http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 22

இதழ் 22
[ ஏப்ரல் 16 - மே 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழகத் தேர்தல்
பாராட்டுவோம்
வரலாற்றின் வரலாறு - 2
Perspectives On Hindu Iconography
கல்வெட்டாய்வு - 15
குடும்பில் குடவோலை
தரிசனமான தக்ஷ¢ணமேரு
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - 2
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 9
இதழ் எண். 22 > தலையங்கம்
தமிழகத் தேர்தல்
ஆசிரியர் குழு
வரலாறு டாட் காம் வாசகர்களுக்கு எங்கள் வணக்கம்.

தமிழகமே தேர்தல் அலையில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் நாமும் தேர்தலின் வரலாற்றுப் பின்புலத்தைக் காண்போம். பல நாட்டினரும் காட்டுமிராண்டிகளாய்த் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, உயர்நாகரிகத்தைப் பறைசாற்றிச் செழிப்புடன் திளைத்திருந்தது தமிழ்நாடு. தமிழன் நாகரிகமும், பண்பாடும், கலை உணர்ச்சியும் மிக்கவனாய்த் திகழ்ந்தான். எதையும் ஆராய்ந்து தெளிந்து செயல்படும் திறன் வாய்ந்தவனாக இருந்தான். தேர்தல் என்பதற்கு ஆராய்ந்து முடிவெடுத்தல் என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழனுக்குத் தேர்தல் இரத்தத்தில் ஊறிய ஒன்று.

தலைவனைத் தலைவியும், தலைவியைத் தலைவனும் தேர்ந்தெடுத்து ஒன்று சேர்ந்ததைப் பற்றிப் பல சங்கப்பாடல்கள் வழி அறிகிறோம். வாழ்க்கைத்துணையை, வாழ்க்கையில் தான் சாதிக்கப்போவதை, தன் வேலையை என ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்துச் செய்தவன் தமிழன். அதனால்தான் அவன் விட்டுச் சென்ற ஆதாரங்கள் அவனின் உயர்வைப் பறைசாற்றும் வகையில் இன்றளவும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

எதையும் ஆராய்ந்தபின்னரே முடிவுக்கு வரவேண்டுமென்பதையும், ஆராயாது செய்யும் செயல்கள் கண்டனத்திற்குரியன என்றும் நல்ல தமிழ் காவியமாம் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. பாண்டியன் ஆராயாது அளித்த தண்டனையால் கோவலன் கொலையுண்ட செய்திகேட்டுப் பதறிய கண்ணகி, பாண்டியன் முன்பு சென்று "தேரா மன்னா செப்புவதுடையேன்" என்றுதான் முறையிடத் தொடங்கினாள். தான் செய்தது தவறென்று உணர்ந்த மன்னனும் தன் உயிரையே விட்டுவிட்டான்.

தமிழர்களின் சமூக சிந்தனை உயர, சமூகத்தை நிர்வகிக்கத் தலைவனையும், ஊர்ச்சபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு நல்லமுறையில் தேர்ந்தெடுப்பதற்காகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வகுத்துக் கொண்டனர். தேர்தலில் போட்டியிடுவோருக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களைப் பற்றியும் வரையறுத்துக் கூறினர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்காலத்தில் நடந்த ஆள்தேர்வு முறையை உத்திரமேரூர் வைகுந்தபெருமாள் கோயில் கல்வெட்டு விரிவாகக் காட்டுகிறது. தேர்தல் நடைமுறையில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பற்றியும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

இந்த இதழில் திரு. கமலக்கண்ணன், சோழர்காலத்தில் நடந்த குடவோலைத் தேர்தல்முறை பற்றித் தெளிவுற விளக்கியிருக்கிறார். அதனைப் படித்துவிட்டு இன்றைய தேர்தல் முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தேர்தல் முறையில் நாம் முன்னேறியிருக்கிறோமா அல்லது பின்தங்கிவிட்டோமா என்பது உங்களுக்கே புலப்படும்.

எதையும் ஆராய்ந்து செய்யும் பண்பு நமக்கு இருந்தாலும், இன்றைய நிலையில் அப்பண்பு சற்று உறக்கத்திலிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். நம்மை உறக்கத்திலிருந்து தட்டியெழுப்பி நாம் எத்தகைய உயர் நிலையிலிருந்தோம் என்பதை நமக்குத் தெளிவித்து, இனி நாம் செய்ய வேண்டியது பற்றி நாம் ஆராய்ந்து தெளியும் வகையில் நம் சிந்தனையைத் தூண்டிவிட வரலாறு இருக்கிறது. நம் மூதாதையர்களின் பல நூற்றாண்டு அனுபவங்கள் இலக்கியப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும், கோயில் சிற்ப, சித்திரங்களிலும் நாம் கண்டு அறியக் காத்திருக்கின்றன. அவற்றை கண்ணுற்று பயன்பெறுவோம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.