http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 143

இதழ் 143
[ அக்டோபர் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

அப்பர் என்னும் அரிய மனிதர் - 3
அரங்கநாதபுரம் திருவானேசுவரர்
அவர் போல்தான்! ஆனால் அவரில்லை!
அரங்கத்தின் ஆடற்சிற்பங்கள் இரண்டு
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
திருவித்தியாசக்குடி
இதழ் எண். 143 > பயணப்பட்டோம்
கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்
சு.சீதாராமன்
வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப்படுவானைக்
கானமரும்பிணை புல்கிக் கலைபயிலுங் கடம் பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள்தொழ வீடெளி தாமே.

என்று ஆளுடையப் பிள்ளையாரும்,

தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்
களருங் கார்க் கடம்பூர்க்கரக் கோயிலே

என்று அப்பர் பிரானும் அருளிச்செய்த கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அவ்வாலய அமைப்பை ஆய்வுசெய்ததில் மிகவும் அரிதான வகையில் அமையப்பெற்ற கர்ணகூடுகள் கண்களையும் கருத்தையும் கவர்ந்தன.

இவ்வாலயமே ஒரு அற்புதமான கலப்பு விமானம் ஆகும். ஆதிதளம் நாகரமாகவும், இரண்டாம் தளம் திராவிடமாகவும், கிரீவம் மற்றும் சிகரம் வேசரமாகவும் அமைந்த அற்புத விமானமாகும்.



இவ்வாலயத்தில் அமைந்த கர்ணகூடுகளானது மற்றைய ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.



பூமிதேசத்தின் மேலெழும் ஆர உறுப்புகளில் நான்கு மூலைகளிலும் எழும் கர்ணகூடுகள் பளிச்சென்று நம் கண்களில் படுவதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் முதல் தள ஆரத்தில் வழக்கமாக இடம் பெறும் சாலை இங்கு சாலையாக இடம்பெறாமல் ஆதி தள கோட்டத்தின் கூரை நீட்சி உபபீடங்களில் எழும் தூண்களால் தாங்கப்பட்டு ஆதிதளத்தின் கபோதத்திற்கு சற்று கீழே சாலைப்பகுதி மட்டும் கூரை பெற்று அதன் மேலே மகாநாசிகை போல் அமையப்பெற்று கர்ணக்கூடுகளுக்கு சற்று குறைந்த உயரத்திலேயே முற்றுப்பெறுவதால் முதல் தள ஆரச்சுவரில் கர்ணகூடுகள் மட்டுமே ஆட்சி செய்வது போல் ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

மேலும் இத்தோற்றத்தை உறுதி செய்ய சோழ சிற்பிகள் கையாண்ட உத்தி அதி அற்புதம். ஆம்; கர்ணகூடுகளின் முதன்மை திசைகளின் மையத்தில் அணைவுத்தூண்கள் பெற்ற கோட்டங்கள் அமைய, அவைகளில் நின்ற கோலத்தில் சிற்பங்கள் இடம்பெற கர்ணகூடுகளின் இரண்டாம் நிலைத்திசைகளில் எழிலார்ந்த ஆடல் மகளிர் இடம்பெற, இக்கர்ணகூடுகள் இவ்வாலயத்தில் சிறப்புடன் அமைந்து கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றது என்றால் அது மிகையாகாது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.