http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[184 Issues]
[1822 Articles]
Home About US Temples Facebook
Issue No. 184

இதழ் 184
[ மே 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

Sanjusangen-do – Kyoto, Japan
Shinto (神道) – Japan’s Indigenous Religion
Buddhism in Japan
தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு 2
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் -2
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 6
ஜப்பானியப் பழங்குறுநூறு - 100 (மீண்டு(ம்) வருமோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 99 (துயர்சூழ் உலகில் தனிமை)
இதழ் எண். 184 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 99 (துயர்சூழ் உலகில் தனிமை)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
人もをし
人も恨めし
あぢきなく
世を思ふゆゑに
物思ふ身は

கனா எழுத்துருக்களில்
ひともをし
ひともうらめし
あぢきなく
よをおもふゆゑに
ものおもふみは

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் கோதொபா

காலம்: கி.பி. 1180-1239.

ஜப்பானில் சாமுராய்களின் ஆட்சி தொடங்கியபோது அரசராக இருந்தவர் இவர். இவரது அண்ணன் அந்தொக்கு கெம்ப்பெய்ப் போரில் கொல்லப்பட்டுவிட, தனது 3வது வயதிலேயே அரசராகிவிட்டார். இத்தொடரின் 93வது பாடலில் (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!) பேரரசர் கோதொபாவின் வரலாறு கூறப்பட்டுள்ளது. கி.பி. 1221ல் ஒக்கி தீவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் இலக்கியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பத் தொடங்கினார். ஷின் கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுத்தவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். 18 ஆண்டுகள் அத்தீவில் வாழ்ந்த பின்னர் கி.பி. 1239ல் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக கோதொபாவின் கொகுதென் என்றொரு தனிப்பாடல் திரட்டு இடம்பெற்றுள்ளது.

பாடுபொருள்: முதுமையில் வாட்டும் தனிமை

பாடலின் பொருள்: சில நேரங்களில் மனிதர்களை நேசிக்கிறேன். சிலநேரங்களில் வெறுக்கிறேன். என் ஆசைகள் நிறைவேறுவது என் கையில் இல்லை என்று தெரிந்தாலும் அவை பகல் கனவாகப் போவது என்னை வருத்துகிறது.

முதுமையின் வலியை உணர்த்தும் ஓர் எளிய பாடல். ஓசை நயத்துக்காக இப்பாடல் விதந்தோதப்பட்டது. முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் ஒரே வாய்ப்பாடு கொண்டு ஒன்றுபோல் ஒலிக்குமாறு இயற்றப்பட்டிருக்கின்றன.

வெண்பா:

விருப்பம் சிலவாகக் காய்தல் பலவாய்ச்
சுருங்கப் பகரின் நிலையா - உருவமும்
ஆசையும் கைகூடா தேங்கிடும் ஏக்கமும்
ஆகும் பகலின் கனவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.