![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 172
![]() இதழ் 172 [ அக்டோபர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 君がため 惜しからざりし 命さへ 長くもがなと 思ひけるかな கனா எழுத்துருக்களில் きみがため をしからざりし いのちさへ ながくもがなと おもひけるかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் யொஷிதகா காலம்: கி.பி. 954-974. இத்தொடரின் 45வது பாடலை (வெறுமை இறப்புதான் முடிவோ?) இயற்றிய இளவரசர் கொரேததாவின் மகன் இவர். பிற்காலத்தில் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்த யுக்கினாரி இவரது மகன் ஆவார். யுக்கினாரி பிறக்கும்போது யொஷிதகாவுக்கு வயது 18தான். தனது 21ம் வயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டு இவரும் இவரது இரட்டைச் சகோதரனும் இறந்துவிட்டார்கள். தீவிரமாகப் புத்த மதத்தைப் பின்பற்றியவர். கி.பி 1119ல் இயற்றப்பட்ட ஒகாகமி என்ற நூலில் இவரது மரணத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. தான் இறந்தபிறகு எரியூட்டவேண்டாம் எனத் தன் தாயிடம் கடைசி ஆசையாகக் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மீண்டும் உயிர்பெற்று தாமரைச் சூத்திரம் நூலைப் படித்துப் புத்தரின் பாதங்களை அடைய விரும்பினார். ஆனால் இவரது தாய் இதைப் பொருட்படுத்தாமல் யொஷிதகாவின் உடலை எரியூட்டிவிட்டார். எனவே அடிக்கடி இவரது தாயின் கனவில் தோன்றிக் கடிந்து கொண்டிருந்தார். பின்னர் வானுலகில் இவர் நிரந்தரமாக இருந்ததாக அந்நூல் குறிப்பிடுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 12 பாடல்கள் உள்ளன. பாடுபொருள்: காதலியைக் காணும் முன்பும் கண்டபின்பும் ஏற்படும் மாற்றங்கள் பாடலின் பொருள்: உன்னைக் காணும்முன் இறந்தாலும் கவலையில்லை என்றே எண்ணினேன். ஆனால் உன்னைப் பார்த்தபின்பு உன்னுடன் வாழ்வதற்காகவே நீண்டகாலம் வாழ விரும்புகிறேன். தொடர்ச்சியான பல காதல் தோல்விப் பாடல்களுக்கு அடுத்து ஒரு மகிழ்ச்சிப்பாடல். நேரடியாகப் பொருள்தரும் ஓர் எளிய அகப்பாடல். காதலர்கள் இரவில் சந்தித்துவிட்டு மறுநாள் காலை பாடல் புனைந்து அன்பைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் வழக்கம் இருந்துவந்தது எனப் பார்த்தோமல்லவா? அதுபோன்ற இன்னொரு வழக்கம்தான் மூன்று இரவுகள் தொடர்ச்சியாக ஒன்றாகத் தங்குவது. காதலன் காதலியின் இல்லத்துக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மூன்று இரவுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டும். பின்னர் நான்காம் நாள் காலை பெண்ணின் பெற்றோர்க்குத் தன்னை வெளிப்படுத்தியபின் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதப்படும். வெண்பா: மறைவில் கலங்கேன் உயிரின் பிரிவைக் குறைஇல் அகமுடன் ஏற்றேன் - நிறைமுக வஞ்சியுன் காட்சியில் மாற்றினாய் எந்தன் மகிழ்வுக்கு வேண்டாம் முடிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |