http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 115

இதழ் 115
[ ஜனவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வயலும் வளமும்
Revolution in Reclamation
பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றி மாடம்
தேடலில் தெறித்தவை - 19
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 9
Kundardarkoil-2
இந்திர விழா
இதழ் எண். 115 > இலக்கியச் சுவை
இந்திர விழா
ரிஷியா
வேந்தன் மேய தீம்புனல் உலகம் எனத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசும் மருத த்தின் தெய்வம் அவன். தேவர்களின் தலைவனும் அவனே. வான்மழையின் கடவுளும் அவனே.

அவன் இந்திரன். கார்காலத்தில் பெருமழைக்குப்பின் வானில் தோன்றும் வானவில்லை அவன் பெயரால் இந்திர வில் என்று அழைப்பர்.

நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக க் கொண்டு விளங்கியது அந்நாளைய மருத நிலம். ஆகவே தீம்புனல் உலகம் என்று பெயர் பெற்றது.

சங்க காலத்தில் மருத நில மக்கள் இந்திரனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து அவனைப் போற்றினர். அதனை இந்திரவிழா என்று அழைத்தனர்.

ஐங்குறுநூறில் மருத த் திணையைப் பாடும் ஓரம்போகியார் சங்க காலத்தில் இந்திரவிழா தமிழர்களால் சிறப்பாக க் கொண்டாடப்பட்ட செய்தியைப் பதிவுசெய்கிறார். தலைவி கூற்றாக இடம்பெறும் அப்பாடல் இதோ!


தலைவி கூற்று

இந்திர விழவில் பூவின் அன்ன
………
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?



அதாவது, இந்திரவிழா நடத்துவதற்கு மங்கையரைத் தொகுத்தனை, நின் தேர் இனி எவ்வூரில் நிற்கும்? என்று வினவுகிறாள் தலைவி.

சங்க கால மக்களின் விழாவாக இந்திர விழா எடுக்கப்பட்டது என்கிற முதல் குறிப்பு இடம்பெறும் பாடலாக இதனைச் சுட்டலாம்.பின்னாளில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் புகாரில் நடந்த இந்திர விழா பெரிதும் சிறப்பித்துப் பாடப்பெற்றது.

மருத நிலத் தெய்வமான இந்திரனுக்கு விழா எடுத்துத் தமிழர்கள் வழிபட்டார்கள் என்பது மேற்கண்ட பாடல் வழி தேற்றம்.



இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.