http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > இலக்கியச் சுவை
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
இரா. கலைக்கோவன்
அவள் ஒருவனைக் காதலித்தாள். அந்தக் காதலைத் தோழி செவிலிக்குத் தெரிவித்தாள். செவிலி காதலியின் தாய்க்குத் தகவல் தந்தாள். இதற்கிடையில் காதலியை மணக்க விரும்பிய தலைவன் பெண் கேட்டு அவள் வீட்டுக்குத் தன் உறவையும் சுற்றத்தையும் அனுப்பினான். நடந்தவை எவையும் அறியாத பெண்ணின் தந்தையும் தமையன்களும் தங்கள் குலக் கொழுந்திற்கு இதனினும் சிறந்த இடம் தகுமெனக் கருதி மறுக்க முனைந்தனர்.

நிலைமையறிந்த தாய் (அகம் 234) உடன் தலையிட்டாள். ‘பெண்கேட்டு நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளனர். அவர்களுடைய வழிநடை வருத்தம், முயற்சி இவற்றை எண்ணுங்கள். உங்களுடைய குலப்பெருமையையும் கருதுங்கள். விலையுயர்ந்த மணிகளை அள்ளி வரும் அருவிகள் பல வீழும் வானளவு உயர்ந்த குன்றத்தின் தலைவனுக்குப் பெண் கேட்டு, அக்குன்றையே நம் மகளின் இளமுலைகளுக்கு விலையாக அளிக்க வந்துள்ளனர். அந்தப் பெருந்தன்மையை மதித்து அவர்களிடம் மணவினை கொள்வது நன்று.

அங்ஙனமின்றி, நம் மகளின் மதிப்பு இவ்வளவுதானா என்று கருதுவீர்களாயின், இல்லைதான். கழுமலப்போரில் எதிர்த்தாரை அவர்தம் கொற்றக்குடையுடன் கைப்பற்றிய நல்ல தேர்களை உடைய செம்பியனின் பங்குனித்திங்களில் விழாவெடுத்துக் கொண்டாடும் தலைநகரமான உறையூரையும் உள்ளிவிழா நிகழ்தற்குக் களமான சேரர்களின் தலைநகரமான வளம் நிறை வஞ்சியையும் சேர்த்தளித்தாலும் அவை இவள் முலைகளுக்கு ஒப்பான விலையாகா! அவையும்கூட இவள் தகுதியின் முன் மிகச் சிறியனதான்! என்றாலும், தேடி வந்தாரை மறுத்துவிடாதீர்கள். ’

தாயின் இந்த மதிநுட்ப உரை தந்தைக்கு உண்மையை உணர்த்தியது. தாய் சொல்லிக்காட்டிய குடிப்பெருமை, மகள் ஏற்கனவே குன்றத்தானுடன் கொண்டிருந்த உறவைக் குறிப்பாகச் சுட்ட, மாறியது உள்ளம்; மலர்ந்தது மன்றல்.

அகம் : 234

கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை,
நுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,
நிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப்
புல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
வள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
பல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,
கால்என மருள, ஏறி, நூல்இயல்
கண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்
வல்விரைந்து ஊர்மதி!- நல்வலம் பெறுந!
ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை
ஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,
அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
முல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலைப்
புறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர்,
கழிபடர் உழந்த பனிவார் உண்கண்
நல்நிறம் பரந்த பசலையள்
மின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.