http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 7
மா. இலாவண்யா
தாய், தந்தையர் மகனுக்கு ஆற்ற வேண்டுய கடமை யாது? அரசனின் கடமை என்ன? மகன் செய்யவேண்டியது என்ன?


மறக்குடித் தாயின் கூற்றாய் பொன் முடியார் தனது வாகைத்திணை, மூதின்முல்லைத்துறை பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.

அத்தாய் கூறுவதாவது "மகனைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமையாகும், நற்பண்புகளைக் கற்றுத்தந்து மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமையாகும். மகன் போர் செய்வதற்கு நல்ல வேல், வாள் முதலிய போர்க்கருவிகளை செய்துதருவது கொல்லனின் கடமையாகும். நல்ல ஒழுக்கத்தை கற்பிப்பது அரசனின் கடமையாகும். அந்த வேலையும் வாளையும் கையிலேந்தி எதிரிகளில் ஒருவர் கூட உயிருடன் இல்லாதபடி திறம்படப் போர் செய்து தன் நாட்டிற்கு வெற்றி பெற்றுத் தருவது மகனின் கடமை" (புறம் 312) மறக்குடித் தாயின் வீரம் நிறைந்த சொற்களைப் பார்த்தீர்களா? போர் செய்து வெற்றி பெறுவது தான் மகனின் கடமையாம். இப்படிப் பட்ட வீரத்தாய்மார்கள் இருந்த காரணத்தினாலே, அவர்கள் நல் வீரர்களை ஈன்றெடுத்த காரணத்தினாலே தானே, கடாரம், யவனம் என்று பல தேசங்களிலும் நமது தமிழ் கொடியை படர விட முடிந்தது நம் முன்னோரால்.




காவிரி! காவிரி!


கேட்கவே மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிறது! இன்று வறண்டுவிட்ட நதியல்லவா! இந்தக் காவிரி சங்ககாலத்தில் எப்படியிருந்தது? ஒரு மருதப் படப்பிடிப்பாய்க் காட்டுகிறார் நக்கீரர்.

மலைகளிலிருந்து தொடர்பறாது விழும் அளவற்ற அருவி வெள்ளம் வந்து சேர்வதால் பூத்த புதுமலர்களையுடைய துறை. கடற்கரையைக் கரைத்திடும் அளவிற்கு அத்துறை தழுவும் பேராறாய்க் காவிரி. அதன் கரையில் கருமணல். இந்தக் காவிரியின் நீரைக் கிழித்தபடி நள்ளிரவு மீன் பிடிக்க ஓடும் தோணிகள். அந்தத் தோணிகளில் ஆற்றல் மிக்க இளைஞர் கூட்டம் பிடித்த மீன்களைக் காவிரித் துறையில் கருக்கலில் சேர்க்கின்றனர். எடுத்துச்சென்று விற்க அவர்தம் தங்கையர் ஈட்டம். கனவு போல் இருக்கிறதா? வறண்டு போன இன்றைய காவிரி, இந்தப் பாடலைக் கனவுக் காட்சியென்றுதான் நினைக்கத் தூண்டும். ஆனால் நக்கீரர் பாடியது மெய். (அகம். 126) - தகவல்: வரலாறு ஆய்விதழ் 12, 13




குறிக்கோள் எத்தகையதாய் இருக்கவேண்டும்


நாம் கொண்டிருக்கும் குறிக்கோள் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இக்கேள்விக்கு தனது பொதுவியல் திணை, பொருண்மொழிக்காஞ்சி துறைப் பாடலொன்றின் மூலம் விடையளிக்கிறார் கோப்பெருஞ்சோழன். தம் உள்ளத்தில் தெளிவில்லாமல் இருப்பவர்கள், தாம் செய்வது சரியா, தவறா? என்று எப்பொழுதும் சந்தேகத்துடனே இருப்பர். வேட்டைக்குப் புறப்படுபவருள், ஒருவன் யானையை வேட்டையாடும் குறிக்கோளுடன் சென்றால் அவன் யானையை சுலபமாய் வேட்டையாடிவிடுவான். ஆனால் குறிக்கோளே காடை போன்ற சிறிய பறவையை வேட்டையாடுவதாக இருந்தால் அவன் எதையும் வேட்டையாடாமல் வெறும் கையுடன் திரும்பி வருவான். அதுபோல உயர்ந்த குறிக்கோள் கொண்டிருப்பவர் வெற்றி பெறுவர் என்று உதாரணத்துடன் விளக்குகிறார் கோப்பெருஞ்சோழன். (புறம் 214) இப்படி பாடியவன் தன் வாழ்க்கையில் உயரிய குறிக்கோளுடன் தானே இருந்திருப்பான்.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.