http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 166

இதழ் 166
[ ஜூலை 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

நெடுங்களநாதர் கோயில் -2
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள் - 3
திருச்சென்னம்பூண்டி - மருத்துவச் சிற்பம்
வடகுரங்காடுதுறை
மன்னார்கோயில் குறுஞ்சிற்பம்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 18 (கனவிலேனும் வாராயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 17 (கடவுளும் காணா அதிசயம்)
இதழ் எண். 166 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 19 (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?)
ச. கமலக்கண்ணன்

பாடல் 19: எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
難波潟
みじかき葦の
ふしの間も
あはでこの世を
過ぐしてよとや

கனா எழுத்துருக்களில்
なにはがた
みじかきあしの
ふしのまも
あはでこのよを
すぐしてよとや

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பட்டத்தரசி இசே

காலம்: கி.பி. 875-938.

இசே மாகாணத்தின் ஆளுநராக இருந்த ட்சுகுககேவுக்கு மகளாகப் பிறந்ததால் இப்பெயர் பெற்ற இவர் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்றவர். பேரரசர் உதாவின் அந்தப்புரத்தில் பட்டத்தரசி ஒன்ஷிக்குப் பணிவிடை செய்யும் பணியில் சேர்ந்தார். பின்னர் ஒன்ஷி இறந்தபிறகு பேரரசருக்கு மனைவியானார். இவர்களுக்கு யுகிஅகிரா என்ற மகன் பிறந்தார். பேரரசர் உதா இறந்தபிறகு அவரது நான்காவது மகன் இளவரசன் அட்சுயோஷி மீது காதல்வயப்பட்டு மணந்துகொண்டார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் கொக்கின்ஷு தொகுப்பில் 22 பாடல்களும் கொசென்ஷு தொகுப்பில் 72 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பிரிவாற்றாமை

பாடலின் பொருள்: நானிவா விரிகுடாவின் கரைகளில் வளர்ந்திருக்கும் நாணல்களின் இரு கணுக்களுக்கு இடையிலான சிறு இடைவெளி அளவேனும் சந்திக்கமாட்டேன் என்கிறாயா?

இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே புவியியல் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். தற்போதைய ஓசகா மாகாணத்தின் நாம்பா எனும் பகுதிதான் இங்கு நானிவா விரிகுடாவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் நாணல்கள் வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மூங்கில் போன்று இருக்கும் அந்த நாணல்களின் இரு கணுக்களை இணைக்கும் பகுதி சற்றுத் தடிமனாகவும் சிறியதாகவும் இருக்கும். அந்தச் சிறு இடைவெளி அளவுக் காலத்தைக்கூட என்னுடன் கழிக்க விரும்பவில்லை என்கிறாயா எனக் கவிஞர் தன் காதலரை எண்ணிக் கேட்கிறார்.

இப்பாடலின் நான்காவது அடியில் இருக்கும் யோ (世) என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உள்ளன. பெரும்பாலும் உலகம் என்ற பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கை, உறவு போன்ற பொருட்கள் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மூன்று பொருட்களுமே பொருந்தி வருகின்றன. கணுஇடை அளவேனும் நீ சந்திக்க விரும்பாத இந்த உலகில், இந்த வாழ்வில், இந்த உறவில் தொடர்ந்து இருக்கச் சொல்கிறாயா? என்கிறார் கவிஞர். இவர் பெண்பாலாக இருந்தாலும் ஓர் ஆண் தன் காதலியிடம் சொல்வதுபோன்ற தொனியே ஒலிக்கிறது இப்பாடலில்.

வெண்பா:

போதவிழ் போதுநாடு வண்டும் கரைநாடி
மோதவரு பேரலையும் கண்ணுறு - காதலரும்
நின்போல் பிரிவே விருப்பமாய் அன்பின்மை
கொள்வரோ ஏற்கா துலகு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் 24-ஜூலை-2022 அன்று வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.