http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 53

இதழ் 53
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

இயன்றவரை இனிய தமிழில்
ஆரத் தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன்!
திரும்பிப் பார்க்கிறோம் - 25
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 7
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - இரண்டாம் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 5
Silpis Corner (Series)
Silpi's Corner-06
அவர் வருவாரே!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 53 > கலையும் ஆய்வும்
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - இரண்டாம் பாகம்
ரிஷியா

புஜப்ரதாபானலதூமலேகா ஸங்க்ராமலஷ்மீகபரீகலாபஹ|
த்ரைலோக்யரக்‌ஷாவிதிவிச்வமூர்த்தேர் ஜ்ஜாகர்த்தி யஸ்யானுகுணஹ க்ருபாணஹ||


அவனுடைய தோளின் வலிமையாகிய நெருப்பிலிருந்து எழும் புகைக்கோடே வெற்றித் திருமகளின் குழல் கற்றை. மூவுலகையும் காக்கும் விதியின் ஓருருவான அவனையொத்த குணங்களுடைய அவன் வாள் விழிப்போடிருந்தது.


த்யாவாபுவெள வ்யாப்ய விஜரும்பஹஸாதா நிரங்குசம் ராஜாரியாஸ்ய கீர்த்தி:
பினாகபாணோ ஸுவ்ரபதி மூர்த்தேரபயய்யாப்த ஜகதீரயாயாஹ ||


பூமி முதல் ஆகாசம் வரையில் எங்கும் வியாபித்து பரந்து ஒளிவீசும் அரசனான அவனுடைய புகழானது, திரிசூலம் ஏந்திய ருத்ரசிவனைப் போன்றும் இந்திரனைப்போன்றும் மூவுலகிலும் வியாபித்து எங்கும் நிறைகின்றது.


ஸெளந்தர்யே மதனஸ்தருர்விதரணே திவ்யா க்ஷமாயா க்ஷிதிஹ
க்ரோதே தண்டதரஹ பராக்ரமவிதெள ஜாமதக்ன்யார்ஜ்ஜுநெள|
நீநெள சுக்ரப்ருஹஸ்பதீ சுரபதி த்ரைலோக்யர க்ஷாக்ரமே
ஸங்கீதேபரதோ முனிர்ந் நரபதி ஸ்தீ.............கதவர்ண்யதே|


அழகில் மன்மதன் போன்றவன், வள்ளற்தன்மையில் உன்னதமான கற்பகதரு போன்றவன், கோபத்தில் யமதர்மன், வீரபராக்ரமத்தில் ஜமதக்னியின் புத்திரனான பரசுராமன், அர்ஜுனன் போன்றவன் நீதியில் அசுரகுருவான சுக்கிராச்சாரியார் பிரகஸ்பதியை ஒத்தவன், மூவுலகையும் இரட்சித்துக் காப்பதில் தேவேந்திரனுக்கு இணையானவன். சங்கீதத்தில் பரதமுனிவன். இவ்விதம் விளங்கும் மன்னனான இந்த வீரனுடைய புகழை எவ்விதம் வர்ணித்துக் கூற?


ஸபாபதேதர்மண்டபம்க்ரவர்த்தி கிரீநீரஜாவேச்மனி கோபுரஞ்ச|
ப்ராகாரஹர்ம்யம்ச விதாய ஹைமந்த தேகபக்தோமுமுதே
நரேந்தரஹ||


சிதம்பரத்தில் சபாபதியாகிய ஆடவல்லானின் முன்னுள்ள மண்டபத்தையும் கிரீந்திரஜா என அழைக்கப்படும் மலைமகளாகிய சிவகாமியின் கோயில் கோபுரத்தையும் சுற்றுப்பிரகார மாளிகைகளையும் சிதம்பர நடராஜரின் மேல் இடையறாத பக்தி கொண்ட இம்மன்னன் மிகுந்த விருப்பத்துடன் பொன்மயமாக விளங்கும்படி நிர்மாணித்தான்.


ஏகாம்ரேஸ்வரதிவ்ய தாம மதுரா ஹாலாஹலாஸ்யாலயம்
ஸ்ரீமத்யார்ஜ்ஜுனதாம தாமசததா ஸ்ரீராஜராஜேஸ்வரம்|
வல்மீகேமச்வர வேச்வசேதி நிகிலம்ந் நிர்மாய ஹைமந்த்ந்ருபோ
வல்மீகாதிப தேச்ககார ச ஸபாம் திவ்யாம் மஹத்கோபுரம்||


கச்சியில் ஏகாம்பரநாதருடைய அழகு பொருந்திய கோயிலையும் மதுரை ஆலவாயனுடைய கோயிலையும் ஸ்ரீ மத்யார்ஜ்ஜுனம் எனப்படும் திருவிடைமருதூர்க் கோயிலையும் ஸ்ரீ இராஜராஜேச்சரம் கோயிலையும் (இன்றைய தாராசுரம்) வன்மீதநாதருடைய கோயிலையும் (திருவாரூர்) எல்லாம் பொன்மயமாக விளங்கும்படி நிர்மாணித்தான். வன்மீகநாதருடைய கோயில் சபையையும் பெரிய கோபுரத்தையும் அழகுற நிர்மாணித்தான்.

(தொடரும்...)this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.