http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 67

இதழ் 67
[ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
இத்திருமலை செய்வித்தார்
கோவணநாடகம்
திருவரங்கத்து வைகாசித் திருவிழா
அன்னபிராயம் செய்த நாள்கொடை
தமிழிலிருந்து வந்ததா ஜப்பானிய மொழி?
பண்டைய நாழிகை காட்டிகள்
இதழ் எண். 67 > இலக்கியச் சுவை
பண்டைய நாழிகை காட்டிகள்
ரிஷியா


நம் பண்டைத் தமிழர்கள் பலவகையான செயற்கைக் கருவிகளைப் பொழுதுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர். பொழுதை அளந்தறிவதற்கும், நேரத்தைச் சொல்வதற்கும் 'நாழிகைக் கணக்கர்' என்போர் அக்காலத்தில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய குறிப்புகளை இனி காணலாம்.

நாழிகைக் கணக்கர், குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை 'முல்லைப்பாட்டு' தனில் விளக்கமாகக் காணலாம்.

பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப

(முல்லைப்பாட்டு : 55-58)


நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்பேசாத நாழிகைக் கணக்கர்கள், மன்னனைக் கையால் தொழுதபடியே கண்டு வாழ்த்திக் 'கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்' என அறிவுறுப்ப - என்பதாம் இதன் விளக்கம்.

குறுநீர்க் கன்னல் என்பது நீர் நிறைந்த கலத்தின் அடியில் துளையிட்டு, அதன் வழியே ஒரேசீராக நீர் கசிந்து இறங்கும் நேரத்தைக்கொண்டு, நாழிகைகளைக் கணக்கிட உதவிய கருவி, சிறுசிறு துளியாக நீர் ஒழுகி வந்த காரணத்தினால் இந்தக் காலம் காட்டும் கருவியைக் குறுநீர்க் கன்னல் என்று வழங்கினர்.

மேலும், நாழிகைக் கணக்கர் பற்றிய ஒரு குறிப்பினை மதுரைக்காஞ்சியிலும் காணலாம்.

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப

(மதுரைக்காஞ்சி : 671-672)


வரிக்கூத்து முதலிய வேதாளிக்கூத்தினை ஆடுவோர் தத்தம் துறைக்கு உரியவற்றை இசைப்ப, நாழிகை சொல்லார் நாழிகைச் சொல்ல, பள்ளியெழுச்சி முரசம் முழங்க, ஏறுகள் மாறுபட்டு முழங்க... - என்பதாம் இதன் விளக்கம்.

நனிநாகரிகம் மிக்க தமிழர்கள் வேறு பல செயற்கைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

நீர்க் கன்னலைப் போலவே நீருக்கு மாற்றாக மணலைப் பயன்படுத்தும் கன்னல்களும் இருந்திருக்கின்றன.

காலேந்திரம், கடிகையாரம் போன்ற கருவிகள் பற்றிய குறிப்பினைப் பெருங்கதை என்னும் நூலில் காணலாம்.

செயற்கைக் கருவிகளை மட்டுமா பாங்குறப் பயன்படுத்தினார்கள் தமிழர்கள்? இயற்கைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இனிவரும் கட்டுரைகளில் காணலாம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.