http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 175

இதழ் 175
[ ஃபிப்ரவரி 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

பண்டாரவாடை மாடக்கோயில்
கீழ்வேளூர் மாடக்கோயில் - 1
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
The Sankaracharya Temple at Kashmir
Decoding the Enigma of Shiva-the Supreme Dancer, from Karaikkal Ammai’s verses
ஜப்பானியப் பழங்குறுநூறு - 62 (பொய்யால் அடையுந்தாழ்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 61 (இடம் மாறினும் மணம் மாறுமா?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 60 (தனிவழியில் கவிப்பயணம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 59 (நிலவினும் நெடிது)
இதழ் எண். 175 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 59 (நிலவினும் நெடிது)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
やすらはで
寝なましものを
さ夜更けて
かたぶくまでの
月を見しかな

கனா எழுத்துருக்களில்
やすらはで
ねなましものを
さよふけて
かたぶくまでの
つきをみしかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: சேடிப்பெண் எமோன்

காலம்: கி.பி. 960-1041.

பேரரசர் இச்சிஜோவின் மனைவி ஷோஷியின் அந்தரங்க உதவியாளராக இருந்தார். இத்தொடரின் 56, 57வது பாடல்களை இயற்றிய புலவர்கள் முறையே இசூமி ஷிக்கிபு, முராசாகி ஷிக்கிபு ஆகியோரின் சமகாலத்தவர். இவரைப்பற்றி முராசாகி தனது நாட்குறிப்பு இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எய்காவின் கதைகள் என்ற புதினத்தின் ஆசிரியராகவோ அல்லது இணையாசிரியராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 93 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 புலவர்களின் பிற்காலப் பட்டியலிலும் 36 பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர்.

பாடுபொருள்: காதலருக்காகக் காத்திருந்த ஏமாற்றம்

பாடலின் பொருள்: மாலையில் கீழ்த்திசையில் நிலவு உதித்தபோது தொடங்கிய என் காத்திருப்பு காலையில் மேற்றிசையில் மலைக்குப் பின்னால் மறைந்தபின்னும் தீராது என்றறிந்திருந்தால் அப்போதே உறங்கியிருப்பேன்.

இத்தொடரின் 21, 53ம் பாடல்களைப் போல இதுவும் இரவு முழுதும் காதலர் வருவாரெனக் காத்திருந்து ஏமாந்து போனதை உரைக்கும் எளிய பாடல்தான்.

ஜப்பானிய இடைக்கால வரலாற்றில் அரசகுடும்பங்களில் பலதாரமணமே நிலவியது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை. வளமான வாழ்வுக்குக் கணவனின் வருகை மிக அவசியம்.

வெண்பா:

மாலையில் வந்ததும் உன்முகம் தோன்றிடக்
காலையில் தேய்ந்துமே காணாது - மாலையும்
வாடிடக் காத்திருந்தே தூங்கா இரவோ
நிலவை விடவும் நெடிது

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.