![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 118
![]() இதழ் 118 [ ஏப்ரல் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மாயங்கள் பல புரியும் மாயோன். காயாம்பூ வண்ணன் அவன். அவன் ஆடிய பல கூத்துக்களில் குடக்கூத்தும் ஒன்று. வீடு வீடாக வெண்ணெய் திருடி உண்ட களிப்பில் அவன் ஆடிய கூத்து இதுவாக இருக்குமோ!
![]() திருவெள்ளறை குடக்கூத்தன் - தாங்குதளச் சிற்பம் சங்க இலக்கியமான பரிபாடலில் இக்கூத்து போசும் வரிகள் இசை நயத்துடன் தாளகதியுடன் இடம்பெற்றுள்ளன. 'இடவல குடவல கோவல காவல காணா மரப நீயா நினைவ..' (பரிபாடல் 3; 83 - 84. விளக்கம்; அதாவது ஆய்ச்சியரோடு குரவை கோர்த்தலால் அவர்களுக்கு இடமும் வலமும் ஆயினோய்! குடக்கூத்தாட எடுத்த குடத்துடையோய்! அலப்படையை உடையோய்! கோவல! காத்தல் தொழிலுடையோய்! அறியப்படாத மரபினோய்! நினைவின் கண் உள்ளோய்! என்பதாகும். குடக்கூத்து பற்றிய தொன்மையான குறிப்புக்களுள் இதுவும் ஒன்று. முற்பல்லவர் காலத்தைச் சார்ந்த சிலப்பதிகாரமும் குடக்கூத்து பற்றிப் பேசுகிறது. 'குடத்தாடல் குன்றெடுத்தோ னாடலதனுக் கடைக்குவ வைந்துறுப் பாய்ந்து' என்றும் ' வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோனாடிய குடமும்' - சிலப்பதிகாரம் 6; 54-55 குடக்கூத்தாவது ஒன்று அல்லது பல குடங்களை தலையிலும் தோள்களிலும் மார்பிலும் வைத்து ஏந்தியபடி குதித்தாடும் கூத்தாகும். குடக்கூத்தாடும் கண்ணனின் பல்வேறு சிற்ப வடிவங்களை திருவெள்ளறை, கிராமம் முதலான திருக்கோயில்களில் காணலாம். பக்தி இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்த த்தில் ஆழ்வார்கள் கண்ணனின் குடக்கூத்தைப் பலபடப் பாடியுள்ளனர். 'குடமாடீ' என்றும் 'குடமாடிய கூத்தனை' என்றும் 'குடமாடு தடமார்பா' என்றும் 'குடங்க ளெடுத்த விட்டுக் கூத்தாட வல்ல எங்கோவே' என்றும் பல்வேறு விதங்களில் அவர்களின் படப்பிடிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. கண்ணனின் குடக்கூத்து தென்னக மரபில் மட்டுமே காணக்கிடைக்கிறது என்பது சிறப்பு. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |