்டப மற்றும் கருவறையில் அமைந்துள்ள தூண்களின் மாலாஸ்தானங்களில் மாலைத்தொங்கல்கள், நாட்டியமாதர் மற்றும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன.



குறுஞ்சிற்பங்கள் பெரும்பாலும் திருமாலின் அவதாரங்களாகவே காட்டப்பட்டுள்ளன.அவற்றுள் கண்ணனின் குடக்கூத்து, கோவர்த்தனகிரிதாரர், உரலில் கட்டிய கண்ணன், வெண்ணை திருடும் கண்ணன், ஆலிலைக்கண்ணன் முதலிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கண்ணனின் குடக்கூத்து



பொதுவாக குடக்கூத்துச்சிற்பங்களில் கண்ணனின் ஒருகையில் மட்டுமே காணப்படும் குடம் இச்சிற்பத்தில் இரண்டு கைகளிலும் அமைந்தமை வலிந்து குறிப்பிடத்தக்கதாகும்.

கோயிலின் தனித்தன்மையாக விளங்கும் கட்டுமானக் கூறுகள்

1. முகமண்டபம் மற்றும் கருவறைகளில் கோட்டங்கள் இல்லாமை
2. கருவறையை ஒட்டிய உள்ளடங்கிய பகுதியில் கோட்டபஞ்சரங்கள் அமைக்கப்பெற்று சிற்பங்கள் பெறாமை
3. கோட்டபஞ்சரங்களின் மேலே மகரதோரணங்களில் சிற்பங்கள் அமைந்தமை
4. கண்டபாதங்களில் குறுஞ்சிற்பங்கள் காணப்படாமல் மாலாஸ்தானங்களில் அமைந்தமை
5. கருவறையை விட முகமண்டபத்தின் அகலம் அதிகமாக அமைந்தமை

திருக்கோயிலின் காலம்

கோயிலின் அமைப்பையும் சிற்ப அமைதியையும் நோக்குங்கால் இத்திருக்கோயில் பிற் பல்லவர் கால படைப்பாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் இத்திருக்கோயிலின் வடக்குப்பகுதியில் உள்ளடங்கிய பகுதியில் உள்ள கோட்டபஞ்சர மகரதோரண துர்க்கை சிற்பமானது சிம்மவாஹிணியாக காட்சியளிக்கிறது. தெற்குப்பகுதியில் உள்ளடங்கிய பகுதியில் உள்ள கோட்டபஞ்சர மகரதோரணத்தில் காட்சியளிக்கும் கஜலெட்சுமியும் நமக்கு பல்லவர் கால சிற்ப அமைதியையே நினைவூட்டுகிறது.

எனினும் இங்கு காணும் குளவுடன் கூடிய தரங்கப்போதிகைகளும் குறுஞ்சிற்பங்களும், இங்கு காணக்கிடைக்கும் பராந்தகர் காலம் முதல் இராஜராஜர் காலம் வரை உள்ள கல்வெட்டுகளும்,இத்திருக்கோயில் பல்லவர் தலைநகருக்கு அருகில் அமைந்துள்ளதாலும், பல்லவர் காலத்திலிருந்து கலைப்படைப்புகள் சோழர் காலத்திற்கு மாற்றம் பெற்ற “காலச்சந்தி”யில் உருவெடுத்ததா? என்ற எண்ணமும் எழாமலில்லை. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.