![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 44
![]() இதழ் 44 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
பழனியிலிருந்து பொருளூர் வழியாகக் கள்ளிமந்தயம் செல்லும் வழியில், 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மிகச் சிறிய ஊரான கூத்தம்பூண்டியான் வலசு. சிதறிக்கிடக்கும் குடியிருப்புகளுக்கிடையே நீண்டு படுத்திருக்கும் உயரம் குறைந்த குன்றுத் தொடரில் வடக்குப் பார்வையாக அடுத்தடுத்து இரண்டு குடைவரைகள் முயற்சிக்கப்பட்டுள்ளன. 'ஆல்பெருமாள் மலை' என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இக்குன்றின் எதிரிலுள்ள தான்தோன்றித் தோட்டத்தின் உரிமையாளர் திரு. மணியன் இக்குடைவரைகளைக் காண வருவோருக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறார்.
நிலமட்டத்திலிருந்து 1. 48 மீ. உயரத்தில் குடையப்பட்டுள்ள குடைவரை முகப்பின் முன்னுள்ள தரையமைப்பு கிழக்கு மேற்காக 10. 05 மீ. நீளமும் தென்வடலாக 85 செ.மீ. அகலமும் கொண்டு விரிந்துள்ளது. சீர்மையுறாத இத்தரையின் நடுப்பகுதியில் 1. 93 மீ. அகலத்திற்கு 1. 94 மீ. உயரத்திற்கு அரைவட்ட அமைப்பிலான பாறைப்பகுதி ஒன்று விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் நரசிங்கத்திலுள்ள கந்தன் குடைவரை, நாமக்கல் அனந்தசாயி குடைவரை, மாமல்லபுரம் அத்யந்தகாமம் இவற்றில் காணப்படும் படியடுக்கின் மேற்றள வளைவுச் சுவரென அமைந்துள்ள இப்பாறைப்பகுதி கீழிருந்து வரக்கூடிய படித்தடத்தின் மேற்றள வளைவுச் சுவராகக் கருதப்பட்டு விடப்பட்டிருக்கலாம். முன்னுள்ள தரையிலிருந்து 25 செ. மீ. உயரத்தில் அமைந்துள்ள முகப்புத் தரை, கிழக்கு மேற்காக 9. 58 மீ. நீளமும் தென்வடலாக 64 செ. மீ. அகலமும் பெற்றுள்ளது. நான்கு முழுத்தூண்களும் பக்கச்சுவர்களை ஒட்டி இரண்டு அரைத்தூண்களும் பெற்று ஐந்து இடைவழிகளுடன் அமையுமாறு திட்டமிடப்பட்ட இக்குடைவரை அகழ்வு முடிவுறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. அதனால், நடுவில் உள்ள முழுத்தூண்களும் அரைத்தூண்களாகவே நிற்கின்றன. இத்தூண்களின் மேல் வெட்டப்பட்டுள்ள விரிகோணப் போதிகைகளின் கீழ்க்கைகள் சிறிய அளவினவாக அமைய, மேற்கைகள் நீண்டு உத்திரம் தாங்குகின்றன. வாஜனம், வலபி இவை அமையவில்லை. தரையிலிருந்து 2. 80 மீ. உயரமுள்ள கூரை வடிவமைக்கப்படாத கபோதமாய் நன்கு நீண்டுள்ளது. முகப்பு அரைத்தூண்களை ஒட்டிக் கிழக்கில் 62 செ. மீ. அகலத்திலும் மேற்கில் 63 செ. மீ.அகலத்திலும் விரியும் பக்கச்சுவர்களும் சீர்மையுறவில்லை. கிழக்குப் பக்கச்சுவரை ஒட்டி, பாறையின் சரிவில் முகப்பு முன்தரையோடு இணையுமாறு 2. 28 மீ. உயரத்திற்கு செவவக அகழ்வு ஒன்று 6 செ.மீ. கனத்தில் வெட்டப்பட்டுள்ளது. அதன் அகலம் 1. 22 மீ. இவவகழ்வின் நோக்கம் அறியக்கூடவில்லை. முகப்பின் மூன்றாம் இடைவழிக்கு நேர் அமைந்துள்ள பாறைப் பிடிச்சுவரின் பக்கப்பகுதிகள் சீர்மையுறாதிருப்பதுடன், இவவளைவு முகப்பிலிருந்து வேறுபடுத்தப்படாமல் இணைந்த நிலையிலேயே விடப்பட்டுள்ளது. இக்குடைவரையின் மேற்கில் மேலும் ஒரு குடைவரை அமைக்க, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளன. பழனிப்பகுதியில் அமைந்துள்ள இக்குடைவரை முயற்சிகளைக் கண்டறிந்தவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை மாணவர்கள் ஆவர். இக்குடைவரைகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தெரிவித்தவர் மதுரை நண்பர் தொல்லியல் அறிஞர் முனைவர் திரு. வெ. வேதாசலம் ஆவார். இக்குடைவரைகள் 29. 1. 2008 அன்று ஆராயப்பட்டன. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |