http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 116

இதழ் 116
[ பிப்ரவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 10
Mulaparudaiyar
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் – 03
தொண்டை நாட்டு ஆனூரின் திருக்கோயில்கள்
புதுப்புனலின் வேகம்
இதழ் எண். 116 > இலக்கியச் சுவை
புதுப்புனலின் வேகம்
ரிஷியா
நீர்வளம் மிக்கிருந்த சோழவளநாடு அந்நாளில் புனல் நாடு நீர் நாடு என்றெல்லாம் பெயர்கள் பெற்றுச் சிறப்புற்றிருந்தது. பெரும் வாவிகளும் வளமிகு பொய்கைகளும் வற்றாத நதிகளும் சிற்றாறுகளும் நிறைந்து மண்வளம் பெற்ற மருதநிலமாய்ப் பேறு பெற்றிருந்தது. சோழவளநாட்டை ஊடறுத்துப் பாய்ந்த காவிரி நதியின் நீர் வாய்க்கால்களின் வழியே வயல்களெங்கும் பாய்ந்தோடி உழவுத் தொழில் சிறக்க உதவியுள்ளது.



ஐங்குறுநூறில் மருதம் பாடிய ஒரம்போகியார் சோழ நாட்டின் உழவுத் தொழில் நுட்பத்தைத் தம் பாடலொன்றில் படம் பிடிக்கிறார். இதோ அப்பாடல்.

பரத்தை கூற்று

கூற்று - முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு ‘இவனுடன் இனி ஆடேன்’ என உட்கொண்ட பரத்தை ‘புதுப்புனல் ஆடப் போதுக’ என்ற தலைமகற்குச் சொல்லியது.


‘கதிர் இலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறை அழி புதுப்புனல் ஆடுகம்’
எம்மொடு கொண்டுமோவெந் தோன்புரை புணையே!’


(ஐங்குறுநூறு 78;1-4)

விளக்கம்; ஒளி பொருந்திய இலைகளை உடைய நீண்ட வேலையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழமன்ன ன் கிள்ளியின் அரணை அழிக்கும் யானை போன்று விரைவாக வந்த புதுப்புனல், தடுப்புக்களை அழித்துக்கொண்டு வந்தது. அப்புதுப் புனலில் ஆடுவோம் என்னோடு வருக என்பதாம்.

ஆற்று நீரீன் போக்கை ஒழுங்கு படுத்தவும் அதன் நீர் வாய்க்கால்களின் வழி தொலைவில் இருக்கும் வயல்கள் வரை பாய்வதற்காகவும் பல்வேறு தடுப்புக்களை வைத்திருப்பார்கள். அத்தடுப்புக்களையெல்லாம் உடைத்துக்கொண்டு ஒரு யானையின் வேகத்துடன் பாய்ந்தது என்கிறார் புலவர்.

இவ்வாறு சிறையுடைத்து வரும் புதுப்புனலில் வெள்ளி நிறத்துடன் பெருத்த கயல்மீன்களும் இருக்குமல்லவா? அவற்றை உண்பதற்கு ‘மாரிச் சுதையின் ஈரம் புறத்து அன்ன கூரல் கொக்கு’கள் ஆர்வத்துடன் காத்திருந்தனவாம். இந்தக் காட்சியைப் படம்பிடிப்பது அகநானுறு (346;1-11).

இவ்வாறு சோறுடைத்த சோழவளநாட்டின் வளமையை சங்க இலக்கியங்களெங்கிலும் காணமுடிகிறது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.