http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 93

இதழ் 93
[ மார்ச் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

மதுரகவி - தினமணி நாளிதழ் விமர்சனம்
திரும்பிப்பார்க்கிறோம் - 40
Thevarmalai
சோழ இராமாயணம் - பகுதி 01
Chola Ramayana 04
தேடலில் தெறித்தவை - 2
தலைஞாயிறு
கவி பாடிய வேந்தர்
Book Street Bonanza - 1
இதழ் எண். 93 > இலக்கியச் சுவை
கவி பாடிய வேந்தர்
கோகுல் சேஷாத்ரி
தென்னகத்தை ஆண்ட வேந்தர்களுள் சிலர் கலை வல்லுனர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்துள்ளதை இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் எடுத்தியம்புகின்றன. உதாரணமாக முற்பல்லவ வேந்தரான ஐயடிகள் காடவர் கோன் சிவ க்ஷேத்திர வெண்பா பாடியருளினார். கேரள அரசர்களான குலசேகரப் பெருமாள் பல திருப்பதிகளைப் பாடியுள்ளார். அவரது வழி வந்த சேரமான் பெருமாள் திருக்கயிலாய ஞான உலா முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

பல்லவ வேந்தரான முதலாம் மகேந்திர வர்மர் மத்தவிலாசம் என்கிற நையாண்டி நாடகத்தை யாத்துள்ளார். அவரது பரம்பரையில் வந்த கடைசி பல்லவ மன்னரான அபராஜித பல்லவரும் தமிழ்ப்புலமை மிக்கவர் என்பதை திருத்தணி வீராட்டனேசுவரர் திருக்கோயில் கல்வெட்டு இனிதே எடுத்தியம்புகிறது.

திருந்து திருத்தணியிற் செஞ்சடை ஈசற்குக்
கருங்கல்லால் கற்றளியா நிற்க - விரும்பியே
நற்கலைகள் எல்லாம் நவின்றசீற் நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து

மிக எளிமையான சொற்களுடன் அழகாக யாக்கப் பட்டுள்ள இப்பாடலின் கீழ் ‘இவ்வெண்பா பெருமானடிகள் தாம் பாடியருளியது’ என்கிற குறிப்பு காணப்படுகிறது. (ARE 433 of 1905)

திருத்தணித் திருக்கோயிலை கற்றளியாக எடுப்பித்த நம்பியப்பி என்பவரைப் பாராட்டி வேந்தரே எழுதிய வெண்பா இது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.