http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 98

இதழ் 98
[ ஆகஸ்ட் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒன்பதாம் ஆண்டு நிறைவு
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 4
Thirumeyyam - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 6
தேடலில் தெறித்தவை - 5
புத்தகத் தெருக்களில் - நான், காவற்கோட்டம் மற்றும் சடச்சி மக்கள்
இதழ் எண். 98 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 5
மு.நளினி, அர.அகிலா
சபை கூடிய இடங்கள்


சோழர்கால ஊர்களை ஆட்சி செய்த குழுக்களைப் பற்றிய தகவல்கள் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் பரவலாக க் கிடைக்கின்றன. அவற்றுள் அந்தணர் வாழ்ந்த ஊர்களை மூலப்பருதையார், சபையார் எனுப் பெயரிலமைந்த குழுக்கள் நிருவகித்தன. மூலப்பருதையார் குறைவான அளவிலேயே கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் சபையார் சோழர்காலக் கல்வெட்டுக்களில் கோலோச்சுவதைக் காண முடிகிறது. பெருங்குறி சபை, பெருங்குறி மகாசபை, மகாசபை, சபை எனப் பல்வேறு விதமாக க் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவ்வாட்சிக்குழு தன் கூட்டங்களைக் குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் நிகழ்த்தாமல் ஊர் சார்ந்த பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தியுள்ளமை கல்வெட்டுக்களால் வெளிச்சப்படுகின்றது.

பெரும்பாலான ஊர்களில் அவ்வூர் சார்ந்த கோயில்களின் மண்டபங்களிலோ முற்றங்களிலோ இக்குழுவினர் கூடியமையால் பல்வேறு கோயில்களின் மண்டபப் பெயர்கள் வரலாற்றுக்கு வரவாகியுள்ளன. அவற்றுள் திருஎறும்பியூர்ச் சித்திரக்கூடம் ஒன்று.


ஊர் சார்ந்த அம்பலங்கள் (தயாபரன் அம்பலம்-திருப்பாலைத்துறை, மணியம்பலம்-திருவெள்ளறை, திருவரங்கதேவன் அம்பலம்-எறும்பூர்), தண்ணீர்ப் பந்தல்கள் (சோழமாதேவி), பெருமர நிழல் (அரசமர நிழல் - ஆலம்பாக்கம், மாமரநிழல் - மன்னார்குடி. இதுபோல் ஆலமரம், புளியமரம் ஆகியவற்றின் நிழலிலும் சபைக்கூட்டங்கள் நிகழ்ந்துள்ளன.), பிரம்மஸ்தானம் (கோவிந்தப்புத்தூர்) எனப் பல இடங்களில் கூடி ஊர்க் கடமைகளை நிறைவேற்றிய இக்குழுவினர், தேவை நேரின் சற்றுத் தொலைவு ஊர்களிலும் கூடிப் பணி செய்தமை பதிவாகியுள்ளது. உத்தமசீலிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தங்கள் ஊரான உத்தமசீலியிலிருந்து திருவானைக்கா சென்று அவ்வூர்க் கோயிலில் கூடிச் சில முடிவுகள் எடுத்தமை கல்வெட்டில் காணப்படுகிறது.

ஊர்க்கோயில்களின் கூடங்களிலும் (வினையாபரண விண்ணகரத்தின் முன்கூடம் - கோவிந்தப்புத்தூர்) அங்குள்ள மண்டபங்கள் (மதுராந்தகதேவன் மண்டபம் - ஆலம்பாக்கம், ஸ்ரீமலைமேல் கொல்லத்திளங்கோனார் மண்டபம் - திருவெள்ளறை), சத்திரங்கள் (திருஎறும்பியூர்), சுற்றாலைப் பகுதி (திருவானைக்கா கோயில் சுற்றாலை மேல் மூலை) முற்றம் (சம்பரேசுவரத்து சத்திமுற்றம் - திருமெய்ஞானம், திருவிசலூர் பள்ளிகொண்டாழ்வார் திருமுற்றம் - ஆலம்பாக்கம்) ஆகியவற்றிலும் இக்குழுக் கூட்டங்கள் தட்டழி கொட்டிக் காளம் ஊதி முறையாக முன்னறிவிப்புச் செய்து கூட்டப்பட்டன. புள்ளமங்கலத்தில் பறை அறைந்து கோயில் வாயிலிலுள்ள கூடத்தில் மகாசபை கூடியது.

இக்குழுக் கூட்டங்களை முன்னிருந்து நடத்திய குழுத்தலைவர்கள் கல்வெட்டுக்களில் சுட்டப்பட்டுள்ளனர். குழு எடுக்கும் முடிவுகள் ஆவணப்படுத்தப்படும்போது அதை எழுதியவராகக் கணக்கரோ, கரணத்தாரோ நடுவுநிலை தவறாத மத்யஸ்தரோ சுட்டப்பட்டுளனர். இம்மூன்று பணிகளுமே ஒரு சார் நிலைகள்தான் எனினும் சில கல்வெட்டுக்களில் இவர்களுள் இருவரைக் காண முடிகிறது.

இந்த ஆட்சிக்குழுவினரின் வாரியம் எனும் பெயரிலமைந்த உட்குழுக்கள், அவர்தம் நிருவாகத் திறன், சபை சார்ந்த பல்வேறுபட்ட பணிகள், பிற ஊர் சார்ந்த குழுக்களுடன் (ஊரார், நகரத்தார், நாட்டார்) இணைந்து இக்குழு செயல்பட்ட அமைப்பு எனக் கல்வெட்டுக்கள் நிறைத்து வைத்திருக்கும் தகவல்கள் தேடித் தொகுக்கப்படின் வரலாறு வளப்படும்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.