![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 141
![]() இதழ் 141 [ ஏப்ரல் 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சைவ,வைணவ தலங்களில் சிறந்த தலங்கள் மாயுரத்தைச் சுற்றி சிறப்பாக அமைந்து இவ்வூருக்கு மேலும் பெருமை கூட்டுகிறது. குடகில் தோன்றும் காவிரி அன்னை கடலில் கலக்கும் முன்பு மக்களுக்கு "கடை முழுக்கு" வழங்கும் சிறப்பான தலமாக மாயவரம் விளங்குகிறது. நூற்றியெட்டு திவ்ய தேசத்தலங்களில் காவிரியின் கரையில் எழிலுற அமைந்துள்ள பஞ்ச ரங்க ஷேத்திரங்களில் கடைசியாக அமைந்துள்ள திரு இந்தளூர் பரிமள ரங்க ஷேத்திரம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திவ்ய ஷேத்திரம் ஆகும். மாயவரத்துக்கு அருகில் ஒரே இடத்தில் பதினோரு திவ்ய தேச ஷேத்திரங்கள் அமைந்த திரு நாங்கூர் அமைந்துள்ளது.
அட்டவீரட்டானம் என்பது சிவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது. அவைகளில் ஐந்து தலங்கள் மாயூரத்தை சுற்றி அமைந்துள்ளன என்றால் மாயவரத்தின் முக்கியத்துவத்தை என்னென்று சொல்வது?. திருக்கண்டியூர் ,திருக்கோவலூர் , திருவதிகை நீங்கலாக திருப்பறியலூர், திருவிற்குடி ,திருவழுவூர்,திருக்குறுக்கை மற்றும் திருக்கடவூர் ஆகிய ஐந்து வீரட்டங்கள் மயிலாடுதுறைக்கருகில் அமைந்துள்ளன. அரிய வகை மாடக்கோயில்கள் அதிகம் மயிலாடுதுறையைச் சுற்றி அமைந்துள்ளன. நவக்கிரக ஆலயங்கள் அனைத்துமே மயிலாடுதுறையிலிருந்து சென்று வரத்தக்க தொலைவிலேயே அமைந்துள்ளன. அவைகளில் குறிப்பாக வைத்தீஸ்வரன் கோயில்,திருவெண்காடு,கீழப் பெரும்பள்ளம், திரு நள்ளார், சூரியனார் கோயில் ,கஞ்சனூர் மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய ஏழு கோயில்கள் மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தொலைவிற்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிற்பச் செழுமை மிகுந்த பொன்செய் ஆலயம் மாயவரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. சமீபத்தில் மாயூரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தளூரில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வரலாற்றையே மாற்றி எழுதும் தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளன. மாயவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள “பெருஞ்சேரி” என்ற கிராமத்திலமைந்துள்ள வாகீசுவரம் என்னும் சிவாலயம் மூன்றாம் குலோத்துங்கன் கால கற்றளியாகும். இது கட்டுமானக் கோயில்களில் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இது நாகரம் மற்றும் வேசரம் ஆகிய இரு விமான வடிவங்களையும் உள்ளடக்கிய அற்புதமான ஆலயமாகும். இவ்வாறு மாயவரத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ![]() |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |