http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 61

இதழ் 61
[ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்லுடைப்பில் ஒரு வரலாற்று அழிப்பு
இராமாயணக் கதவுகள்
புதுப்பட்டிக் குடைவரை
பழந்தமிழ்க் கல்வெட்டுகள் - 3
கழுகுமலை பயணக் கடிதம் - 3
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பெருவிழா 2009
பாடு பட்ட அம்மாள்
ராமநாதபுரம் கிருஷ்ணன் - ஆவணப்படம்
மௌனப் போர்க்களமே!
இதழ் எண். 61 > கலைக்கோவன் பக்கம்
புதுப்பட்டிக் குடைவரை
இரா. கலைக்கோவன்
அழகாபுரிக்கும் மூவரைவென்றானுக்கும் இடையில் கிழக்கில் பிரியும் சிறிய சாலை ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிச்சநத்தத்திற்கு அழைத்துச்செல்கிறது. அங்கிருந்து சிவகாசிச் சாலையில் 9 கிலோமீட்டர் பயணித்தால் மங்கலம் புதுப்பட்டியை அடையலாம். ஊரின் புறத்தே அருச்சுனா நதியின் மேற்குக் கரையில் உள்ள சுண்ணாம்புப் பாறையின் கிழக்குச் சரிவில் காணப்படும் குடைவரையின் முன் இரண்டு மண்டபங்கள் பாறைச்சரிவையே கூரையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

கருங்கல்லாலான நிலையமைப்புடன் கிழக்கில் வாயில் பெற்றுச் செங்கற் கட்டுமானமாய் விளங்கும் முன்மண்டபத் தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள திறப்புகள் குடைவரையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றுக்கான வழிகளாக அமைய, மண்டபத்தின் மேற்கு வாயில் முகமண்டபத்திற்கு வழி விடுகிறது. இவ்வாயிலின் இருபுறத்தும் வெறுமையான கோட்டங்கள் உள்ளன.


குடைவரையின் தெற்கு நுழைவாயில்


தென்வடலாக 2. 68 மீ. நீளம், கிழக்கு மேற்காக 2. 50 மீ. அகலம், 2. 25 மீ. உயரம் பெற்றுள்ள முகமண்டபத்தின் மேற்குச் சுவரில் கருவறை அகழப்பட்டுள்ளது. 1. 55 மீ. உயரம், 56 செ. மீ. அகலம் கொண்ட கருவறை வாயிலின் முன் இரண்டு படிகள் உள்ளன. வாயிலின் இருபுறத்தும் சுவர்ப்பகுதிகளில் தென்புறம் சற்றுப் பெரிய கோட்டமும் வடபுறம் சிறிய கோட்டமும் அமைய, அவற்றின் முன் திண்ணைகள் எனச் செங்கல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.


கருவறையும் கோட்டங்களும்


முகமண்டபத்தின் தென்சுவரில் உள்ள திறப்பு, சுற்றுவழிக் கான வாயிலாகவும் குடைவரை வளாகத்திற்கான தென்வாயிலாகவும் பயன்படுகிறது. வடசுவரின் நடுவில் திருமுன் எனக் கொள்ளத்தக்க நிலையில் ஆழமான கோட்டமும் அதன் வலப்புறத்தே மிகச்சிறிய அளவிலான கோட்டமும் உள்ளன. மண்டபத்தின் கிழக்குச் சுவரில் வாயிலின் இருபுறத்தும் பக்கத் திற்கொன்றாக உள்ள உயரமான கோட்டங்கள் வெறுமையாகக் காணப்படுகின்றன.


நுழைவாயில்


தென்வடலாக 1. 85 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 82 மீ. அகலம், 1. 87 மீ. உயரம் பெற்றுள்ள கருவறை அரைக்கோள வடிவத்தில் அமைந்துள்ளது. முற்றிலும் சுண்ணாம்புப் பாறையில் குடையப்பட்டுள்ள இக்கருவறையின் சுவர்களில் ஆங்காங்கே சிறு விளக்கு மாடங்கள் உள்ளன. தரையில் பின்னாளைய நாகர் சிற்பம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டுக் குடைவரைகளில் திருச்சுற்று முயற்சியை மாமண்டூர் மூன்றாம் குடைவரையிலும் மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் குடைவரையிலும் காணமுடிந்தாலும், அவை முற்றுப்பெறவில்லை. தென்மாவட்டக் குடைவரைகளில் புதுப்பட்டிக் குடைவரை தவிர வேறெந்தக் குடைவரையிலும் திருச்சுற்று முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. முற்றிலும் சுண்ணாம்புப் பாறையிலேயே குடையப்பட்டுள்ள புதுப்பட்டிக் குடைவரையின் திருச்சுற்று இதனால் தனிச் சிறப்புப் பெறுகிறது.


திருச்சுற்று


பொதுவாகக் குடைவரைகளில் காணப்படும் தூண்களோ, கூரையுறுப்புகளோ, சிற்பங்களோ புதுப்பட்டிக் குடைவரை யில் இல்லாத நிலையில், அதன் காலத்தைக் கூறக்கூடவில்லை. முகமண்டபக் கூரையிலும் சுற்றுவழிக் கூரையிலும் உள்ள திறப்புகள் சூரிய ஒளியைக் குடைவரைக்குள் கொணர்ந்த போதும், மக்கள் பயன்பாட்டில் இல்லாதநிலையில் திருச்சுற்று குப்பைமேடாய் வெளவால்களின் வாழிடமாய் உள்ளது. தமிழ் நாட்டில் மிக அரிதான கலைவடிவமாக அமைந்திருக்கும் இந்தச் சுண்ணாம்புப் பாறைக் குடைவரையைத் தொல்லியல் துறை கையகப்படுத்திக் காப்பாற்றுவது நன்றாகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.