http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 169

இதழ் 169
[ ஜூன் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

பண்டிதரான படைத்தலைவர்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 38 (இறை நின்று கொல்லுமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 37 (புல்நுனியில் பனிமுத்து)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 36 (கோடைநிலா எங்கே?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 35 (மனித மனமும் மலர் மணமும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 34 (நீண்ட வாழ்வே சாபமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 33 (சக்குராவின் சலனம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 32 (மலையாற்றின் இலையணை)
இதழ் எண். 169 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 33 (சக்குராவின் சலனம்)
ச. கமலக்கண்ணன்

பாடல் 33: சக்குராவின் சலனம்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
ひさかたの
光のどけき
春の日に
しづ心なく
花の散るらむ

கனா எழுத்துருக்களில்
ひさかたの
ひかりのどけき
はるのひに
しづごころなく
はなのちるらむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் தொமொனொரி

காலம்: கி.பி 850 - 904.

பேரரசர்கள் உதா மற்றும் தாய்கோவின் அரசவைகளில் அரசவைப் புலவராக இருந்தவர். புலவர் ட்சுராயுக்கி தொகுத்த கொக்கின்ஷூ தொகுப்பின் ஆசிரியர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். ட்சுராயுக்கியின் உறவினர்கூட. ஆனால் அத்தொகுப்பு நிறைவடைவதற்கு முன்பே இவர் இறந்துவிட்டார். கொக்கின்ஷூ தொகுப்பில் இவர் எழுதிய 47 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவைதவிர 20 செய்யுள்கள் தொமொனொரிஷூ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் காணக்கிடைக்கிறது. காலத்தால் அழியாத 36 பழங்கவிஞர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருக்கிறார்.

பாடுபொருள்: சக்குரா மலர்களின் நிலையாமை

பாடலின் பொருள்: சொர்க்கத்திலிருந்து வரும் ஒளிவெள்ளம்போல் இந்த வசந்தகாலக் கதிரொளி இதமாக இருந்தாலும் இந்த சக்குரா மலர்கள் ஏன் மன அமைதியற்றதுபோல் இவ்வளவு விரைவாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன?

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல்வாரத்தில் பூக்கும் சகுரா மலர்களின் அழகையும் பூத்த சில நாட்களிலேயே உதிர்ந்துவிடும் போக்கையும் கூறும் மிக எளிமையான பாடல். ஜப்பானிய இலக்கியத்தில் அஃறிணைப் பொருட்களுக்கும் மனம் இருப்பதுபோல் செய்யுள்கள் புனையும் வழக்கம் இக்காலகட்டத்தில் தோன்றியதாகக் கூறுகிறார்கள். இத்தொடரின் 26வது பாடலும் (காணும் பேறைத் தாரீரோ?) இதேபோன்ற தொனியில்தான் இருக்கும்.

இந்த சக்குரா மலரின் நிலையாமையை வைத்துப் பல செய்யுள்கள் காலந்தோறும் ஜப்பானிய இலக்கியத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. இத்தொடரின் 17வது பாடலின் (கடவுளும் காணா அதிசயம்) ஆசிரியரான நரிஹிரா இசேவின் கதைகள் புதினத்தில் சக்குரா பற்றி ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த சக்குரா மலர்கள் மட்டும் இல்லையென்றால் வசந்தகால இதயங்களில் எப்படி அமைதி நிலவும் என்பது அதன் பொருள்.

இப்பாடல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கி.பி 1332ல் புலவர் கென்கோ யொஷிதா இயற்றிய ஒரு பாடலில் சக்குராவின் இந்த நிலையாமைதான் அழகு என்கிறார். நிரந்தரமானவை மட்டுமே அழகு என்று சொல்லமுடியாது. முழுநிலா நாளில் மட்டும்தான் நாம் நிலவை இரசிக்கிறோமா என எதிர்க்கேள்வி கேட்கிறார்.

வெண்பா:

வானகம் ஈந்தநல் வெய்யவன் வீசிடும்
பூனதம் அன்ன ஒளிவரினும் - மானதம்
இல்லா உயிர்போல் சிதறும் சருகாய்
சகுரா மலரின் உதிர்வு

வெய்யவன் - சூரியன்
பூனதம் - பொன்
மானதம் - மனம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.