![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 153
![]() இதழ் 153 [ ஏப்ரல் 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பிறிந்தேன் நாகம் பிறவாத வண்ணம் [பொருள்: பழமையானவனும் இடைமருது வட்டம் என்னும் இவனுடைய எல்லையில் வந்து நான் பெற்ற பேறுகள் யாவையெனில் தீவினைப் பயனை நுகரும் இடமாகிய நரகத்தை விட்டு பிரிந்தேன். உருவமற்ற காமனின் அம்பில் பொருத வட்டமாகிய வில்லுக்குப் பிழைத்துவிட்டேன்] குலோத்துங்கசோழன் கல்வெட்டுகள் சோழர் பரம்பரையில் மூன்று குலோத்துங்கசோழர்கள் ஆட்சிபுரிந்தனர். இம்மூன்று மன்னர்களும் வெவ்வேறு மெய்கீர்த்திகளை உடையவர்கள் ஆவர். இம் மெய்கீர்த்திகள் கொண்டு இம்மூன்று மன்னர்களை அடையாளப்படுத்திவிடலாம். ஆனால் மெய்கீர்த்திகள் இல்லாமல் குலோத்துங்கன் என்ற பொதுப்பெயருடன் அழைக்கப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு இன்னார் என்று அடையாளப்படுத்துவது சிறிது கடினம். சோழர்களுடைய அசல் பரம்பரை அதிராஜேந்திரன் என்ற சோழனுடன் (கி.பி.1069-1070) முடிவுற்றது. (2) அதிராஜேந்திரன் சோழனுக்கு வாரிசு இல்லாததால் முதலாம் இராந்திரசோழனின் பெண் வழி பேரனும், கீழை சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவனுமாகிய இராஜேந்திரன் என்ற இயற் பெயர் கொண்டவன், (முதலாம்) குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன் சோழ அரியனை ஏறினான். இவன் கி.பி.1070 லிருந்து 1120 வரை 50 ஆண்டுகள் ஆட்சிபுரிதான்.(3) இவன் மகன் விக்கிரம சோழனின் மகன் (இராண்டாம்) குலோத்துங்கன் என்ற பட்டப்பெயருடன் கி.பி.1137லிருந்து 1154 வரை ஆட்சிபுரிந்தான்.(4) இவன் மகன் இரண்டாம் இராஜராஜனின் இரண்டாவது மகன் (மூன்றாம்) குலோத்துங்கன் என்ற பட்டப் பெயருடன் கி.பி.1178 லிருந்து 1218 வரை ஆட்சிபுரிந்தான். திருவிடைமருதூர் கோயிலில் மெய்க்கீர்த்திகள் இல்லாமல் குலோத்துங்கன் என்ற பொதுப்பெயருடன் உள்ள கல்வெட்டுகள் 5 கீழ்கண்டவாறு உள்ளன. . இவை எந்தெந்த குலோத்துங்கனுடையது என்பதை ஆராய்வோம். 1)ARE133/1895 2)ARE134/1895 3)279/1907 4)281/1907 5)308/1907 1)ARE133/1895 S.I.I. Vol.15 No:697 இக் கல்வெட்டு இன்னார் என்று அடையாளப்படுத்தும் மெய்கீர்த்தி இல்லாமல் பொதுவான பெயர் குலோத்துங்கன் என்ற பெயரில் உள்ளது. ஆனால் இக்கல்வெட்டில் குலோத்துங்கனின் ஆட்சியாண்டு 49 என குறிப்பிடப்பட்டுள்ளது .முதல் குலோத்துங்கன் 50 ஆண்டுகள் வரை ஆட்சிபுரிந்துள்ளான் .இரண்டாம் குலோத்துங்கன் 17 ஆண்டுகள் வரையிலும் மூன்றாம் குலோத்துங்கன் 40 ஆண்டுகள் வரையிலும் ஆட்சிபுரிந்துள்ளனர். (5) இக்கல்வெட்டு 49 வது ஆட்சியாண்டைக் குறிப்பதால், இக்கல்வெட்டு முதல் குலோத்துங்கனுடையது என அறியலாம். 2)ARE134/1895 S.I.I. Vol.5No:698 இக்கல்வெட்டு குலோத்துங்கனின் 49-ம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட ஒரு நுந்தா விளக்கு தானத்தைப் பற்றி கூறுகின்றது. இக்க்ல்வெட்டும் 49 வது ஆட்சியாண்டினைக் குறிப்பிடுவதால் இக்கல்வெட்டும் முதல் குலோத்துங்கனுடையது என அறியலாம். 3)ARE279/1907 S.I.I. Vol.23 No:279 இக்கல்வெட்டு குலோத்துங்கனின் 41-ம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் இறைவனுக்கு ஒரு திருமஞ்சனக் குடம் வழங்க வைக்கப்பட்ட ஒரு முதலீட்டைப் பற்றி பேசுகின்றது. இக்கல்வெட்டு 41 வது ஆட்சியாண்டைக் குறிப்பதால், இதுவும் முதல் குலோத்துங்கனுடையது என அறியலாம். 4)ARE281/1907 S.I.I.Vol.23.No:281 இக்கல்வெட்டு குலோத்துங்கனின் 41-ம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் கோயிலில் ஒரு சந்தி விளக்கு எரிக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டும் 41 வது ஆட்சியாண்டைக் குறிப்பதால், இதுவும் முதல் குலோத்துங்கனுடையது என அறியலாம். 5)ARE308/1907 S.I.I. Vol.23 No:308 இது ஒரு முழுமையான கல்வெட்டு அல்ல.ஒரு வரி மட்டுமே உள்ளது. அவ்வரியில் குலோத்துங்கனின் 9-ம் ஆட்சியாண்டில் கோயில் நிலக்காணி பெற்ற பாணன் இருமுடிச்சோழன் பிரானான அசைங்கலப் பேரயன் என்பவன் திருவிடைமருதூர் கோயிலில் பாடவும் என்ற செய்தி மட்டும் வெளிப்படுகின்றது. இக் கோயிலில் மெய்கீர்த்தி உள்ள இரண்டாம் குலோத்துங்கனின் 9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு (ARE141/1895 S.I.I. Vol.5 No705) ஒன்று பாணன் இருமுடிச்சோழன் பிரானான அசைங்கலப் பேரயன் என்பவனுக்கு இக் கோயிலில் பாடவும் இக் கோயில் தேவரடியார்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்குவும் ஊதியமாக தினம் ஒரு கலம் நெல் வருவாய் வரக்கூடிய நிலம் காணியாகவும் குடியிருக்க ஒரு மனையும் வழங்க மன்னனின் ஆணையைப் பற்றித் தெரிவிக்கின்றது. மேற்கண்ட கல்வெட்டும் 9-ம் அட்சியாண்டையும் பாணன் இருமுடிச்சோழன் பிரானான அசைங்கலப் பேரயன் பெற்ற நிலக் காணியையும் தெரிவிப்பதால் இக் கல்வெட்டு இரண்டாம் குலோத்துங்கனுடையது என அறியலாம். மேற்கண்ட 5 கல்வெட்டுகளில் முதல் குலோத்துங்கன் -------------------- 4 இனி இன்னார் என்று அடையாளப்படுத்தும் மெய்கீர்த்தி இல்லாமல் அரசர்களின் ஆணையைத் தெரிவிக்கும் கோனரின்மைகொண்டான் என்று பொதுப்பெயரோடு இருக்கும் கல்வெட்டுகளை ஆராய்வோம். (வளரும்). அடிக்குறிப்புகள் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |