http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 134

இதழ் 134
[ மே 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 7
உலகப் பார்வைக்கு உதயம் - 2
கங்கைகொண்ட சோழபுரம் – குடமுழுக்கு
இடம் பொருள் ஏவல்
நைவளம் பூத்த பாலை
இதழ் எண். 134 > இலக்கியச் சுவை
நைவளம் பூத்த பாலை
ரிஷியா

 



நம் சங்கத் தமிழர்கள் மிகச்சிறந்த இசைவல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர். நிலமும் நிலம் சார்ந்த பண்கள், பொழுதுகள் சார்ந்த பண்கள் எனப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர். பாலை யாழில் வாசிக்கப்படும் சிறந்த இன்னிசைப் பண்ணான நைவளம் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள்வழி நமக்குக் கிடைக்கின்றன.



கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,



"நைவளம் பழநிய பாலை வல்லோன்

கைவிர் நரம்பின் இம்மென இமிரும்..."

(146-147)



விளக்கம்:

நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும் யாழ்நரம்பின் ஓசை போன்ற.... என்பதாம். மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க்காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.



"பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் 

இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ

நைவளம் பழநிய நயம்தெரி பாலை

கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க"

- சிறுபாணாற்றுப்படை (34-37)



விளக்கம்:

பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, நட்டராகம் என்னும் பாலைப்பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமையறிந்து வாசிக்க.... என்பதாம்.



மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும். பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே. 



பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப்பண்கள் எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக்கருவிகள் என இயற்கையோடும், இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசைபட வாழ்ந்தார்கள்.

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.