http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 21

இதழ் 21
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பழுவூர் - 10
வரலாற்றின் வரலாறு - 1
பல்லவர் யாவர்?
கீழ்மலையும் பொற்கோயிலும்
பல்லவர் வரலாறு - ஒரு பார்வை
இதழ் எண். 21 > தலையங்கம்
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
ஆசிரியர் குழு

இந்த ஆண்டு, தமிழாக வாழ்ந்து, தமிழர்க்காக வாழ்ந்து, தம் தளரா உழைப்பினாலும் அறிவியல் நோக்கினாலும் இணையற்ற ஆய்வுப் பதிவுகளைத் தமிழ்நாட்டு வரலாற்றிற்கு வழங்கிச் சென்றிருக்கும் அறிஞர் பெருந்தகை முனைவர் மா. இராசமாணிக்கனாரின் நூற்றாண்டாகும். வறுமையும் தனிமையும் சூழ்ந்திருந்த காலத்தும் கிடைத்த துணைகளையெல்லாம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான ஊன்றுகோல்களாகவே கண்டு, தாமும் வளர்ந்து, தம்மைச் சூழ்ந்திருந்த சமுதாயமும் வளரப் பாடுபட்ட இவ்வரிய மனிதரின் வாழ்க்கை இந்த இதழில் இடம்பெறுகிறது.

ஒரு தனிமனிதன், 'முயற்சி'யின் காரணமாக மட்டுமே எத்தனை உயரமுடியும் என்பதற்கு இராசமாணிக்கனார் சிறந்த சான்றாவார். வாழ்நாள் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் நலம் நோக்கிய சிந்தனையாளராகவே திகழ்ந்த இப்பெருந்தகையின் இலக்கிய, வரலாற்று ய்வுகள் நிகரற்றவை. வரலாறு டாட் காமின் அடுத்து வரும் இதழ்களில் அவை குறித்த கட்டுரைகள் இடம்பெறும்.

இராசமாணிக்கனார் ஒரு புதின ஆசிரியராகவும் திகழ்ந்தமை பலருக்குத் தெரியாது. அவருடைய 'தமிழரசி', 'நாட்டுக்கு நல்லவை' எனும் புதினங்கள் முற்றிலும் சமுதாய நலம் நாடிய நூல்களாக மலர்ந்தன. அவருடைய கனவுகள், எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள் இவை அனைத்தையும் இவ்விரு நூல்களிலும் பரவலாகப் பதிவுசெய்துள்ளார். 'நல்லது நடக்கும்' என்ற அவருடைய நம்பிக்கை, பின்னாளில் நிறைவேறியமையை வரலாறு உணர்த்துகிறது.

இராசமாணிக்கனார் ஒரு வரலாறு. அதனால்தான், டாக்டர் இராசமாணிக்கனார் தொடக்கப்பள்ளி, டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வுமையம், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் எனும் அமைப்புகளின் வழி அவர் தொடர்கிறார். வரலாறு நாளும் புதுப்பிக்கப்படுவது போலவே அம்மேதையின் சிந்தனைகளும் இவ்வமைப்புகளின் வாயிலாக நாளும் புதுமெருகு பெற்று வருகின்றன.

இராசமாணிக்கனாரின் நூற்றாண்டு பயனுறு முறையில் தமிழ்நாட்டிற்கும் தமிழினத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் அமையும் என்று நம்பிக்கையுடன் இம்முதல் இதழை உங்கள் கையில் தவழவிடுகிறோம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.