![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 97
![]() இதழ் 97 [ ஜூலை 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி...) சக்தி சதுஷ்காவை அடுத்து ஊர்த்துவ தாண்டவரும் காளியும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றனர். பத்துக் கைகளுடன், வலக்காலை மேலே உயர்த்தித் தாண்டவம் நிகழ்த்தும் பெருமானின் உயர்த்திய பாதத்தின் உள்ளங்கால் பகுதி திருமுகம் நோக்கிய நிலையில் திருப்பப்பட்டுள்ளது. வலப்புறக் கைகளில் முன் கை, உயர்த்திய காலின் மேற்பகுதிக்குக் கீழ் அதைத் தாங்கிய நிலையில் காட்டப்பட்டு உள்ளது. பிற கைகளில் இருபுற முத்தலை ஈட்டி, முத்தலை ஈட்டி, துடி இருக்க இரண்டாம் கை உடைந்துள்ளது. இடப்புறக்கைகளில் முன்கை கடிய வலம்பிதமாய் இருக்க, மேற்கை மேலே நீட்டப்பட்டுள்ளது. பிற கைகளில் தலையோடு, மணி, கேடயம் காட்டப்பட்டுள்ளன. இறைவனின் உயர்த்திய காலுக்குக் கீழே அமர்ந்த நிலையில், ஐந்துமுகக் குடமுழவை இயக்கியவராய் நான்முகன். இடப்புறம் பூதகணம். இந்தத் தாண்டவத் துடிப்புகளில் தவித்து நிற்பவராய்க் காளி. முகத்தில் தோல்வியின் சோகம் திரையிட்டிருப்பதைத் தெளிவாய்க் காட்டியுள்ள மண்ணீட்டாளரைப் பாராட்டாது இருக்க முடியவில்லை. கோபுரத்தின் தென்புறத்திலும் சில சுதை வடிவங்கள் சிறப்புற அமைந்துள்ளன. மடியில் குழந்தையும், இடுப்பின் இடப்புறம் பனையோலைப் பின்னலுடன் கூடிய கூடையுமாய் ஓர் அழகி மேற்புறத்தில் பாலுணர்வுச் சுதையுருவமொன்று மகிழ்வின் முத்தாய்ப்பில் முகமெல்லாம் வாயாக நின்று கொண்டிருக்கிறது. வடபுறக் கோபுர நிலைகளில் பெரும்பான்மையான சுதையுருவங்கள் அழிந்துள்ளன. இரண்டு பெண்களுடன் ஆடவர் ஒருவர் ஆடும் ஆடற்காட்சி ஒன்றுதான் காணுமாறு உள்ளது. இந்த ஆடற்கோலம் அக்காலத்தில் நடந்த கூத்துக் காட்சிகளில் ஒன்றைச் சித்திரிப்பதுபோல் உள்ளது. (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |