http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 130

இதழ் 130
[ நவம்பர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

பத்துப்பாட்டில் கட்டடக்கலை - 1
சங்க காலத்தின் காலம்?
பூதவரியில் குதிரையும் சிங்கமும்
Ammai in Banteay Srei and the Tamil Maritime Links in South East Asia
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 3
இதழ் எண். 130 > பயணப்பட்டோம்
பூதவரியில் குதிரையும் சிங்கமும்
ச. கமலக்கண்ணன்

புள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலைப் பற்றி வரலாறு.காம் வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்தமாதம் கள ஆய்வுப் பணிக்காக அங்குச் சென்றிருந்தபோது இதுவரை கண்டிராத காட்சி ஒன்றைக் கண்டோம். வழக்கமாக வலபியில் காணப்படும் பூதவரிக்குப் பதிலாக வாத்துவரி, அன்னவரி ஆகியன இடம்பெற்றிருக்கும். சில கோயில்களில் ஓரிரு குரங்குகளும் சிங்கங்களும் இருக்கக் காணலாம். ஆனால் புள்ளமங்கையில் விமானத்தின் தென்முகக் கடவுளின் முன்னிழுக்கப்பட்ட கோட்டத்தின் கிழக்கு முகத்தில் உள்ள அரைத்தூணின் போதிகைக்கு மேலுள்ள உத்தரம், வாஜனத்திற்கு அடுத்துள்ள வலபியில் ஒரு குதிரையின் கழுத்தை ஒரு சிங்கம் கடிப்பது போன்ற ஒரு சண்டைக்காட்சி காட்டப்பட்டுள்ளது.

சற்று முன்னிழுக்கப்பட்ட வாஜனம் பீடம்போல அமைய, அதன்மீது பின்னங்கால்களை ஊன்றி, முன்னங்கால்களை வடக்கு நோக்கி உயர்த்தி, முகத்தைப் பின்புறமாகத் திருப்பியிருக்கும் குதிரையை அதன் எதிரில் இருக்கும் சிங்கம் இருகால்களாலும் குதிரையின் கழுத்தை அணைத்தபடி அதன் பிடரியில் கடிப்பது போன்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூதவரியில் குதிரையை எங்கும் கண்டிராததால், முதல் பார்வையில் குதிரை மற்றும் சிங்கத்தின் முகங்களை ஊகிக்கச் சற்றுக் கடினமாக இருந்தது. இருப்பினும் இரண்டின் வால்களையும் வைத்துக் குதிரையென்றும் சிங்கமென்றும் உறுதிப்படுத்த முடிந்தது. 

 


சோழர் வரலாற்றின் ஆரம்ப காலகட்டப் பணியான திருவாலந்துறையார் திருக்கோயிலின் கட்டடக்கலைக் கூறுகள் முழுமையான வளர்ச்சி பெற்றும் இதுபோன்ற அரிதான சிற்பங்களைக் கொண்டும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இன்னும் இதுபோல் எத்தனை இடங்களில் சோழச் சிற்பியர் மரபை ஒட்டியே மரபை மீறி இருக்கிறார்களோ!! இம்மின்னிதழின் பின்வரும் இதழ்கள் காத்திருக்கின்றன.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.