http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 171

இதழ் 171
[ செப்டம்பர் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கள் நெஞ்சில் நிறைந்த வேணிதேவி
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART II- ‘THUDI’
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS : PART I- AN INTRODUCTION
இராஜராஜீசுவரத்தின் 82 நந்தாவிளக்குகள் - 2
சோழர் கால ஊரார்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 46 (காதலுக்கு ஏது சுக்கான்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 45 (வெறுமை இறப்புதான் முடிவோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 44 (காதல்வலி விதைக்கும் வெறுப்பு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 43 (தேடலும் மறத்தலும்)
இதழ் எண். 171 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 44 (காதல்வலி விதைக்கும் வெறுப்பு)
ச. கமலக்கண்ணன்


மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

あふことの
たえてしなくは
なかなかに
人をも身をも
恨みざらまし

கனா எழுத்துருக்களில்

あふことの
たえてしなくば
なかなかに
ひとをもみをも
うらみざらまし

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் அசாததா

காலம்: கி.பி. 910-966.

இத்தொடரின் 25வது பாடலான "கொடிவழிச் செய்தி"யை இயற்றிய புலவர் சதாகத்தாவின் 5வது மகன் இவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிறந்த கவிஞராகப் பாராட்டப்பட்டார். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவர் இறப்புக்குப் பின்னர் நாளடைவில் இவரது புகழ் மங்கிக்கொண்டு வந்தது என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 21 பாடல்கள் இவரது தனிப்பாடல் திரட்டாக இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். கவிஞர் மட்டுமின்றிப் புல்லாங்குழல் வித்தகரும்கூட.

பாடுபொருள்: காதலின் வலியால் பிறரை வெறுப்பது

பாடலின் பொருள்: உன்னை இனி நான் சந்திக்கும் வாய்ப்பே ஏற்படப்போவதில்லை என்பது தெரிந்திருந்தால் என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் வெறுக்கத் தொடங்கியிருக்க மாட்டேன்.

இத்தொடரின் பாடல்கள் 40, 41 போல இதுவும் பேரரசர் முராகமி அரசவையில் நடத்திய அதே போட்டியில் பாடியது. இவரது இணையாகப் போட்டிப்பாடல் பாடியவர் ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த மொத்தோஜானே. 40, 41வது பாடல்கள் காதல் வயப்பட்டிருக்கும் நிலையில் பாடப்பட்டவை. இது கைகூடாத காதலின் வலியைப் பாடியது.

இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான். சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் சிலரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா எனப் பலரும் துன்பப்படுகிறார்கள் என்பதுதான்.

கொக்கின்ஷூ, கொசென்ஷூ போன்று அவற்றின் சமகாலத்தில் தொகுக்கப்பட்ட ஹச்சிதாய்ஷோ என்ற தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் காதலின் படிநிலைகள் வரிசையில் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இப்பாடல் பெற்றிருக்கும் இடத்தை வைத்துப் பார்க்கும்போது சந்தித்தபின் ஏற்பட்ட வலி என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

வெண்பா:

காதல் வலியது அன்பினில் நேர்ந்ததே
சாதல் கடுமையும் தீர்க்கவும் - வேதனை
கூட்டவும் தாழ்த்தவும் ஆக்கும் உனது
பிரிவால் விளையும் வெறுப்பு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.