http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [179 Issues] [1772 Articles] |
Issue No. 105
இதழ் 105 [ மார்ச் 2014] இந்த இதழில்.. In this Issue.. |
படைப்பின் நாயகன் அவன். உலகத்தின் அனைத்து உயிர்களின் சிருஷ்டி கர்த்தா. திருமாலிடமிருந்து உதித்தவள். அவனுக்கென்று தனிக்கோயில் கிடையாது. தனித்த வழிபாட்டுமுறை கிடையாது. ஆனாலும், நம் சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலில் அவனுக்கு நெருங்கிய தொடர்புண்டு என்று கருதப் பல சங்கப் பாடல்கள் சாட்சியம் பகர்கின்றன.
பெரும்பாணாற்றுப்படை வரிகள் சொல்லும் செய்தி இதோ: "நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த" வரிகள்: 402-403. நீலநிறம் கொண்ட திருமாலின் நாபித் தாமரையில் பிறந்தவன் என்பது விளக்கம். தமிழ்க் கடவுளான முருகனை முதன்மையாகப் போற்றும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் பாடுகின்றார், "தாமரை பயந்த தாவில் ஊழி நான்முகன்" வரிகள்: 164-165. தாமரையில், அஃதாவது திருமாலின் உந்தித் தாமரையில் உதித்தவன், கேடில்லாத காலத்தை உடையவன் என்றும் அறியலாம். சிவபெருமானிடம் பொய் கூறியதால் பிரம்மனுக்குத் தனிக்கோயில் கிடையாது என்பது லிங்கபுராணச் செய்தி. ஆனால், சங்கத் தமிழர் நான்முகனுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளித்துக் கேடில்லாத நற்காலத்தை உடையவன் என்று போற்றிப் பாராட்டுவதை மேற்கண்ட பாடல் வரிகளின் வழித்தேற்றம். உலகத்தின் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் பற்றிய குறிப்புகள் இவ்வாறு சங்க இலக்கியச் சோலையில் பரவலாகக் காணப்படுகின்றது. மேலும், "மலர்மிசை முதல்வன்" - பரிபாடல் : 8:3 என்ற வரிகள் பிரம்மனைச் சிறப்பிக்கின்றன. புராண, இதிகாசக் கதைகள், செய்திகள் பண்டைய தமிழரின் வாழ்வியலில் இணைந்தே வரும் பாங்கினை மேற்கண்ட சங்ககாலப் பாடல்கள் வழி அறியலாம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |