http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 86

இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?
திரும்பிப்பார்க்கிறோம் - 33
தவ்வைத்தேவி
சேக்கிழாரும் அவர் காலமும் - 3
The Sapthamathas at Ayyarappar temple in Thiruvaiyaru
நன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா
இதழ் எண். 86 > இலக்கியச் சுவை
நன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா
ரிஷியா
நன்னன் என்ற சங்ககால மன்னன் பிறந்தநாள் பெரும் விழாவாகப் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. பண்டைய சங்க இலக்கியங்களில் கூர்ந்து அவதானிக்கும்போது இவன் ஒருவனின் பிறந்தநாள் விழா மட்டுமே இவ்வாறு நடந்தேறியுள்ளது.

நன்னனின் பெருமை பேசும் மதுரைக்காஞ்சியின் பாடல் வரிகள் இதோ.

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை

ஆசிரியர் : மாங்குடி மருதனார்
அடிகள் : 611 - 620


அஃதாவது, ஒரு பக்கத்தில், மிகுதியான அச்சத்தைத் தருகின்ற வெறியாடுபவனாகிய வேலன், முருகனையும், தம்மிடம் வந்தோரையும் ஆற்றலால் தன்வயப்படுத்துகிறான். இனிய இசைக் கருவிகளை இயக்கி முருகனை முன்னிலைப் படுத்துகிறான். கார்காலத்துப் பூக்கும் குறிஞ்சி மலரைக் கடம்ப மரத்தில் சூட்டிச் சிறப்புடைய முருகனை வழிபடுகிறான்.

ஒருவரோடு ஒருவர் தழுவிக்கொண்டு மன்றங்களில் குரவைக் கூத்தாடுகின்றனர். அங்குப் புகழ்ந்துரையும், புனைந்துரையும், பாடலோடு ஆடலும் நிகழ்கின்றன. இவற்றால் ஏற்படும் ஆரவாரம், பேரொலி மிகுந்த புகழ்படைத்த நன்னனுடைய பிறந்தநாள் விழாவில் விழா எடுத்து முழங்கும் முழக்கம் போன்ற பேராரவாரமாக இருந்தது. இவ்வாறு மதுரைநகரில் முதல் சாமம் கழிந்தது.

மதுரை மாநகரின் முதல்யாமக் காட்சிகளை இப்பாடல் படம்போட்டு விளக்குகிறது. இப்பாடல்வழி பெறப்படும் வரலாற்றுத்தரவு "நன்னன் பெரும்பெயர் நன்னாள்" என்னும் விழாவாகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.