http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > சுடச்சுட
எப்பாடு பட்டாகிலும்!
மு. நளினி
சென்ற வாரம் மதுரைக்கு அருகிலுள்ள அழகர்கோயில் சென்றிருந்திருந்தோம். கோயில் பெருமண்டபத் தூணொன்றின் சதுரத்தில் வியப்பூட்டும் சிற்பமொன்றைக் கண்டோம். இதுவும் மகப்பேற்றின் மகத்துவம் காட்டும் சிற்பம்தான். கி. பி. 16ம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் இருந்த மகப்பேறு மருத்துவ முறைகளையும் மகப்பேற்றின்போது தாய் அனுபவிக்கும் வலித் துன்பத்தையும் இச்சிற்பம் சிறப்பாகப் படம்பிடித்துள்ளது.

பெருங்கொண்டையும் பதக்கக் குண்டலங்களும் செவிப்பூக்களும் தோள், கைவளைகளும் அணிந்துள்ள தாயின் இரண்டு கைகளும் இருபுறத்தும் அமர்ந்திருக்கும் இரண்டு முதிய பெண்களின் தோள்களை அணைத்துள்ளன. இடக்கை இடப்பெண்ணின் மார்பகத்தின்மீது அழுந்தியுள்ளது. தாயின் வலப்பாதம் வலப்பெண்ணின் இடப்பாதத்தின் மேல் தாங்கலாக இருத்தப்பட்டுள்ளது. மகவு வெளிப்படும் நிலையில் ஏற்படும் தாயின் வலித்துன்பத்தை முகம் நன்கு வெளிக்காட்டுகிறது.



தாயின் அணைப்பிற்கு உட்பட்டு அவரைத் தாங்கியுள்ள இரண்டு பெண்களும் பட்டாடை அணிந்துள்ளனர். படிய வாரிய தலையும் நீள்செவிகளும் பெற்றுள்ள அவர்தம் உட்கைகள் பிறக்கும் குழந்தையின் பக்கவாட்டுப்பகுதிகளைத் தாங்குமாறு போல நீட்டப்பட்டுள்ளன. தாயின் விரிந்த கால்களுக்கு இடையில் இருக்குமாறு கால்களை மடக்கிப் படுத்துள்ள செவிலியர் இருவருள் அனுபவம் வாய்ந்த வலப்பெண், வெளிப்படும் மகவைத் தாங்கி ஏற்றுக்கொள்ளுமாறு போலத் தம் இருகைகளையும் விரித்து உயர்த்தியுள்ளார். இருவருமே படிய வாரிய தலையுடன் கணுக்கால்வரை நீளும் இடையாடை அணிந்துள்ளனர். இருவருமே பழுத்த மருத்துவர்கள் என்பதை அவர்தம் திரங்கிய மார்பகங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

சிக்கலான இந்த மகப்பேறு எப்படி முடியுமோ, எவ்வாறெல்லாம் செயற்பட வேண்டியிருக்குமோ எனப் பல்வேறு சிந்தனைகளின் வயப்பட்டு ஒருவருக்கு இருவராய் மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியருள் இடச்செவிலி, மகவு வெளிப்பட்டுத் தலைமைச் செவிலியால் வாங்கப்படும் நிலையில் உளம் பூரித்து, முகம் மலர இறைவனுக்குக் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறார்.

சிக்கலான மகப்பேறு துன்பமின்றி முடிந்தமைக்கு இறைவனுக்கு நன்றி பாராட்டுமாறு தாயின் வலப்புறத்தும் இடப்புறத்தும் மேலிருக்குமாறு காட்டப்பட்டுள்ள தந்தையும் கணவரும் எனக் கருதத்தக்க ஆடவர்கள் இருவர் தலைக்கு மேல் கை உயர்த்தி வணங்கி மகிழ்கின்றனர். மகப்பேற்றின் கொண்டாட்டத்தை மேத்திங்களில் கண்டுமகிழ்ந்த கண்களுக்குத் தமிழ்நாட்டு மருத்துவப் பெண்களின் மகத்துவம் காட்டும் சிற்பம் இது. இதே போன்றதொரு சுதை வடிவம் திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோயிலிலும் காணப்படுகிறது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.