http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 93

இதழ் 93
[ மார்ச் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
Thevarmalai
சோழ இராமாயணம் - பகுதி 01
Chola Ramayana 04
தேடலில் தெறித்தவை - 2
தலைஞாயிறு
கவி பாடிய வேந்தர்
Book Street Bonanza - 1
இதழ் எண். 93 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 2
மு.நளினி, அர.அகிலா

சட்டிச் சோறு, ஆனைந்து, அணுக்கவிளக்கு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் முதல் சுற்றின் தென்சுவரில் வெட்டப்பட்டுள்ள முதலாம் இராஜேந்திரரின் 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (தெ. க. தொ. 8: 66), அவர் பணிமகன் பாண்டி உதயதிவாகரன் அண்ணாமலையாருக்கு அளித்த கொடைகள் பற்றிப் பேசுமிடத்து மூன்று சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறது.

அண்ணாமலை இறைவன் கார்த்திகைத் திருநாள் திருவேட்டைக்கு எழுந்தருளும்போது அவர் அமுதுண்ணவும் அது போழ்து இருபது அடியார்களுக்கு அமுதளிக்கவும் வாய்ப்பாகத் திவாகரன் பொற்கொடையளித்தார். ஒவ்வோர் அடியாருக்கும் ஒரு சட்டிச் சோறும், காய், தயிர் இன்னபிற வழங்கவும் ஊர்க் குயவர்களிடம் சட்டிகளும் அகல்களும் பெறப்பட்டன. சோறிடச் சட்டியும் அதை மூடித்தர வாழை இலையும் காய், தயிர், பிற இட அகல்களும் பயன்படுத்தப்பட்டன. ஓர் அடியவருக்கு ஒரு சட்டியும் இரண்டு பேரகல்களும் ஒரு சிற்றகலும் வட்டில்களாக அமைந்தன. சட்டிச் சோறிடும் பழக்கம் தமிழ்நாட்டுக் கோயில்களில் பரவலாக இருந்தமையைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால், சோறிட்ட சட்டியை இலையால் மூடித் தந்தமையும் காய், தயிர், பிற இடப் பேரகல், சிற்றகல் பயன்படுத்தியமையும் அண்ணாமலைக் கல்வெட்டில் கிடைக்கும் அரிய தகவல்களாம். இன்றளவும் புவனேசுவரம், பூரிக் கோயில்களில் சட்டிச் சோறு வழங்கும் பழக்கம் தொடர்வதை நினைத்துப் பார்க்கலாம்.

'ஆக்கள் ஏறுவர் ஆனைஞ்சும் ஆடுவர்', 'ஆனஞ்சாடிய ஆமாத்தூர் ஐயனே' என்றெல்லாம் அப்பர் பெருமான் போற்றும் ஆனைந்து முழுக்காட்டு, தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வழக்கில் இருந்தமையைச் சில கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. எனினும், ஆனைந்தில் உட்படும் பொருட்கள் எவை எவை, அவை எந்தெந்த அளவுகளில் பயன்படுத்தப்பட்டன என்பதறிய குறைவாகவே சான்றுகள் கிடைக்கின்றன. 'திருவண்ணாமலை உடையாருக்கு பஞ்சகவ்யம் (ஆனைந்து) ஆடியருள நித்தமும் சிறுகாலைச் சந்தியில் திருவண்ணாமலை என்னும் நாழியால் கோமூத்தரம் உழக்கும் கோமயம் ஆழாக்கும் பால் நாழி உழக்கும் தயிர் நாழி உரியும் நெய் நாழியும்' என்னும் திவாகரனின் அண்ணாமலைக் கல்வெட்டுத் தொடர் அத்தகு சான்றுகளுள் ஒன்றாய்த் திகழ்கிறது.

சோறும் ஆனைந்து முழுக்காட்டும் அளித்த திவாகரன் இறைக்கோயிலை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தவும் உதவியிருக்கிறார். பொதுவாக இறைத்திருமுன்கள் முன்னிலையில் விளக்கேற்றவே கொடைகள் வழங்கப்படும். சில கோயில்களில் மண்டபங்களிலும் நாடகசாலைகளிலும் கூட விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், ஸ்ரீவிமானம் சூழ இரவுச் சந்தியில் 14 விளக்குகள் ஏற்றப்பட்டதும் அவை அணுக்க விளக்குகள் என்றழைக்கப்பட்டதும் அண்ணாமலைக் கல்வெட்டால் அறியப்படும் அரிய செய்திகளாகும்.

ஒரு கல்வெட்டு எத்தனை பண்பாட்டுத் தரவுகளைத் தரமுடியும் என்பதற்கு உதயதிவாகரனின் அண்ணாமலைக் கல்வெட்டுச் சிறந்த சான்றாகும்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.