http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 102

இதழ் 102
[ டிசம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

2013 ஆண்டிற்கான மாமன்னன் இராஜராஜன் விருது
Thirumeyyam - 8
மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள் - 01
ஒரு கல், ஒரு கண்ணாடி
மரபுக் கட்டடக்கலை - 02
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
இதழ் எண். 102 > இலக்கியச் சுவை
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
ரிஷியா
தமிழ்த் தென்றல் கொஞ்சி மகிழ்ந்து உவகையுடன் தவழும் பொதியமலைச் சாரலின்கண் உள்ள ஆய்நாட்டுத் தலைவன் அவன். ஆய் அண்டிரன் எனும் பெயர் படைத்தவன். அவனது வள்ளல்தன்மை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் சங்கப் புலவரால் புறப்பாடலில் பலவாறு பெரிதும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு பாடலில் முடமோசியார் இவ்வாறு பாடுகிறார்.


காடோ பாடின?

'மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக உடைய இக் கவின்பெறு காடே..'
(புறம் 131:1-4)


விளக்கம்; முகிலினங்கள் சென்று தங்கும் உயர்மலைக்குத் தலைவன், சுரப்புன்னை மலர்க் கண்ணியையும் தப்பாத வாளினையும் உடையவன். அத்தகைய ஆயின் மலையை எம்மையன்றிக் களிறு செறிந்த கவின் காடும் பாடினவோ! யானை மிகுதியாயிருந்த காட்டின் யானைகளையெல்லாம் பரிசிலர் பெற்றுப் போயினர். அதனால்தானோ என்னவோ யானைகள் வேண்டுமென இவ்வழகிய காடு நின்னைப் பாடியதோ? என்று ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பாடுகிறார் முடமோசியார்.

முடமோசியையும் மிஞ்சுகிறார் நல்லூர் நத்தத்தனார் எனும் சங்கப் புலவர். சிறுபாணாற்றுப்படை பாடிய இவர் ஆய் அண்டிரன் கொடைத்திறத்தினைக் கீழ்க்கண்டவாறு பெருமையுடன் பாடுகிறார்.


'நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்'
(சிறுபாணாற்றுப்படை : 96-99)



விளக்கம் - நீலநாகம் ஒரு உயரிய கலிங்கத்தை ஆய் அண்டிரனுக்கு வழங்கியது. அவன் அதனைத் தென்முக க் கடவுளாகிய தட்சிணாமூர்த்திக்கு வழங்கினான். வலிமையான தோள்களை உடையவன். அத்தோள்களில் வில்லைத் தாங்கியவன், இனிய மொழிகளைப் பேசுபவன் எனப் புலவர் தமது பாடல் வரிகளில் அவனை சிறப்பித்துப் பேசுகிறார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் பிறவா யாக்கைப் பெரியோனின் அருட்கோலங்களுள் ஒன்றான தென்முகக் கடவுளுக்கே உயரிய கலிங்கத்தை வழங்கியவன் எனச் சிறப்பிக்கப்படுகிறான். படைத்தவனுக்கே கொடை நல்கிய வள்ளல் எத்தனை பெரிய பெருவள்ளலாக இருக்க வேண்டும்?

இப்பாடலைக் கூர்ந்து அவதானிக்கும்போது 'ஆலமர் செல்வன்' என்கிற சிறப்புப்பெயர் முதன்முறையாக தென்முகக் கடவுளுக்கு சங்கப் புலவர் நல்லூர் நத்தத்தனாரால் வழங்கப்படுவதை அறியலாம்.

சங்க காலம் முதற்கொண்டு இச்சிவத் திருக்கோல வழிபாடு (அதாவது தட்சிணாமூர்த்தி வழிபாடு) சங்க கால மக்களின் வாழ்வியல் வழக்கில் உள்ளதை அறியமுடிகிறது. கல்லா மரத்தின் கீழ் அமர்ந்து அறிவு போதிக்கும் அழகிய இளமையான சிவக்கோல வடிவிற்கு 'ஆலமர் செல்வன்' என்கிற பெயர் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது! தென்னகத்தின் தொன்மையான சிவத் திருக்கோலங்களுள் சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள இவ்வடிவே மிகவும் தொன்மையானது என்பது இப்பாடல் வழித் தேற்றம். என்னே சங்கத் தமிழ்ப் புலவனின் கருத்தாக்கமும் கவித்திறமும் சொற்திறமும்!this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.