http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 106

இதழ் 106
[ ஏப்ரல் 2014]


இந்த இதழில்..
In this Issue..

பானை, குடம், கலம்
Gokarneswara - 4
Chola Ramayana 13
தேடலில் தெறித்தவை - 12
திருநறையூர்
வாசிப்பில் வந்த வரலாறு - 5
புத்தகத் தெருக்களில் - நான், ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளுடன் - 1
இதழ் எண். 106 > இலக்கியச் சுவை
புத்தகத் தெருக்களில் - நான், ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளுடன் - 1
ரிஷியா

பல மாபெரும் தமிழர்களைப் புத்தகத் தெருக்களில் நான் சந்தித்த வேளையில் என் மனதைக் கவர்ந்தவர்களில், திரு. ஆனந்தரங்கம் பிள்ளையும் ஒருவர். தன் சமகால நிகழ்வுகளைத் தன் "தினசரி"யில் குறித்து வைத்துத் தமிழனின் எழுத்துலகில் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியாக மிகப்பெரிய சாதனையாளராகத் திகழ்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த ரங்கம் பிள்ளை அவர்கள்.

நாட்குறிப்பு என்ற இலக்கிய வடிவில் இது ஈடு இணையற்றது என்றே பெருமையுடன் கூறவேண்டும். கி.பி. 1736-1761 ஆண்டுகளில் தமிழர் வாழ்வுநிலை, இந்திய பிரெஞ்சு (Indo-French) அரசுகளின் நிலை, போர் நிகழ்வுகள், வாணிப நிலவரங்கள், கப்பல் போக்குவரத்து எனப் பற்பல கூறுகளைச் செய்திகளின் தொகுப்பாய் எழுதியுள்ளார் தம் தினசரியில்.

09-09-1736 அன்று காலை, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தமிழ் வணிகரான அவர், தன்னைச்சுற்றி நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதத் தொடங்குகிறார். 25 ஆண்டுக்காலம் இடையறாது எழுதப்படும் இத்தினசரியில் புதுச்சேரியின் வரலாறு, தமிழக வரலாறு நம் கண்முன்னே எழுத்துச் சித்திரங்களாய் உருவெடுக்கின்றன. நம்மை கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரலாற்றுக் காலத்திற்கு அழைத்துச் சென்று நம்மை ஆழ்ந்த வியப்பில் சிக்கவைக்கின்றன. ஒரு மிகப்பெரிய நாட்குறிப்பு இலக்கியமாகப் பதிவுபெற்று, ஒரு மிகச் சிறந்த வரலாற்றுக்களமாக நம் ஆவலைத் தூண்டச் செய்கிறது.

அந்த 18ம் நூற்றாண்டிலேயே ஒரு தமிழன் உலகிற்கெல்லாம் முன்னோடியாய் ஒரு புதிய நவீன இலக்கிய வகைக்கு வித்திட்டது விந்தையிலும் விந்தையே, சாதனையிலும் சாதனையே. அத்தமிழனின் தொலைநோக்கு சிந்தனையும் வரலாற்றுத் தாகமும் நீண்டதொரு உரைநடை நூலை நமக்கு வழங்கியுள்ளது.

"நான் சவால் விடமுடியும், உலக இலக்கிய வரலாற்றில் இதுவே முதன்மையானது. திரு. ஆனந்தரங்கம்பிள்ளையே இவ்விலக்கிய வடிவிற்கு முன்னோடி. இத்தமிழனே இவ்வகை இலக்கியத்தில் முன்னோடி".

சென்னையில் ஏழுகிணறு பகுதியில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் பிள்ளைப் பருவத்தைக் கழித்த திரு. ஆனந்தரங்கம்பிள்ளை பின்னாளில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ்ப் பெரிய துபாஷியாக உயர்வு பெறுகிறார். அதன் பின்னும் தன் "நாட்குறிப்பு"களைத் தவறாமல் பதிவு செய்கிறார்.

திரு. ஆனந்தரங்கம்பிள்ளையின் வரலாற்று ஆர்வம் ஏனைய சமகாலத் தமிழரிடையே ஏன் காணப்படவில்லை? இந்த வரலாறுப் பதிவைப் பதியவைக்கும் சீரிய ஆர்வத்தின் மூலகாரணி என்ன? என்பதெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டவில்லை என்றாலும் "அவர் ஒரு யுக புருஷர்" என்று மனதாரப் பாராட்டாமல் இருக்கவியலாது. தமிழ் இலக்கியம் கண்ட ஒரு புதுயுகச் சிந்தனையாளன்.

அவர் சொல்கிறார், "காதால் கேட்பனவற்றையும் கண்ணால் காண்பனவற்றையும் கப்பல்களின் போக்குவரத்தையும் அவ்வப்பொழுது நடைபெறும் அதிசயங்களையும் குறித்து வைக்க நான் துவங்குகின்றேன்" எனத் தமது நாட்குறிப்பில் குறிப்பிடுகின்றார்.

20-09-1749 - பிள்ளைவாள் அவர்களுக்கு துபாஷி பட்டத்தை அளித்தார் கவர்னர் டூப்ளே.

20-04-1753 அன்று எழுதுகிறார், "நான் இங்கு புதுச்சேரியில் 33 வருஷங்களாக இருக்கிறேன். பதினான்கு ஆண்டுகள் "டூப்ளே" புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக இருந்து வருகிறார்.

இத்தினசரி ஒரு மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. பல தரவுகள் என்னைக் கவர்ந்தாலும், திருக்கோயில்கள் பற்றிய நிலையை விவரிக்கும் பகுதிகளை நான் விரும்பிப் படித்தேன்.

17ஆம் நூற்றாண்டில் அன்றைய புதுச்சேரிப் பட்டணத்தில் முக்கியமான கோயில்களாக விளங்கியவை மணக்குள விநாயகர் கோயில், செட்டிக்கோயில் எனப்பட்ட காளத்தீஸ்வரன் (இது இடங்கை சாதியினருக்கு) மற்றும் பெருமாள் விண்ணகரங்கள்.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.