http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 172

இதழ் 172
[ அக்டோபர் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

கலை, இலக்கியத்தில் பேய், பிசாசு, பூதம்
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART IV- THIMILAI AND IDAKKAI
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART III- DAMARUGAM AND UDUKKAI
ஜப்பானியப் பழங்குறுநூறு - 50 (இறப்பினும் வாழினும் ஒந்தொடிகண்ணே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 49 (விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 48 (இதயஅலை மோதும் மனக்கல்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 47 (நலிவுதான் தனிமைக்குத் துணையோ?)
இதழ் எண். 172 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 50 (இறப்பினும் வாழினும் ஒந்தொடிகண்ணே!)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

君がため
惜しからざりし
命さへ
長くもがなと
思ひけるかな

கனா எழுத்துருக்களில்
きみがため
をしからざりし
いのちさへ
ながくもがなと
おもひけるかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் யொஷிதகா

காலம்: கி.பி. 954-974.

இத்தொடரின் 45வது பாடலை (வெறுமை இறப்புதான் முடிவோ?) இயற்றிய இளவரசர் கொரேததாவின் மகன் இவர். பிற்காலத்தில் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்த யுக்கினாரி இவரது மகன் ஆவார். யுக்கினாரி பிறக்கும்போது யொஷிதகாவுக்கு வயது 18தான். தனது 21ம் வயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டு இவரும் இவரது இரட்டைச் சகோதரனும் இறந்துவிட்டார்கள்.

தீவிரமாகப் புத்த மதத்தைப் பின்பற்றியவர். கி.பி 1119ல் இயற்றப்பட்ட ஒகாகமி என்ற நூலில் இவரது மரணத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. தான் இறந்தபிறகு எரியூட்டவேண்டாம் எனத் தன் தாயிடம் கடைசி ஆசையாகக் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மீண்டும் உயிர்பெற்று தாமரைச் சூத்திரம் நூலைப் படித்துப் புத்தரின் பாதங்களை அடைய விரும்பினார். ஆனால் இவரது தாய் இதைப் பொருட்படுத்தாமல் யொஷிதகாவின் உடலை எரியூட்டிவிட்டார். எனவே அடிக்கடி இவரது தாயின் கனவில் தோன்றிக் கடிந்து கொண்டிருந்தார். பின்னர் வானுலகில் இவர் நிரந்தரமாக இருந்ததாக அந்நூல் குறிப்பிடுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 12 பாடல்கள் உள்ளன.

பாடுபொருள்: காதலியைக் காணும் முன்பும் கண்டபின்பும் ஏற்படும் மாற்றங்கள்

பாடலின் பொருள்: உன்னைக் காணும்முன் இறந்தாலும் கவலையில்லை என்றே எண்ணினேன். ஆனால் உன்னைப் பார்த்தபின்பு உன்னுடன் வாழ்வதற்காகவே நீண்டகாலம் வாழ விரும்புகிறேன்.

தொடர்ச்சியான பல காதல் தோல்விப் பாடல்களுக்கு அடுத்து ஒரு மகிழ்ச்சிப்பாடல். நேரடியாகப் பொருள்தரும் ஓர் எளிய அகப்பாடல். காதலர்கள் இரவில் சந்தித்துவிட்டு மறுநாள் காலை பாடல் புனைந்து அன்பைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் வழக்கம் இருந்துவந்தது எனப் பார்த்தோமல்லவா? அதுபோன்ற இன்னொரு வழக்கம்தான் மூன்று இரவுகள் தொடர்ச்சியாக ஒன்றாகத் தங்குவது. காதலன் காதலியின் இல்லத்துக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மூன்று இரவுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டும். பின்னர் நான்காம் நாள் காலை பெண்ணின் பெற்றோர்க்குத் தன்னை வெளிப்படுத்தியபின் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதப்படும்.

வெண்பா:

மறைவில் கலங்கேன் உயிரின் பிரிவைக்
குறைஇல் அகமுடன் ஏற்றேன் - நிறைமுக
வஞ்சியுன் காட்சியில் மாற்றினாய் எந்தன்
மகிழ்வுக்கு வேண்டாம் முடிவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.