http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 111

இதழ் 111
[ செப்டம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள்
தேவூர்
கோமுகம்
Arivar Koil - 1
தென்னவன் தோள்துஞ்சிய வேப்பம்பூமாலையே!
இதழ் எண். 111 > கலையும் ஆய்வும்
கோமுகம்
கி.ஸ்ரீதரன்
கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு அபிடேக ஆராதனைகள் செய்து மகிழ்ச்சி அடைகிறோம். இறைவனுக்கு நாம் படைக்கும் நீர், பால், தேன் போன்ற அனைத்துப் பொருட்களும் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதால் இறைவனுக்கு அபிடேகம் செய்யப்பட்ட பொருட்களைப் "நிர்மால்யம்" என அழைக்கிறோம். "நிர்மலன்" என்பது இறைவனுக்கு உரிய பெயராகும். இதன் பொருள் "மாசற்றவன்" என்பது. கல்வெட்டுகளிலும் இறைவனை "நிர்மலன்" என்றே குறிப்பிடுவதைக் காண்கிறோம். "நிர்மலன் கோயிற் குடதிசை", "நிர்மாலிய சாங்கரியமாய்" என்ற சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறன.

இறைவனுக்கு அபிடேகம் செய்த பால், தேன், நீர் போன்ற பொருட்கள் கருவறையிலிருந்து வெளியேறுவதற்காக சிறுதுவாரம் காணப்படும். இதற்கு "நிர்மால்ய துவாரம்" என்று பெயர். கருவறையிலிருந்து வெளியேறும் நீர் வெளியே வழிந்தோடும் வழி எழில்மிக்கதாக அமைக்கப்படும். இதனை "சித்திரநாளம்" எனவும் "கோமுகம்" என்றும் சிற்பநூல்கள் குறிக்கின்றன.


சிற்பச் சென்னூலில் இடம்பெற்றுள்ள கோமுக இலக்கணம்


கோமுகம் பல்வேறு தோற்றங்களில் பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திருக்கோயில்களில் காணப்படுகிறன. சில கோயில்களில் கோமுகம் எளிமையாகக் காணப்பட்டாலும் தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற கோயில்களில் சங்கு ஊதும் பூதகணம் தாங்குவதுபோல அமைக்கப்பட்டுள்ளது.


பூதம் தாங்கும் கோமுகம் - கங்கை கொண்ட சோழபுரம்



பூதத்தில் வாயிலிருந்து வெளிப்படும் நீர்வழி - தாராசுரம்


கோமுகையிலிருந்து வரும் அபிடேகநீர் தொட்டி போன்ற கட்டட அமைப்பில் விழுந்து வெளியேறும். இதனை "நிர்மால்யத் தொட்டி" எனக் கூறுவர். காரைக்குடி அருகே உள்ள நென்மேனி என்ற ஊரில் உள்ல வன்மீகநாத சுவாமி கோயிலில் உள்ள நிர்மால்யத் தொட்டி, குணபரன், கைவேலழகியார் என்போர் தானமாகச் செய்தளிக்கப்பட்டது. இதனை அதன்மேல் உள்ள கல்வெட்டு,

"ஸ்வஸ்திஶ்ரீ இந்த நின்மால்யத்தொட்டி குணபரன்
கைவேலழகியார் உள்ளிட்டார் தன்மம்"

(கி.பி. 13-ம் நூற்றாண்டு) என்று கூறுகிறது.

இதேபோன்று அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்க நிர்மால்யத்தொட்டி தஞ்சை பெரிய கோயிலில் சுப்ரமணியர் கோயிலின் கருவறை அருகே உள்ளது.

விஜயநகர, நாயக்கர் காலத்தில் கோமுகம் மேலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கதாக விளங்குகின்றன. உதாரணமாகத் திருக்குறுங்குடி கோயிலில் யாளியின் வாயிலிருந்து நாளம் வெளியே வருவதாக அமைந்துள்ளது.

சிற்பி தன் திறமைக்கு ஏற்ப அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கோமுகத்தை அமைத்திருப்பதைப் பல திருக்கோயில்களில் காணலாம். அவற்றுள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வழங்குகிறோம்.



மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் திருக்கோயில் கோமுகம்



களக்காடு சத்யவாகீசுவரர் திருக்கோயில் கோமுகம்




பழுவேட்டரையர் கலைமரபில் அமைந்த மேலப்பழுவூர் திருக்கோயில்களுள் ஒன்றில் எளிய கோமுகம்




பூவனுர் திருக்கோயில் கோமுகம்


திருக்கோயில்களில் காணப்படும் "கோமுகம்" எனும் பகுதி சிற்பிகளின் கற்பனைக்கு எண்ணற்ற சான்று பகர்கின்றன எனில் மிகையில்லை.

மேலும் படிக்க (நூல்கள்)

1. சிற்பச் செந்நூல் - வை. கணபதிஸ்தபதி - 1978
2. ஓவியக்கோடுகள் - கோ. திருஞானம் (கோமுகை இலக்கணம்)
3. நிர்மால்யத்தொட்டிக் கல்வெட்டு - சொ. சந்திரவாணன் - கல்வெட்டு இதழ் : 68 (அக்டோபர் 2005)
4. கோயிலும் குடியிருப்பும் - கி.ஶ்ரீதரன், ஸ்தபதி வே. இராமன், தமிழர் நாகரீகம் - தொல்லியல்துறை வெளியீடு - 1994.
5. பல்வேறு கோயில்களில் காணப்படும் "கோமுகங்களின்" நிழற்படங்களை அளித்து உதவியவர் வரலாற்று ஆர்வலர் லால்குடி வேதநாராயணன் - லண்டன்.
6. தகவல்களுக்கு நன்றி : ஸ்தபதி வே. இராமன், திருச்சி.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.