http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 33

இதழ் 33
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவிழா, நம்ம தெருவிழா
திரும்பிப் பார்க்கிறோம் - 5
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 1
தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம்
ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
Links of the Month
சங்கச்சாரல் - 16
இதழ் எண். 33 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 16


நீர் தெளியக் காழ்

கலங்கிய நீரைத் தெளியவைக்க நுண்துளை வடிகட்டிகள் பயன்படுத்தும் காலமிது. காலங்கல் மாறியும் கலங்கல் மாறவில்லை. என் செய்வது! யாருக்காவது அதில் அக்கறை இருந்தால்தானே. அதுசரி, அந்தக் காலத்தில் இந்தக் கலங்கலை நீக்க என்ன செய்தார்கள்? நெய்தல் கலி (142) விடை தருகிறது. தேற்றாவின் விதையைக் கொண்டு நீர் நிறைந்த கலத்தே நல்ல தேற்ற நீரின் கலங்கல் தெளிவுற்றதாம். நீர் தெளியப் பயன்பட்ட அந்த விதையை இன்றெங்கே காணோம்.




கற்பிற்கு இயைவதோ தோழி?

பொருள் தேடலுக்காகக் காதலியைப் பிரிந்து காதலன் வேற்றிடஞ் செல்ல, பிரிவு தாளாது தவித்தாள் அந்தக் காதலி. அவன் சென்ற வழியோ தீங்குகள் நிறைந்த துன்பங்கள் படர்ந்த காட்டுவழி. தலைவனுக்கு அவ்வழியில் தொல்லைகள் ஏதும் நேர்ந்து விடக்கூடாதே என்ற துடிப்புடன் தோழியை நோக்கியவள், அவர் செல்லும் வழியில் துன்பம் தவிர்க்க இறைவனை வேண்டலாம். ஆனால் அப்படிச் செய்வது நம் கற்பிற்கு ஏற்புடையதல்லவே! என் செய்வேன் என்று கலங்கினான். கற்புடை மகளிர்க்கு கணவனே தெய்வமென்ற கருத்தின் மலர்வை இப்பாடல் (16) எடுத்துரைக்கிறதோ!

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்' குறளுக்கு இக்கலிப்பாடல் முன்னோடியாம? தேவந்தியின் குளமாடி இறைத்தொழுது கணவனைப் பெறும் வழிகாட்டலை, 'நன்றன்று' என்று கண்ணகி மறுத்தமைக்கும் பாடலே விதையிட்டதோ!




கலி மறவர்

அக்கால மறவர்கள் எப்படி இருந்திருப்பர்? கற்பனையில் மூழ்கிக் காலத்தை வீணடித்தல் வேண்டா! பாலைக் கலிப்பாடல் ஒன்று (15) மறவர் தோற்றத்தைப் படப்பிடிப்பாய்த் தருகிறது. வில்லேந்திய வீரர்கள் அவர்கள். அந்த வில் வலிய வில். சிலை மரத்தால் செய்தது. அதன் முறுக்கேறிய நாணோ சிங்கத்தின் கர்ஜனை போல் பேரொலி எழுப்புவது. அவ்வில் கொண்டிருக்கும் வீரர்களோ அதில் அம்பைத் தொடுத்தால் எதிர் நிற்பாரை வெல்வதன்றி வேறொன்றுமறியார். திருகி முறுக்குண்ட மீசையும் தாடியும் உடையவர். கடுஞ்சினம் கொண்டவர். துடி எனும் இசைக்கருவியை முழக்கிச் செயற்படுவர். வழிப்பறிதான் தொழில். கொடையோ கொள்ளையிடும்போது வருவார்க்கும் போவார்க்கும் தரும் புண்ணே.

இம்மறவர்களைப் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. தொகுத்தால் சங்கக் கவிஞரின் மானிடவியல் பார்வை புலனாகும்.




பள்ளியும் யாழும்

பள்ளிகொண்ட பெருமாள் காட்டப்பட்டிருக்கும் சில கருவறைகளில் பின் மற்றும் பக்கச் சுவர்ப் பகுதிகளில் அடியவர், கந்தர்வர், நாரதர், தும்புரு, தேவர்கள், அரக்கர்கள் காட்டப்பெறுவதுண்டு. இவர்கள் தும்புருவும் நாரதரும் கையில் யாழ், வீணை கொண்டு இசையெழுப்ப, சில தேவமகளிர் ஆடுமாறு அமைந்த சிற்பக்காட்சிகளும் மலையடிப்பட்டி ஒளிபதிவிஷ்ணுகிருகம் போன்ற குடைவரைகளில் காணப்படுகின்றன. பெருமாள் பாட்டும் யாழும் கேட்டுப் பள்ளி கொள்கிறாரா, அல்லது அவரைப் பள்ளியெழுப்பப் பாடுகின்றனரா என்றறியாத நிலைக்குக் கலித்தொகைப் பாடலொன்று முற்றுப்புள்ளி வைக்கிறது. 'பாடலொடு அரும்பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல் பெருங்கடல் துயில்கொள்ளும்' என்கிறது முல்லைக்கலி (123).




this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.