![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [184 Issues] [1822 Articles] |
Issue No. 184
![]() இதழ் 184 [ மே 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 人もをし 人も恨めし あぢきなく 世を思ふゆゑに 物思ふ身は கனா எழுத்துருக்களில் ひともをし ひともうらめし あぢきなく よをおもふゆゑに ものおもふみは ஆசிரியர் குறிப்பு: பெயர்: பேரரசர் கோதொபா காலம்: கி.பி. 1180-1239. ஜப்பானில் சாமுராய்களின் ஆட்சி தொடங்கியபோது அரசராக இருந்தவர் இவர். இவரது அண்ணன் அந்தொக்கு கெம்ப்பெய்ப் போரில் கொல்லப்பட்டுவிட, தனது 3வது வயதிலேயே அரசராகிவிட்டார். இத்தொடரின் 93வது பாடலில் (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!) பேரரசர் கோதொபாவின் வரலாறு கூறப்பட்டுள்ளது. கி.பி. 1221ல் ஒக்கி தீவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் இலக்கியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பத் தொடங்கினார். ஷின் கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுத்தவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். 18 ஆண்டுகள் அத்தீவில் வாழ்ந்த பின்னர் கி.பி. 1239ல் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக கோதொபாவின் கொகுதென் என்றொரு தனிப்பாடல் திரட்டு இடம்பெற்றுள்ளது. பாடுபொருள்: முதுமையில் வாட்டும் தனிமை பாடலின் பொருள்: சில நேரங்களில் மனிதர்களை நேசிக்கிறேன். சிலநேரங்களில் வெறுக்கிறேன். என் ஆசைகள் நிறைவேறுவது என் கையில் இல்லை என்று தெரிந்தாலும் அவை பகல் கனவாகப் போவது என்னை வருத்துகிறது. முதுமையின் வலியை உணர்த்தும் ஓர் எளிய பாடல். ஓசை நயத்துக்காக இப்பாடல் விதந்தோதப்பட்டது. முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் ஒரே வாய்ப்பாடு கொண்டு ஒன்றுபோல் ஒலிக்குமாறு இயற்றப்பட்டிருக்கின்றன. வெண்பா: விருப்பம் சிலவாகக் காய்தல் பலவாய்ச் சுருங்கப் பகரின் நிலையா - உருவமும் ஆசையும் கைகூடா தேங்கிடும் ஏக்கமும் ஆகும் பகலின் கனவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |