http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 98

இதழ் 98
[ ஆகஸ்ட் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒன்பதாம் ஆண்டு நிறைவு
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 4
Thirumeyyam - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 6
தேடலில் தெறித்தவை - 5
புத்தகத் தெருக்களில் - நான், காவற்கோட்டம் மற்றும் சடச்சி மக்கள்
இதழ் எண். 98 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 6
மா.இராசமாணிக்கனார்
இவருட் பெரியபுராணம் பாடியவர் யாவர்?

மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்படும் சேக்கிழார் பாலறாவாயரும் ஒருவரே எனக்கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் (36) என்பாவர் மேற்சொன்ன பாலறாவாயர் தமையனாரும் பெரிய புராணம் பாடியவருமாகிய சேக்கிழாராக இருக்கலாம் எனக் கோடலும் தவறாகாது. என்னை? சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரே என்பது மேலே பல சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டதாலும் இப்படியற்படி இரண்டாம் குலோத்துங்கன் காலடத்திலும் அவன் மகனான இருண்டாம் இராசராசன் காலத்திலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த சேக்கிழார் உத்தம சோழப் பல்லவராயர், சேக்கிழார் பாலறாவாயர் என்பவர் பெயர்களிலும் காணப்படலாலும் என்க.

சேக்கிழான் மாதேவடிகள்

மாதேவடிகள் என்பது சேக்கிழாரது பக்திச் சிறப்பு நோக்கி வந்த பெயராகலாம். இதற்கேற்பச் சேக்கிழார் புராண ஆசிரியர் அவரைக் குன்றைமுனி சேக்கிழார்(37) எனவும் அண்டவாணர் அடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர் (38) எனவும் கூறியிருத்தல் கருதற்பாலது. ஆதலின் சேக்கிழார்க்கு மாதேவடிகள் என்ற பெயர் அவர் பெரியபுராணம் பாடியபிறகு உண்டானதென்று கோடல் பொருந்தும்(39).

இராமதேவன்

இப்பெயர் சேக்கிழார் புராண ஆசிரியர் கூற்றாகும். இது சேக்கிழாரது இயற்பெயர் என்னலாம். சிறந்த சைவ மரபிலே பிறந்த சேக்கிழார்க்கு இராமதேவன் என்ற வைணவப் பெயர் அமையுமோ? எனில் அமையும் என்னலாம். 63 நாயன்மார்களுள் ஒருவரான முனையதரையர் நரசிங்கர் என்ற வைணவப் பெயரையும் ஒன்பதாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள் பாடியுள்ள சிவனடியார் ஒருவர் புருடோத்தம நம்பி என்ற வைணவப் பெயரையும் கொண்டிருந்தனர் என்பது அறியத்தக்கது. சிறந்த சிவபக்தனான முதற்குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி பெயர் நம்பிராட்டியார் சீராமன் அருள்மொழி நங்கை என்ற ஏழுலகம் உடையார் (40) என்பதையும் நோக்க பெரிய புராண ஆசிரியரும் சிறந்த சிவனடியாருமான சேக்கிழார் இராமதேவன் என்று பெயர் பெற்றிருத்தல் வியப்பில்லை. மேலும் இச்சேக்கிழார் மரபில் வந்த ஒருவன் குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்கிற திருவூரகப் பெருமாள் (41) என்ற பெயர் கொண்டு மூன்றாம் இராசராசன் காலத்தில் இருந்தான் என்பதும் நோக்கத்தக்கது. திருவூரகப் பெருமாள் என்ற பெயர் குன்றத்தூரில் கோயில் கொண்டுள்ள விஷ்ணுவின் பெயராகும் (42). இத்துடன் குன்பத்தூர்ச் சேக்கிழார் மரபினருள் சிலர் இன்றும் வைணவர்களாக இருப்பது கருதத்தக்கது (43).

அருள்மொழித் தேவர்

இப்பெயர் சேக்கிழார் இயற்பெயர் என்று கொள்ளத்தக்க முறையில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்துள்ளார். இப்பெயர் சோர் காலத்தில் பெருவழக்குடையது. முதல் இராஜராஜ சோழனுக்கு இப்பெயர் இருந்த்து (44). அருள்முழி நங்கை என்று சோழமாதேவியர்க்குப் பெயர் இருந்தது. குடிமக்களும் இப்பெயர் பெற்றிருந்தனர்(48) என்பது பல கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம். ஆதலின் இப்பெயர் சேக்கிழாரது இயற்பெயராகக் கொள்ளலாம். இன்றேல் பெரிய புராண பாடற்சிறப்பு நோக்கி இவரை இங்ஙனம் அறிஞர் அழைப்பாராயினர் எனக்கோடல் பொருந்தும்.

அடிக்குறிப்புக்கள்
(36) இப்பெயர் மாதேவடிகளார் மாதேவனான உத்தமசோழப் பல்லவராயன் என்று கருதவும் இடமுண்டு.

(37)S.84

(38) S.100.

(39) இதே முடிபினை இராவ்சாகிப் மு. இராகவய்யங்கார் அவர்களும் .கொண்டுள்ளனர். Vide his 'Sasana Tamil Kavi Charitram. PP 71-77.

(40) 304 of 1907

(41) 218 0f 1903


(42) Vide Ins. 177 to 179 of 1930.

(43) I have visited Kundrattur (the present Nattam and Tirunageswaram).

(44) K.A.N.Sastry's 'Cholas', VOl.I, P.224; Vol.II, Part I, P.459.

(45) 482 of 1925; 304 of 1907.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.