http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 128



இந்த இதழில்..
In this Issue..

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
SOMESWARA SHRINE OF SOMUR-Continued
திருக்கழுக்குன்றம் குடைவரை
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 9
இன்குதல் விறலியர் இசை மரபு
இதழ் எண். 128 > கலையும் ஆய்வும்
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
மு. சுப்புலட்சுமி

 

சிவன்பால் அளப்பரிய அன்பு கொண்டோரில் முற்றிலும் மாறுபட்டவர் காரைக்கால் அம்மை. இறைவனை இறைவனாகக் கண்ட நாவுக்கரசரும், அப்பனாகக் கண்ட சம்பந்தரும், நண்பனாகக் கண்ட சுந்தரரும், காதலனாகக் கண்ட மாணிக்கவாசகரும் எண்ணாத அன்பை அம்மை இடுகாட்டுச் சிவன்மீது பொழிகிறார்.

‘வருமிவள் நம்மைப் பேணும் அம்மை காண்’ எனும் வாக்கு சிவனுடையதா சேக்கிழாருடையதா? அந்த உமைதான் உரைக்க வேண்டும். ஆனால், எவரும் விளக்கும் தேவை இன்றி, காரைக்கால் பேய் தன் பாடல் வழி நமக்கு உணர்த்திப் போகிறார். எப்போதும் பிள்ளைகளோடே இருந்து அவர்களை வியந்து களிக்கும் பேரவா தாய்க்குத்தானே மிகுதி.

பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன் நாமம்
மறவாமை வேண்டும்...

என்பது இயல்பான வேண்டல்தான். ஆனால்,

‘இன்னும் வேண்டும்’ என்ற சொற்களால் தன் பேரவாவை வெளிப்படுத்தி அம்மை இறைவனின் அம்மையாகிறார். வேண்டுதலும் எப்படி?

‘நீ ஆடும்போது உன் அடிகீழ் இருக்க’ என்கிறார்.

இவ்வகையில் இறைவனுடனே, அவன் எதில் சிறந்தவனோ, அந்தப் பெருமையுறு காட்சியைக் களித்தவண்ணம் இருக்க விரும்புவதும் உறுதியாய் நிற்பதுமாகிய பண்பு தாய்க்கிணையாய் யாருக்கு வரும்?

இறைவனை அம்மையாய்ப் பேணும் காரைக்கால் அம்மையாரின் அன்பை உணர்ந்த இன்னோர் அம்மை, செம்பியன் மாதேவியார். சோழர்களின் அன்னை, மாதேவடிகள், மழபாடியர் மகள், உத்தமச் சோழனின் தாய், இராசராசனின் பெருமதிப்பிற்குரிய பாட்டியாம் மாதேவியார், அம்மையின் தாயன்பைச் சிற்பத்தில் உலகறியச் செய்கிறார்.

தமிழகக் கோவில்களில் முதன்முதலில் காரைக்கால் அம்மையாரைக்  கற்சிலையாய்க்  கொணர்பவர் மாதேவி.     தாம் கட்டிய, மீட்டுருவாக்கிய கற்றளிகளில் ஆடலரசரின் அடிகீழ் அம்மையை வடித்து தமிழகத்துச் சைவ வரலாற்றிற்குப் பெருமை சேர்க்கிறார் செம்பியன் மாதேவி.  பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார், இறைவன் ஆடுகையில்  அவர் அடிகீழ் இருக்க அம்மையார் வேண்டியதாய் உலகறியச் செய்யுமுன், சிற்ப வடிவில் அந்தப் பக்திப் பேருருவிற்கு வித்திடுபவர் செம்பியன் மாதேவியே.

கூகூரில் ஆடல்வல்லானுடன் இடப்புறத்தில் அம்மை

 

கூகூரில் உள்ள ஆம்பரனேஸ்வரர் திருக்கோவில் (இராசராசன் கல்வெட்டு  குறிப்பிடும் ‘மாம்பழமுடையார்’ திருக்கோவில்) ஆடல்வல்லான்-அம்மை சிற்பம்,  ஆடும் பிள்ளையைக் கண்டு பெருமையுறும்  தாயின் பேருவகையை, கண்டோரை உருக்கும் உணர்வு காட்டி மயக்குகிறது.

முழுமை நிலை குலைந்த சிற்பத்திலும், அம்மையின் உளம் நெகிழ்ந்த கோலம் அருமையிலும் அருமை. தொங்கிய மார்பும், எலும்புருவும், ஒரு காலை மடக்கி அமர்ந்த வார்ப்பே அம்மையின் சிற்ப உருவவியல் (iconography). முற்சோழர் கோவில்களில் இதனைக் கொண்டே ஆடல்வல்லான் அருகே அமர்ந்த உருவை அம்மையென்று ஆய்வாளர் கொள்வர்.

அம்மை

 

கூகூரில், இந்த உருவவியலை மீறி, தனித்துத் தெளிவாக நிற்பவை ஒரு தாயின் உருக்கமும், அம்மையின் பெருமிதமும். ஆடலில் வல்லான் ஆடும் காட்சியைக் கண்டு களிப்புறும் அந்த முகத்தில் அன்பின் ஆதிக்கம் சொற்களில் விளக்க இயலாதது.

கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்
அம்மையின் அற்புதத் திருவந்தாதி

காரைக்கால் அம்மையாரின் வாய்மொழி, அவர் வாழ்வில் ஏங்கும் பொருள்களில் ஒன்றை மேலே பாடல் குறிப்பிடுகிறது. அந்த ஏக்கம் நிறைவேறிய உன்னத மகிழ்ச்சியை அழகாய்ப் பேசுகிறது கூகூர் சிற்பம்.

இறைவனைக் கண்ணாரக் கண்டு, கைகள் கூப்பி, எண்ணத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து அம்மை இன்புறும் இலக்கியக் காட்சியை, கூகூர் சிற்பி வாயில் மாதேவி நமக்களிக்கிறார். ஆறாம் நூற்றாண்டின் அம்மையைப் பத்தாம் நூற்றாண்டில் மாதேவி சிற்பத்தில் வடித்து வைக்க, ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும், நாமும் கண்ணாரக் கண்டு கைகள் கூப்பி வணங்குவது இந்நூற்றாண்டில் நாம் பெற்ற பேறு.

 

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.