http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > சுடச்சுட
மகப்பேற்றின் கொண்டாட்டம்
மு. நளினி
வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளைச் சிற்பங்களாகப் படம்பிடித்து வைத்திருக்கும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களும் தேர்களும் காலங்காலமாய் மக்களுக்குக் கல்வியூட்டும் வளாகங்களாய்த் திகழ்ந்து வருகின்றன. வழக்கமான களஆய்வுகள் ஒன்றின்போது தேரொன்றில் கிடைத்த மகப்பேறு சிற்பம், வழக்கமாகக் கிடைக்கும் மகப்பேறு சிற்பங்களிலிருந்து வேறுபட்டு அமைந்திருந்தது. தாய்மையின் நிறைவில் மகவை வெளிப்படுத்தும் தாயும் அந்தத் தாயைத் தாங்கியவாறு அவள் கருவுயிர்க்க உதவும் செவிலியும் தாயின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் குழந்தையைக் கையில் ஏந்திடும் தலைமைச் செவிலியும் இந்தத் தேர்ச் சிற்பத்தின் பின்னணியில் விளங்கும் மரத்தச்சரின் வரலாற்றுப் பார்வைக்குக் காலம் காத்துத் தந்திருக்கும் கவினுறு சான்றுகளாவர்.



மகவை ஈனும் தாய் ஆடைகளற்ற நிலையில் இரண்டு கால்களையும் இயன்ற வரையில் விரித்தவாறு வலித் துன்பத்துடன் நிற்கிறார். அவர் வலப்புறத்தே நிற்கும் செவிலி தம் வலக்கையால் தாயின் வயிற்றை வருடியவாறே, இடக்கையால் அவ்வம்மையின் முதுகைத் தாங்கலாய்ப் பிடித்துள்ளார். வளமான தலைமுடியைப் பெருங்கொண்டையாய் முடித்துள்ள செவிலியின் இடையில் பட்டாடையும் இடைக்கட்டும் உள்ளன. இடுப்பிற்கு மேல் ஆடையில்லை. கைகளில் வளைகள். செவிகளில் தோடுகள்.

வெளிப்படும் குழந்தையை உயர்த்திய கைகளில் வாங்கத் தாயின் கால்களுக்கிடையில் முக்காலியிட்டு அமர்ந்திருக்கும் தலைமைச் செவில்ியும் பட்டாடை அணிந்துள்ளார். கொண்டையிட்ட தலைமுடியும் பனையோலைக் குண்டலங்களும் அணிந்துள்ள அவருக்கும் இடுப்பிற்கு மேல் ஆடையில்லை.

இரண்டு செவிலிகளின் முகங்களிலும் எதிரொலிக்கும் மகிழ்வை ஊருக்குச் சொல்வார் போல் இடப்புறத்தே பறையொலித்து ஆடும் கூத்தரின் தலையில் தலைப்பாகை. இடையில் பட்டாடை. தாடி, மீசையுடன் சற்றே வயதானவர் போல் காட்சிதரும் அவருடைய கைகளில் வளைகள்.

தமிழ்நாட்டின் பல திருக்கோயில்களில் மகப்பேறு காட்சி சிற்பமாக அமைந்துள்ளது என்றாலும், குழந்தையை ஏந்தும் செவிலி முக்காலியில் அமர்ந்திருப்பதும் பிறப்பை ஊருக்குச் சொல்லக் கூத்தர் பறையொலிப்பதும் இந்தத் தேர் தவிர வேறெங்கும் கண்டதில்லை.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.