http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 105

இதழ் 105
[ மார்ச் 2014]


இந்த இதழில்..
In this Issue..

அமுது - ஒரு வரலாற்றுப் பார்வை
Gokarneswara - 3
Chola Ramayana 12
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 3
பெரும்பேறூர் தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில்
நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்
தேடலில் தெறித்தவை - 11
ஊழி நான்முகன்
இதழ் எண். 105 > கலையும் ஆய்வும்
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 3
கோகுல் சேஷாத்ரி
அரக்கர் ஆடும் ஆட்டம்


ஒரு போரில் வெற்றியடைந்த தரப்பினர் அந்த வெற்றிக் களிப்பை மகிழ்ந்து கொண்டாடும் வகையில் கூத்தாடுவதும் பாடுவதும் இயற்கைதான். ஆனால் அதே போரில் தோற்றவர்கள் அடைக்கலம் வேண்டி அச்சத்துடன் பாடி ஆடுவதுண்டா? அவ்வாறான மரபு முற்காலத்தில் இருந்ததா?

நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் இரண்டாம் ஆயிரமாக தொகுக்கப்பட்டுள்ள பெரிய திருமொழி தனியன்களுள் பத்தாம் பத்தில் இடம்பெற்றுள்ள இருபது பாசுரங்கள் இக்கேள்விகளுக்கான விடை பகர்கின்றன. இராமகதை தழுவிய இப்பாடல்களின் வழி தோல்வியாளர்கள் ஆடும் கூத்துக்கள் இரண்டினை முன்வைப்பவர் திருமங்கையாழ்வார்.

இராவணன் உள்ளிட்ட அரக்கர் தலைவர்கள் அனைவரும் மாண்டு போய்விட, தோல்வியுற்ற அரக்கர் குழாம் நடந்த நிகழ்வுகளுக்காக வருந்திப் புலம்பி இராமனையும் இதர வானர சேனைத் தலைவர்களையும் தொழுது அபயம் வேண்டி பாடி ஆடுவதுபோல் இப்பாடல்கள் அமைந்துள்ளன. வெவ்வேறு கோணங்களில் இராமகதையைப் படம்பிடிக்கும் பல்வேறு திவ்யப் பிரபந்தப் பாசுரங்களுள் இராவணனின் அரக்க சேனையின் பார்வையின் வழி நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் இவை மட்டுமே.

இவற்றுள் முதல் பத்தில் (பாடல் எண்கள். 1858 - 1867) இடம் பெறுவது பொங்கத்தம் எனும் ஒருவகைக் கூத்து. சங்கப்பாடல்களில் இடம்பெறாத இந்த வகை ஆடல், பாடி ஆடப்படும் கூத்து என்பதனை ஆழ்வாரே இறுதிப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் (பாடி நின்றாடுமின்). இவ்வாடல் பறையொலி முழங்க நிகழ்ந்ததாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு பாசுரமும் ‘தடம் பொங்கத்தம் பொங்கோ!’ என்று கூவியபடி முடிவதால் இவ்வாறு கூவி வேண்டுவது இக்கூத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்திருக்க வேண்டும் என்பதனை உணரமுடிகிறது.
இம் முதல் பத்து பாடல்களின் வழி அறியப்படும் சில அரிய இராமாயணச் செய்திகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

- அரக்கர்கள் தங்கள் தலைவனை இராவணன் என்றழைக்காமல் ‘இரவணன்’ என்றே அழைத்தனர். இராவணன் பெயரைக் குறிப்பிடும் இரண்டு இடங்களிலும் அரக்கர் இவ்வாறே அவனை விளிக்கின்றனர். (பாடல் எண் - 1858, 1862)

- இராவணன் பொன்னிலால் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை அணிந்தவன் (செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன்)1862

- பெண்டிரால் கெட்டுப்போகும் இந்தக் குடியைப் பற்றிச் சொல்வதற்கு மேலும் என்ன இருக்கிறது? (பெண்டிரால் கெடுமிக்குடி தன்னைப் பேசுகின்றதென்?)1860

- கும்பகருணனுடன் நிகும்பன் என்ற அரக்கனும் இறந்து விட்டான் (கும்பனோடு நிகும்பனும் பட்டான்)(1862)

- சீதையின் இருண்ட கூந்தல் ஐவகை இலக்கணங்களைக் கொண்டிருந்தது (அஞ்சு அல் ஓதி). இந்த ஐவகை இலக்கணங்களாக மிருதுத்தன்மை, குளிர்ச்சி, நறுமணம், கருத்த நிறம், நீளம் முதலானவற்றை உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். (1861)

- கடல் கடந்து தூது வந்த குரங்கு (அனுமன்) சீதை காவல் வைக்கப்பட்டிருந்த வனத்தினை முறித்து காதல் மக்களையும் சுற்றத்தையும் கொன்று இலங்கையையும் எரித்துவிட்டுச் சென்றது (மாக்கடிகாவையிறுத்து காதல் மக்களுஞ் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து)

- இராவணன் நெஞ்சில் இராமன் அம்பு பாய்ந்தது (புன்மையாளன் நெஞ்சில் புக எய்த)

பெண்டிரால் கெட்டுப்போகும் இந்தக் குடியைப் பற்றிச் சொல்வதற்கு மேலும் என்ன இருக்கிறது? என்று அரக்கர்கள் புலம்புவது கவனிக்கத்தக்கது. (பாடல் 1860 - பெண்டிரால் கெடுமிக்குடி தன்னைப் பேசுகின்றதென்?)

பொங்கத்தங் கூத்து நிகழ்வதற்கு முன்பே இராவணன் இறந்துவிட்டதாக ஒரு பாடலிலும் (இரவணன் பட்டான்) எங்களை விட்டுவிட்டு உனக்குத் துன்பமிழைத்த அவனை மட்டும் கொல் (இலங்கைக் கிறைதன்னை எங்களையொழியக் கொலையவனை) என்று இன்னொரு பாடலிலும் குறிப்பிடுவதில் முரண்பாடு தெரிகிறது.

இரண்டாவது பத்தில் இடம்பெறும் குழமணித் தூரம் என்கிற ஆடலை அடுத்த கட்டுரையில் காண்போம்.
this is txt file�
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.